| தமிழ் இலக்கிய வரலாறு - பத்தொன்பதாம் நூற்றாண்டு | 291 |
இலக்கணச் சுருக்க வினாவிடை இலக்கணச் சுருக்க வினா விடையைத் திருத்தணிகை விசாகப்பெருமாளையர் 1828-இல் எழுதினார். இந்நூலின் சிறப்புப் பாயிரம், இந்நூலாசிரியர்க் கிளவலாகிய திருத்தணிகை சரவணப் பெருமா ளையராற் சொல்லப்பட்டது. “நிலம்பெறு நரர்க்கரு ணிலைமுதற் கடவுள் பலம்பெற வருளிய பற்பல மொழிகளுள் வடக்கின்மா வேங்கட வரையுந் தெற்கொடு குடக்கிற் குணக்கி னீள்குதிரை நாலையு மெல்லை யெனத்திக ழிடத்து மொழியாகி 5 யில்லை யிதற்கிணை யெனக்கெழு தகைமையின் வழுத்தற் சிறப்பொடு வளர்தமி ழிலக்கண மெழுத்துச் சொற்பொருள் யாப்பணி யைந்து நூற்பா விலுமவை நனுகு மினத்திலு நூற்பா விலும்பெற நுவன்றுள வலகில 10 வொன்றா யினுமமை வுறவுணர் தற்கெளி தன்றே கூரிய ரல்லார்க் காதலின் யாவரு முணரவவ் வைந்தையுஞ் சுருக்கி மேவரும் வினாவும் விடையு மாகத் தகவி னல்லுரை வாசகத்தி னவில்கெனாச் 15 சுகவள நிறைதரு தொண்டநா டதனிற் கச்சிக் கீரைங் கடிகையின் வடகீழ்ப் பச்சிளஞ் சாலி பரூஉக்கழை யாமெனக் கழைகமு காமெனக் கலிமடற் பாளைத் தழைதரு கமுகு தாழையா மெனமே 20 லெழுந்துயர்ந் தண்மினோர்க் கிறும்பூது விளைக்குங் கொழும்புனன் மருதக் கூவமா நகரோ னோமக் கனலிக லுகப்பொரு சினக்கன லேமக் கனல்செயு மிவர்க்குமற் ரெவர்க்கு முதரக் கனலவித் தோம்புறு வளங்கூர் 25 மதுரத் திலகுணா வகைசெய லானா வறன்கடைக் கழிவுகா ணரும்பெற லுழவுத் திறன்கடைப் பிடித்திடு திருத்தகு குலத்தினன் |