| 292 | மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் - 16 |
கழைமொழி மங்கையர் கண்ணெனும் பகையினம் விழையர ணாமிவண் மேவிப் பொருதுமென் 30 றணிநிரை யுற்றிருந் தாங்குபைங் குவளை மணிமல ரொலியலார் வண்புய வரையின னுருவொடு மிருந்திகழ் வுறாதி வன்முன மருவ மெய்தியது நன்றாயதென் றநங்கன் கருதியுளத் தழுக்கறுப்ப நோக்கி னர்க்கெலா 35 மிருவிழிக் கூணெனு மெழினிறை யுருவினன் றக்கவர் நாப்பணோர் தான்சிறந் துறுமவை யொக்குமென விலையுயர் பலமணிகளி னடுவ ணொருபெரு நாயக மணியுடைச் சுடர்விரி மதாணி துயல்வரு மார்பினன் 40 முத்தமிழ்ப் புலமையின் முந்திய நாவலர் புத்தமிழ் தெனச்சுவை பொழிதர வகமலர்ந் துகந்துதற் புகழ்ந்த வொப்பரும் பாட்டொடு திகந்தமோ ரெட்டிலுஞ் சென்றொளிர் சீர்த்திய னிருவிசும் பிறைவனுக் கிறைவனா தலுமொரு 45 பொருளெனா தெண்குணப் புனிதனெம் பசுபதி யடியவர்க் கடியவ னாதலே பொருளென வொடிவற வுளத்தெழுந் தோங்குறு மன்பினன் திருமேனி வள்ளல் செய்பெருந் தவத்தா லொருமேனி கொண்டிவ ணுதித்தசெவ் வேளெனப் 50 பொருந்தோகை மேலுறீஇப் புலவரைப் போற்றித் தருந்திறன் ஞான சக்தியைத் தாங்கி யங்கமல வேதனைச் செருக் கடக்கி மங்கலில் பெரிய வரையடுத் துறைவோ னாவின் கிழத்தி நயந்துறை பவர்வயிற் 55 பூவின் கிழத்தி புகாளென லேனை யருக்கா மிவன்றனக் கன்றென விளங்குந் திருக்காமி மாலுரை செய்தன னாக நயத்தகு தொல்காப் பியநன் னூன்முத லியற்றமிழ் நூல்களி லினியன பலதழீஇ 60 திடமுள வழக்கொடு செய்யுளிற் சிலதழீஇ வடநூல் விதிசில வரத்தகு வனகொளீஇ |