தமிழ் இலக்கிய வரலாறு - கிறித்துவமும் தமிழும் | 69 |
ஸார்ஜண்ட் என்பவரால் எழுதப்பட்ட இப்புத்தகம் 1850-இல் பாளையங்கோட்டையில் அச்சிடப்பட்டது. இந்து சாதி விளக்கம் சார்ல்ஸ் சைமன் என்பவரால் எழுதி 1852-இல் சென்னையில் அச்சிடப்பட்டது. க்ஷேத்திரக் கணிதம் முதலியன வீச கணிதம்12: இது யாழ்ப்பாணத்தவரான காரல்13 என்பவரால் 1855-இல் எழுதப்பட்டு, யாழ்ப்பாணத்தில் அச்சிற் பதிப்பிக்கப்பட்டது. க்ஷேத்திரக் கணிதம்: இது பாளையங்கோட்டைச் சர்ச் மிசன் உயர்தரப் பாடசாலையின் தலைமையாசிரியராயிருந்த டேவிட் சாலமன் என்பவரால் எழுதப்பட்டது. 1859-இல் அச்சிடப்பட்டதாகத் தெரிகிறது. க்ஷேத்திரக் கணிதம்14 ஆங்கிலத்திலும் தமிழிலும் எழுதப் பட்ட இந் நூல் 1899-இல் சென்னையில் அச்சிடப்பட்டது. எச். ஹாலிம், எம்.டி. அடைக்கலம் என்பவர்களால் எழுதப்பட்டது. இரண்டு புத்தகங்கள்15 கனம் ஜி.யு. போப் ஐயரவர்களால் அச்சிற் பதிப்பிக்கப்பட்டன. இவை யாரால் தமிழில் மொழிபெயர்க்கப்பட்டன என்பது தெரியவில்லை. க்ஷேத்திரக் கணிதம்16: இது ஸ்ப்ராட்17 என்பவரால் பாளையங் கோட்டையில் அச்சிடப்பட்டது. நில அளவை நூல்18: இஃது 1858-இல் அச்சிடப்பட்டது. மொழி பெயர்ப்பாளர் இன்னார் என்று தெரியவில்லை. இயற்கைப் பொருள் நூல், பிராணி நூல் முதலியன பலவகைத் திருட்டாந்தம்19: இது பொது அறிவு நூல். கனம் இரேனியுஸ் ஐயரால் எழுதிப் பாளையங்கோட்டை அச்சுக்கூடத்தில் அச்சிடப்பட்டது. ஊர்திரி விலங்கியல் (1836-வருசம்)20,வனவிலங்கியல்21 மச்சவியல்: இவை நாகர்கோயில் அச்சுக்கூடத்தில் அச்சிடப்பட்டன. |