| 102 | மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் - 19 |
திருநல்லூர்ச் சிற்ப உருவத்தைப்போலவே இந்தக் களக்காட்டுச் சிற்பமும் கலைப்பண்புடன் எழிலாக அமைந்து காட்சிக்கும் கருத்துக்கும் இன்பம் பயக்கின்றது. இவ்விரு உருவங்களும் சாத்திரக் கருத்தை மிகத் தெளிவாகப் புலப்படுத்துகின்றன. களக்காட்டுச் சிற்பம் திருநல்லூர்ச் சிற்பத்தைவிடக் காலத்தினால் சற்றுப் பிற்பட்டது. “ இடங்கொண்ட சக்தியும் எந்தை பிரானும் நடங்கொண்டு நின்றமை யானும் அறிந்தேன்; படங்கொடு நின்றஇப் பல்லுயிர்க் கெல்லாம் அடங்கலும் தாமாய் நின்றாடு கின்றாரே.” (திருமந்திரம்) அடிக்குறிப்புகள் 1. சடைமுடி அவிழாமல் இருப்பதைக் கொண்டு சடைகட்டி நடராசர் என்று இவ்வுருவத்திற்குப் பெயர் வழங்குகிறார்கள். |