பக்கம் எண் :

நேமிநாதம் - நந்திக் கலம்பகம் - பிறநூல்கள்33

இல்லறத்தார்க்குரிய தசதர்மம்

குரு வணக்கம்

முறைபொறியில் மறைநீங்கி மூவுலகிற் பொருள்களெலாங்
குறைவின்றி யொருங் குணர்ந்த குணதரன்சே வடிவணங்கி
நிறையுடைய மாதவரு மேனோரு நின்றுவப்ப
வறைகுவன் தசதன்ம மறநெறிய தியல்பினால்,      1
குளிர்நாவற் பரதத்துக் குருநாட்டுச் சுசிமைகோன்
களியானை யரிவண்ணன் காதலிள மகளிரொடு
மருளாழி யான் கணத்துக் கிறைவன்றன் னடிவணங்கி
விளியாத மனை யறத்தை விரிக்கு மென் றுரைத்தனனே.      2

இல்லறத்தார்க்கு அணுவிரதம்

ஆற்றிய நல்விரதத் தரசனுந் தேவியரு
மேற்றுமின் னடிகளெனக் குரியனதா மென்றிறைஞ்சிக்
கூற்றுவனைக் குதித்துயர்ந்த கோட்டமில் சீர் மாதவரு
மேற்றினா ரணுவிரத மில்லறத்தாற் குரியனவே.      3

இல்லறத்தார்க்குரிய பத்து கடமைகள்

கொல்லாமை பொய்யாமை கள்ளாமை காமத்தை
யொல்லாமை யொண்பொருளை வரைதலோ டிவைபிறவும்
பொல்லாத புலசுதேன்கள் ளிருளுண்ணா நிலைமையொடு
நல்லாரைப் பணிவதுவும் நாமுறையே பயனுரைப்பாம்.      4

1. கொல்லா விரதத்தின் பயன்

பல்லார்தற் பணிவதுவும் பகைகெடத்தாம் பெருகுதலு
மில்லார்க்கொன் றீவதுவும் யினியெனவே நுகர்வதுவும்
நல்லார்கண்டு வப்பதுவும் நலிவிலா தின்புறலும்
கொல்லாத நல்வி ரதங் காத்ததன் பயனாகும்.      5