| மகேந்திர விக்கிரமவர்மன் இயற்றிய |
| மத்த விலாசம் |
| (நாந்தி பாடியவுடன் சூத்திரதாரர் அரங்கத்திற்கு வருகிறார்.) |
சூத்திரதாரர்: | பேச்சு, ஆடல், உடை, உருவம், குணம், மெய்ப்பாடு இவைகளைத் தன்னிடத்தே கொண்டுள்ள, திப்பிய னாகிய காபாலியின் தாண்டவம், மூவுலகத்திலும் போற்றப்படுகின்றது. இத்தாண்டவத்தைக் காண்ப வனும் அக்காபாலியே. அவனுடைய அளவுகடந்த அகண்ட அருளானது இந்த உலகமாகிய பாத்திரத் தில்1பரந்து நிறைவதாக. |
| புதிய நாடகத்தை நடிக்கும்படிச் சபையோர் எங்களை நியமித்திருக்கிறார்கள். இளையாள் மீது கோபங் கொண்டிருக்கிற என்னுடைய மூத்த மனைவியின் கோபத்தை தணிப்பதற்கு இது ஒரு நல்ல வாய்ப்பு. அவளிடம் போகிறேன். (அணியறையை நோக்கி) ஆரியே! இங்கு வருக. (கடிகை வருகிறாள்.) |
நடிகை: | (சினத்துடன்) ஐயா! பௌவன குணபர மத்த விலாசப் பிரஹசனத்தை2 என்னிடம் விளையாட வந்து விட்டீரோ? |
சூத்திர: | ஆமாம். அதுதான். |
நடிகை: | அப்படியானால், அதை தாங்கள் யாரிடம் ஆசை கொண்டு இருக்கிறீர்களோ அவளிடம், போய் விளையாடுங்கள். |
சூத்திர: | உன்னோடு ஆடும்படித்தான் எனக்குக்கட்டளை. |
நடிகை: | அப்படி அவள் உமக்குக் கட்டளையிட்டாளோ? |
சூத்திர: | ஆமாம். இந்த ஆட்டத்தில் நீ நடித்தால் சபையோரின் |
|