தேவ: | ஆமாம் ஐயா. நீர் சொல்லுவது முழுவதும் சரியே. உலகத்துக்கு நல்லதையே செய்கிற சிவபெருமான், உலகத்தை ஒரு போதும் அழிக்க மாட்டார். | | (ஒருவரை யொருவர் கன்னத்தில் தட்டிக் கொள்கிறார்கள்.) |
காபாலி: | அம்மணீ! பிக்ஷாந்தேஹி! |
(உள்ளிருந்து |
ஒரு குரல்: | இதோ இதை வாங்கிக் கொள், ஐயா.) |
காபாலி: | இதோ பெற்றுக் கொள்கிறேன். தேவசோமா! என்னுடைய கபால பாத்திரம் எங்கே? |
தேவ: | அதைக் காணவில்லையே! |
காபாலி: | (யோசித்து) அந்தக் கள்ளுக்கடையில் அதை மறந்து வைத்துவிட்டோம் போலிருக்கிறது. நல்லது. அங்கே போய்ப் பார்ப்போம். |
தேவ: | அன்போடு அளிக்கும் பிச்சையை வாங்கா மலிருப்பது முறையல்லவே. இப்போது என்ன செய்வது?7 |
காபாலி: | ‘ஆபத்தர்ம’ப்படி செய். இந்த மாட்டுக் கொம்பில் வாங்கிக் கொள். |
தேவ: | அப்படியே செய்கிறேன். |
(பிச்சையை மாட்டுக் கொம்பில் பெற்றுக் கொள்கிறாள். பிறகு, இருவரும் சென்று கபால பாத்திரத்தைச் தேடுகிறார்கள்.)