| பாசு: | இருவரும் சொல்லுவது நியாயமாக இருக்கிறது. இவர்களுக்கு எப்படி நியாயம் தீர்ப்பது? |
| பௌ. பிக்கு: | புத்தர் உபதேசங்களைப் பின்பற்றி ஒழுகும் ஒரு பௌத்த பிக்கு, ஒரு மதுக்கிண்ணத்தை எடுக்க என்ன நியாயம் இருக்கிறது? |
| பாசு: | ‘பிரதிக்ஞா மாத்திரத்தினால் ஒன்றும் சித்திக்காது என்று சொல்லுகிறார்களே. மதுக்கிண்ணம் உமக்கு வேண்டியதில்லை என்பதனாலேயே நீர் அதை எடுக்கவில்லை என்று எப்படி அறிவது?? |
| காபாலி: | பிரத்தியக்ஷப் பிரமாணம் இருக்கும்போது காரண காரியங்களைப் பற்றிப்பேசுவது பயனற்றது. |
| பாசு: | பிரத்தியக்ஷப் பிரமாணம் என்று நீர் சொல்லுவதன் கருத்து என்ன? |
| தேவ: | ஐயா! கபால பாத்திரத்தை அவர் போர்வையில் மறைத்து வைத்திருக்கிறார். |
| பாசு: | அப்படித்தானா, ஐயா! |
| பௌ. பிக்கு: | இந்த மண்டை மற்றவருடையதன்று. |
| காபாலி: | அப்படியானால், அதைக்காட்டு. |
| பௌ. பிக்கு: | காட்டுகிறேன். (காட்டுகிறான்) |
| பாசு: | பாருங்கள், மகேசுவரர்களே! பாருங்கள். இந்தப் பௌத்த பிக்குவின்மேல் இந்தக் கபாலியின் அநியாயமாக அவதூறு சுமத்துவதைப் பாருங்கள். |
| பௌ. பிக்கு: | பிறர்பொருளை, அதற்குரியவர் கொடுத்தாலன்றி அதை எடுக்கக்கூடாது என்பது எங்கள் மதக் கட்டளை. பொய் பேசக்கூடாது என்பது எங்கள் மதக் கட்டளை. காமவிழைவு கூடாது என்பது எங்கள் சமயக்கட்டளை. உயிரைக்கொல்லக்கூடாது என்பது எங்கள் சமயக்கட்டளை. குறித்தகாலம் தவறி உணவு கொள்ளக்கூடாது என்பது எங்கள் சமயக்கட்டளை. தம்மம் சரணங் கச்சாமீ. |