| பதிப்பு : மனோன்மணியம் - நாடகம் | 113 |
| | | ஈறிலாச் சகரர் எண்ணில ராமெனப் பொன்னேர் பூட்டி நின்றவர் தம்மைப் | | | 130 | போற்றிய குரவையே பொலிதரு மொருசார்; சேற்றிடை யடர்ந்த நாற்றடைத் தெடுக்குநர் நாறுகூ றாக்குநர் வேறுபுலம் படுக்குநர் நடுபவர் களைப்பகை யடுபவ ராதியாக் கள்ளுண் கடைசியர் பள்ளும் பாட்டும் | | | 135 | தருமொலி பரந்தே தங்குவ தொருசார்; குன்றென அரிந்து குவித்திடுஞ் செந்நெற் போர்மிசைக் காரா காரெனப் பொலியக் கறங்குங் கிணைப்பறை முழவுடன் பிறங்கும் மங்கல வொலியே மல்குவ தொருசார்; | | | 140 | தூவியால் தம்முடல் நீவிடில் சிரிக்குஞ் சிறுமிய ரென்ன அச் செழுநில நங்கை உழுபடைக் கொழுமுனை தொடுமுனங் கூசி உடல்குழைந் தெங்கும் உலப்பறு செல்வப் பயிர் மயிர் சிலிர்த்துப் பல்வளம் நகுவள், | | | 145 | எனிலினி யானிங் கியம்புவ தென்னை? அனையவந் நாடெலாம் அரச! மற் றுனக்கே உரித்தென அங்குள பாடையே உரைக்கும். |
ஈறிலா - முடிவு இல்லாத. சகரர் - சகர சக்கரவர்த்தியின் பிள்ளைகள். 128-129 அடிகள், சகர சக்கரவர்த்தியின் பிள்ளைகள் நிலத்தை உழுதது போல, உழவர் ஏரைப் பூட்டி உழுதனர் என்பது கருத்து. சகர குமரர்கள் நிலத்தை ஆழமாக உழுதபடியால் சாகரம் (கடல்) உண்டாயிற்று என்பது புராணக் கதை. பொன் ஏர் - அழகான ஏர். குரவை - குரவைப் பாட்டு. இது குரவைக் கூத்து ஆடும்போது பாடும் பாட்டு. நாறு - நாற்று. களைப் பகை - களையாகிய பகையை. அடுபவர் - கெடுப்பவர், கொல்பவர். கடைசியர் - வயல்வேலை செய்யும் பெண்கள். பள்ளு - ஒருவகைப் பாட்டு. தமிழ்ப் பிரபந்த நூல்களில் ஒன்று. கிணைப்பறை - மருத நிலத்துப் பறை. தூவி - இறகு. நீவுதல் - தடவுதல். உலப்பறு - வற்றாத, குறையாத. பாடை - பாஷை, மொழி. “உனக்கே உரித்தென அங்குள பாடையே உரைக்கும்” என்பது, நாஞ்சில் நாடு பாண்டியருக்கே உரியது என்பதை அந்நாட்டில் |