| 114 | மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் - 20 |
| | | சின்னா ளாகச் சேரனாண் டிடினும் இந்நாள் வரையும் அந்நாட் டுரிமை | | | 150 | கொடுத்தது மில்லை, நாம் விடுத்தது மில்லை. பண்டைநம் உரிமைபா ராட்டிட வென்றே கண்டனன் இப்புரி, ஆயினும் அதுஇம் மணத்திற் குதவியாய் வந்தது நன்றே. ஆதலின் அவன்பால் தூதரை விடுத்துக் | | | 155 | கிழமையும் பழமையும் எடுத்துக் கிளத்தில் நாட்டிய நமது நகர்வலி கருதி மீட்டும் விடுப்பினும் விடுப்பன். அன்றி வாதமே பலவும் ஓதினும் ஒருவிதம் ஒப்புர வாகா தொழியான் பின்னர், | | | 160 | அந்நியோந் நியசமா தானச் சின்னம் ஆகவோர் விவாக மாயின் நன்றெனக் குறிப்பாற் பொதுவாய்க் கூறிடின், மறுத்திடா னுடன்மண முடிக்குதும் நன்றே. 8 | | ஜீவ: | | மெத்தவுங் களித்தோம்! உத்தமோ பாயம் | | | 165 | இதுவே! குடில! இதனால் வதுவையும் நடந்ததா மதித்தேம் மனத்தே. 9 | | குடி: | | அப்படி யன்றே! செப்பிய உபாயம் போது மாயினும் ஏகுந் தூதுவர் திறத்தாற் சித்தி யாகவேண் டியதே. | | | 170 | வினைதெரிந் துரைத்தல் பெரிதல, அஃது தனை நன் காற்றலே யாற்றல். அதனால், |
வழங்குகிற தமிழ்மொழியே சான்று பகரும் என்னும் கருத்துடையது. தமிழ்நாடாக இருந்த சேர நாட்டில், பிற்காலத்திலே தமிழ்மொழி மலையாள மொழியாக மாறிய பிறகும் நாஞ்சில்நாட்டில் தமிழ் மொழியே வழங்குகிறது. கண்டனன் - உண்டாக்கினேன். இப் புரி - இந்தக் கோட்டை. கிழமை - உரிமை. கிளத்தில் - சொன்னால். ஓதினும் - சொன்னாலும். ஒப்புரவு - இசைந்து பழகுதல். அந்நியோந்நியம் - நெருங்கிப் பழகுதல். திறத்தால் - திறமையினால். ஆற்றலே - செய்வதே. ஆற்றல் - வல்லமை. |