| | | அன்புங் குடிமைப் பிறப்பும் அரசவாம் பண்பும் அறிவும் பரவுநூ லுணர்வும் தூய்மையும் மன்னவை யஞ்சாத் திண்மையும் |
| | 175 | வாய்மையுஞ் சொல்லில் வழுவா வன்மையுந் துணிவுங் காலமுங் களமுந் துணியுங் குணமும் மந்திரத் தலைவர் துணைமையும் உடையனே வினையாள் தூதனென் றோதினர். அன்ன தூதரை யனுப்பின் மன்னவ! |
| | 180 | உன்ன தெண்ண முறுமே யுறுதி; அன்றெனி லன்றே! அதனால் வென்றிவை வேலாய் விடுவாய் தெரிந்தே. 10 |
| ஜீவ: | | அத்திறம் முற்றும் ஒத்தவ னாய்நமக் குரிமை பூண்டநின் அருமை மகன்பல |
| | 185 | தேவனே யுள்ளான், மேவலர் பலர்பால் முன்னம் பன்முறை தூதிலும் முயன்றுளான், அன்னவன் றன்னை அமைச்ச! ஏவிடத் தயையா யிசைவாய் நீயே. 11 |
| குடி: | | ஐய மதற்கென்? ஐய! என்னுடல் |
| | 190 | ஆவியும் பொருளும் மேவிய சுற்றமும் நினதே யன்றோ! உனதே வலுக்கியான் இசையா தொழிவனோ! வசையறு புதல்வன் பாலியன் மிகவும்; காரியம் பெரிது |
| ஜீவ: | | பெரிதென்? அங்கவன் பேசவேண் டியவெலாம் |
| | 195 | விரிவா யெடுத்துநீ விளம்பி விடுக்கில், நலமா யுரைப்பன் நம்பல தேவன். வருத்தம் இவையெலாங் கருத்தி லுணராது உரைத்தனர் முனிவர். உதிய னவைக்கே யோசனை யின்றி நடேசனை யேவில் |
| | 200 | நன்றாய் முடிப்பனிம் மன்றல் என்றார். அவர்கருத் திருந்த வாறே! 12 |
அரசவாம் - அரசு + அவாம். அவாம் - அவாவும், விரும்பும், மேவலர் - பகைவர். ஏவிட - அனுப்ப. பாலியன் - இளைஞன். உதியன் - சேரன்.