| குடி: | | ஈதோ அனுப்பினேன்; இன்றிம் மாலையில் தூது செல்வான் தொழுதுன் அநுமதி பெறவரு வான்நீ காண்டி; |
| | 230 | இறைவ! மங்கல மென்றுமுன் னடிக்கே! 15 |
| | (குடிலன் போக) |
| ஜீவ: | | (தனதுள்) |
| | நல்லது! ஆ! ஆ! நமது பாக்கியம் அல்லவோ இவனை நாம் அமைச்சனாய்ப் பெற்றதும்? என்னே! இவன்மதி முன்னிற் பவையெவை?(சில பிரபுக்களும் நாராயணனும் வந்து வணங்க) |
| | (பிரபுக்களை நோக்கி) |
| | வம்மின், வம்மின், வந்து சிறிது |
| | 235 | கால மானது போலும், நமது மந்திரி யுடன்சில சிந்தனை செய்திங்கு இருந்தோம் இதுவரை, குடிலன் மிகவும் அருந்திறற் குழ்ச்சியன். |
| முதற் பிரபு: | | அதற்கெ னையம்? சுரகுரு பிரசுரன் முதலவர் சூழ்ச்சி |
| | 240 | இரவலா யிவன்சிறி தீந்தாற் பெறுவர். எல்லை யுளதோ இவன்மதிக் கிறைவ! வல்லவன் யாதிலும். |
| நாராயணன்: | | (தனதுள்) |
| | நல்லது கருதான வல்லமை யென்பயன்! |
| 2-ம் பிரபு: | | மன்னவ! அதிலும் உன்தொல் குலத்தில் உன்திரு மேனியில் |
| | 245 | வைத்த பரிவும் பத்தியு மெத்தனை! குடிலனுன் குடிக்கே யடிமை பூண்ட |
கால வளம்பனம் - காலம் தாழ்த்தல். திறல் - வலி. சுரர் - தேவர். சுரகுரு - தேவர்களின் குருவாகிய பிரகஸ்பதி; வியாழன் என்றும் கூறுவர். பிரசுரன் - அசுர குருவாகிய சுக்கிராச்சாரி. திருமேனி - அரசனைக் குறிக்கும் சொல். மலையாள நாட்டினர் அரசனைத் திருமேனி என்று விளிப்பது வழக்கம். இந்நூலாசிரியர் மலையாள நாட்டில் வசித்து.