| 122 | மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் - 20 |
இரண்டாம் களம் இடம் : ஊர்ப்புறத்து ஒரு சார். காலம் :வைகறை. (நடராஜன் அருணோதயங் கண்டு நிற்க) (இணைக்குறள் ஆசிரியப்பா) | நடராஜன்: | | (தனிமொழி) பரிதியி னுதயம் பார்க்கக் கருதில் இவ்விடஞ் சாலவு மினிதே. உதயஞ் செவ்விதிற் கண்டுபின் செல்வோம் ஓவியத் தொழில்வலோன் நீவியக் கிழியில் | | | 5 | தீட்டுவான் புகுந்த சித்திரம், நீட்டுந் தூரியந் தொடத்தொடத் துலங்குதல் போல, சூரியன் பன்னிறக் கதிர்கள் தொடத்தொட உருவுதோன் றாவணம் ஒன்றாய்ச் செறிந்து கருகிருள் மயங்கிய காட்சி கழிந்து | | | 10 | சிறிது சிறிதா யுறுப்புகள் தெளியத் தோன்றுமித் தோற்றம் நன்றே! சூட்டைச் சேவல் சுரைக்கொடி படர்ந்தவவ் வீட்டுச் சியின்மேல் வீம்பாய் நடந்துபின் இருசிறை யடித்து நெடுவா யங்காந்து | | | 15 | ஒருமுறை கூவி உழையுளார் புகழ் |
பரிதி - பகலவன், சூரியன். உதயம் - சூரியன் புறப்படுவது. ஓவியம் - ஓவியக் கலை. நீவியக் கிழி - ஓவியம் எழுதுவதற்கு உபயோகப் படுத்தும் சீலை. கித்தான் துணி போன்றது. இதனை ஆங்கிலத்தில் Canvas என்பர். தீட்டுவான் - சித்திரம் எழுத, தூரியம் - ஓவியம் எழுதும் துகிலிகை. ஆங்கிலத்தில் Brush என்பர். செறிந்து - நெருங்கி. சூட்டைச் சேவல் - தலையில் கொண்டையையுடைய சேவற்கோழி. வீட்டுச்சி - வீட்டின் கூரை. இரு - இரண்டு, பெரிய. சிறையடித்து - சிறகை அடித்து. அங்காந்து - வாய் திறந்து. உழை உளார் - பக்கத்தில் உள்ளவர். |