| பதிப்பு : மனோன்மணியம் - நாடகம் | 121 |
| | 305 | விழிப்பா யிருக்கிற் பிழைப்பர்; விழியிமை கொட்டிற் கோடி பிறழுமே. கொட்டும் வாலாற் றேளும். வாயாற் பாம்புங் காலும் விடமெனக் கருதி யாவும் அடிமுதன் முடிவரை ஆய்ந்தா ராய்ந்து | | | 310 | பாரா ராளும் பாரென் படாவே? யாரையான் நோவ! அதிலுங் கொடுமை! அரசர்க் கமைச்சர் அவயவம் அலரோ? உறுப்புகள் தாமே உயிரினை யுண்ண ஒருப்படில் விலக்குவ ருளரோ? தன்னயம் | | | 315 | மறந்து மன்னுயிர்ச் சகமே மதித்தங் கிறந்தசிந் தையனோ இவனோ அமைச்சன்? குடிலன் செய்யும் படிறுகள் வெளியாப் பொய்யும் மெய்யும் புலப்பட உரைக்க என்றால், நோக்க நின்றார் நிலையில் | | | 320 | தோன்றுஞ் சித்திர வொளிபோ லியார்க்குஞ் சான்றொடு காட்டுந் தன்மைய வலவே. சித்திரப் பார்வை யழுந்தார்க் கெத்தனை காட்டினுங் கீறிய வரையலாற் காணார். என்செய? இனியான் எப்படிச் செப்புவன்? | | | 325 | நிந்தையா நடேசனைப் பேசிய குறிப்புஞ் சிந்தனை செய்ததாச் செப்பிய செய்தியும் ஓரில் யாதோ பெரிய உறுகண் நேரிடு மென்றென் நெஞ்சம் பதறும். என்னே யொருவன் வல்லமை! | | | 330 | இன்னும் பிழைப்பன் மன்னன் விழிக்கிலே. 17 (நாராயணன் போக) |
இரண்டாம் அங்கம்: முதற் களம் முற்றிற்று.
காலும் விடம் - விஷத்தை உமிழும், பாரார் - பாராதவர்கள். படிறு - வஞ்சகம், பொய். சித்திரப் பார்வை அழுந்தார்க்கு - ஓவியத்தைப் பார்க்கும் முறைப்படி பார்க்கத் தெரியாதவர்களுக்கு வரை - கோடு, கீறல். உறுகண் - துன்பம். |