| பதிப்பு : மனோன்மணியம் - நாடகம் | 129 |
| | | உள்ளப் பரப்பி லொருபுறத் தன்றி, பள்ளத் தாழ்ச்சியிற் பரிவும், கொள்கை விள்ளா முரணும், மெய்ம்மையில் தெளிவும், உள்ளார்; அவர்தம் உறுதிநீ யுணராய். | | | 130 | சுற்றிச் சுழலினுங் கறங்கொரு நிலையைப் பற்றியே சுழலும்; அப் படியலர் புருடர். கேடவ ருறுவதிங் காடவ ருருவுகொண் டலை தருங் கொடியஇவ் வலகைகள் வழியே. புருடரோ இவரும்! கருவுறுங் குழவிமெய் | | | 135 | மென்றிட நன்றெனக் கொன்றுதின் றிடுவர். அவாவிற் களவிலை, அன்போ அறியார். மணமும் அவர்க்கொரு வாணிகம்! அந்தோ! சீ! சீ! என்இத் தீயவர் செய்கை! மாசிலா வையகத் திவ்வுயிர் வாழ்க்கை | | | 140 | ஆம்பெருங் கடலுள் போம்மரக் கலனாம் ஆடவர் நெஞ்சம், அறத்துறை யகன்று நீள்திசை சுழற்று நிலையிலாக் காற்றாம் நிண்ணய மற்ற எண்ணம் இயக்கச் சென்றுழிச் சென்று நன்றறி வின்றி | | | 145 | அலையா வண்ணம், அறத்துறைக் குடாவில் நிலைபெற நிறுத்துநங் கூரமாய் பின்னுஞ் செய்வினை முயற்சியிற் பொய்வகைப் புன்னெறிக் கெற்றுண் டகன்று பற்றொன் றின்றி ஆசையாம் திசைதொறும் அலைந்து திரிந்து | | | 150 | கெடாவணங் கடாவிக் கெழுமிய அன்புசேர் அறப்பிடி கடைப்பிடி யாகக் காட்டிச் |
விள்ளா - விடாத, விண்டுபோகாத. கறங்கு - சுழல்வது, காற்றாடி. மரக்கலம் - படகு. நீள்திசை - பரந்த திசைகள். நிண்ணயம் - நிர்ணயம். இயக்க - செலுத்த. குடா - குடாக் கடல், குடாக்கடல்களில் கப்பல்கள் தங்குவது மரபு. நங்கூரம் - கப்பல்களை நிலையாக நிறுத்துவதற்காக நீருக்கடியில் பாய்ச்சப்படும் கருவி. எற்றுண்டு - மோதப்பட்டு. கடாவி - செலுத்தி. |