| பதிப்பு : மனோன்மணியம் - நாடகம் | 133 |
மூன்றாம் களம் இடம் : திருவனந்தையிற் சேரன் அரண்மனை. காலம் : காலை. (புருடோத்தமன் சிந்தித்திருக்க.) (நேரிசை ஆசிரியப்பா) | புருடோத்தமன்: | | (தனிமொழி) | | | | யார்கொலோ அறியேம்! யார்கொலோ அறியேம்! வார்குழல் துகிலோடு சோர மாசிலா மதிமுகங் கவிழ்த்து நுதிவேற் கண்கள் விரகதா பத்தால் தரளநீர் இறைப்ப | | | 5 | பரிபுர மணிந்த பங்கயம் வருந்துபு விரல் நிலங் கிழிப்ப வெட்கந் துறந்து விண்ணணங் கனைய கன்னியர் பலரென் கண்முன் னின்றங் கிரக்கினுங் கலங்காச் சித்தம் மத்துறு தயிரில் திரிந்து | | | 10 | பித்துறச் செய்தவிப் பேதை யார்கொலோ? எவ்வுல கினளோ? அறியேம். இணையிலா நல்வியும் நண்பும் நலனு முடையவள் யார்கொலோ? நாள்பல வானவே. ஆ! ஆ! விழிப்போ டென்கண் காணில்! - வீண்! வீண்! | | | 15 | பழிப்பாம் பிறருடன் பகர்தல். பகர்வதென்? |
1 முதல் 44 வரிகளில், புருடோத்தமன் கன்னிகை ஒருத்தியைக் கனவில் கண்டு காதல் கொண்டு அவளைப்பற்றித் தன் மனத்தில் சிந்திப்பது கூறப்படுகிறது. வார்குழல் - நீண்ட கூந்தல். துகில் - ஆடை, உடை. நுதிவேல்- கூர்மை யான வேல். விரகதாபம் - காதல் வேட்கை. தரளநீர்- முத்துப்போல் உதிரும் கண்ணீர். பரிபுரம் - சிலம்பு. பங்கயம் -தாமரைப்பூ போன்ற பாதம், உவமையாகுபெயர். வருந்துபு - வருந்தி. விரல் நிலம் கிழிப்ப -கால் விரலினாலே நிலத்தைக் கீற. விண் அணங்கு- தெய்வமகள். நவ்வி- அழகு. நண்பு - நட்பு, அன்பு. |