| முதற் சேவகன் | | செய்வதென்? செப்பீர். கைதவற் கியாமோ ஆறுதல் கூறுவம்? |
| 2-ம் சேவ: | | கூறலும் வீணே! |
| | | பெருத்த துயரிற் பேசும் தேற்றம் நெருப்பிடை நெய்சொரிந் தற்றே யென்பர். |
| 3-ம் சேவ: | | பணிந்தியாம் அருகே நிற்போம் அன்றித் துணிந்துமற் றதுதான் சொல்லுவர் யாவர்? |
| 4-ம் சேவ: | | நாரா யணரேல் தீரமாய் மொழிவர். |
| 3-ம் சேவ: | | மெய்ம்மை!மெய்ம்மை!விளம்புவர் செம்மையாய். |
| முதற் சேவ | | எங்குமற் றவர்தாம் ஏகினர்? உணர்வைகொல்? |
| 4-ம் சேவ: | | மங்கைவாழ் மனைக்குநேர் ஓடுதல் கண்டேன். |
| 2-ம் சேவ: | | சகிப்பளோ கேட்கில் தமியள் ... |
| 3-ம் சேவ: | | ஆயினும், |
| | | மகளால் அன்றி மன்னவன் தேறான். அதற்கே சென்றனர் போலும், ஆ! ஆ! |
| 2-ம் சேவ: | | நாரா யணரே நன்மதி உடையோர். |
தேற்றம் - தேறுதல் கூறுவது. அற்று -அத்தன்மையது. தமியன் - தனித்து இருப்பவள்.