| 2-ம் படை: | | ஆ! ஆ! அறியோம்! |
| நாரா: | | பலதே வன்படை அலவோ? |
| 2-ம் படை: | | ஆம்! ஆம்! |
| நாரா: | | மன்னவன்? |
| 2-ம் படை: | | நடுவே. |
| நாரா: | | வலப்புறம்? |
| 2-ம் படை: | | குடிலன். |
| நாரா: | | என்னையிக் குழப்பம் இடப்புறம்? |
| 2-ம் படை: | | ஏதோ! |
| நாரா: | | வருவது முருகன் போலும். முருகா! (முருகன் வர) |
| | 125 | வயப்பரி வீரரே! மன்னவர்க் கபஜயம், |
| | | (படைவீரரை நோக்கி) |
| | | இமைப்பள வின்கண் எய்தினும் எய்தும். இம்மெனும் முன்னநாம் எய்துவோம் வம்மின்! |
| முதற் படை | | வந்தனர் ஈதோ மற்றைய வீரரும். |
| நாரா: | | தந்தனம் உனக்கவர் தலைமை. நொடியில் |
| | 130 | வலப்புறம் செலுத்துதி. மன்னவன் பத்திரம். இருபுறம் காக்குதும், வருகவென் அருகே! |
| | | (முருகன் காதில்) |
| | | குடிலனை நம்பலை. |
| முதற் படை: | | அடியேன் அறிவேன். |
| நாரா: | | அறிந்தவா றாற்றுதி! மறந்திடேல் மெய்ம்மை! வம்மின் வீரரே! வம்மின்! |
| | 135 | உம்வயின் உளதுநம் செம்மல துயிரே. 1 (யாவரும் விரைவாய்க் குதிரைமேற் செல்ல) |
வயப்பரி - வலிமையுள்ள குதிரை. அபஜயம் - தோல்வி. எய்தும் -அடையும், உண்டாகும். ஆற்றுதி - செய்வாயாக. செம்மலது உயிர் - அரசனுடைய உயிர்.