| | | (முதற்படைஞன் போக) |
| நாரா: | | ஆம்பொழு தழைப்போம். வாம்பரி அமர்மின். (கோட்டைமேல் உலாவி நின்று) |
| | | (தனதுள்) |
| | | அரும்படை இரண்டும் அதோ! கை கலந்தன. வரும்பழி யாதோ? மன்னவர்க் கேதோ? |
| | 100 | ஆவதிங் கறியேன்! ஜீவக! ஜீவகா! முற்றுநான் அறிவன்நின் குற்றமும் குணமும். குற்றமற் றென்னுள கூறற் குன்வயின்? வித்தையும் உன்பெருஞ் சத்திய விருப்பமும் உத்தம ஒழுக்கமும் எத்துணைத் தையோ! |
| | 105 | வறிதாக் கினையே வாளா அனைத்தும் அறியா தொருவனை யமைச்சா நம்பி! இன்னதொன் றன்றிமற் றென்பிழை உன்னுழை? மன்னவன் நல்லனா வாய்க்குதல் போல என்னுள தரியவற் றரியதிவ் வுலகில்? |
| | 110 | வாய்த்துமிங் குனைப்போல் வாணாள் வறிதாத் தீத்திறல் ஒருவன் சேர்க்கையால் வீதல் மண்ணுளோர் பண்ணிய புண்ணியக் குறைவே; சுதந்தரம் அறுவோர்க் கிதந்தீங் குண்டோ? கூறுவோர் அறிவின் குறைவே; வேறென்? |
| | 115 | அன்றியும் உன்மிசை நின்றிடும் பெரும்பிழை ஆயிரம் ஆயினும் தாய்மனோன் மணிநிலை கருதுவர் உன்னலம் கருதா தென்செய்வர்? வருவது வருக! புரிகுவம் நன்மை. |
| | | (2-ம் படைஞனை நோக்கி) |
| | | முருகன் வரவிலை? |
| 2-ம் படை: | | வருவன் விரைவில் |
| நாரா: | 120 | அதுவென் ஆ! ஆ! |
ஆம்பொழுது - வேண்டியபோது. வாம்பரி - தாவி ஓடுகின்ற குதிரை. உன்வயின் -உன்னிடத்தில் . வாளா - சும்மா. உன்னுழை - உன்னிடத்தில். வீதல் -அழிதல், சாதல்.