| | | நல்லனித் தலைவன். வல்லவர் இவரும். |
| முதற் படை | | ஈதோ நின்றனர்! |
| | | (காவற்படைகளை விலக்கி நிறுத்திக்காட்டி) |
| நாரா: | | போதுமோ இவர்கள்? |
| முதற் படை: | | போதும்! போதும்! |
| காவற் படைகள் | | போதுமே யாங்கள்... |
| நாரா: | | எண்ணுமின் நன்றா யேற்குமுன்! பின்புநீர் |
| | 85 | பண்ணும் தவறுநம் பாலாய் முடியும். |
| காவற் படை: | | தவிர்கிலம் கடமையில், சத்தியம், தலைவ! |
| நாரா: | | தகுதியன் றெனச்சிலர் சாற்றிய தொக்க மிகுபழி நீவிரும் மொழிவிரோ என்மேல்? |
| காவற் படை: | | மொழியோம் ஒன்றும். மொழியோம் நும்மேல். |
| நாரா: | 90 | சரி! சரி! ஆயின் தாங்குமின் காவல். பரிமற் றையர்க்கெலாம் உளவோ? |
| 3-ம் படை: | | ஓகோ! |
| 4-ம் படை | | பெரியதென் பரிபோற் பிறிதிலை. |
| நாரா: | | காணுதும். அணிவகுத் திவ்வயின் அமர்மின்! முருகா! மற்றைவா யிலிலும் மாற்றியிவ் விதம்யான் |
| | 95 | வைத்துள படையும் அழைத்திப் புறநீ நொடியினில் வருதி. |
| முதற் படை: | | அடியேன், அடியேன். |
ஏற்கும்முன்- கடமையை ஏற்றுக்கொள்ளும் முன்பு. நம் பால்- நம்மேல். சாற்றியது- சொன்னது. பரி -குதிரை.