| 4-ம் படை | | என்பெயர் சாத்தன். சுவாமி! |
| நாரா: | | ஓகோ! |
| | | எத்தனை பேருளர் இவ்வா யிலின்கண்? |
| முதற் படை | | பத்தைஞ் றுளர். மெத்தவும் உத்தமர். மிகுதிறத் தார். போர் விரும்பினர். இவர்தம் தகுதிக் கேற்ப தன்றிக் காவல். |
| நாரா: | 65 | பொறு! பொறு! முருகா! புரையற் றோர்க்குமற் றுறுபணி, இன்னதென் றுண்டோ? எதிலும் சிறுமையும் பெருமையும் செய்பவர்க் கன்றிச் செய்வினை தனக்கெது? மெய்ம்மையில் யாவும் திருத்தமாச் செய்தலே பொருத்தமுத் தமர்க்கு. |
| 2-ம் படை | | வேணுமென் றாயினும் எங்களை விடுத்தல் நாணமும் நோவுமாம் நாரா யணரே ! |
| நாரா: | | வேண்டுமென் றாரே விடுப்பர். சிச்சீ! அப்படி யேதான் ஆயினும் நமக்குக் கைப்படு கடமையே கடமை... |
| | | முருகா! |
| | 75 | எத்தனை பேரால் ஏலுமிக் காவல்? |
| முதற் படை | | நாலிலொன் றாயின் சாலவும் மிகுதி. |
| நாரா: | | அத்தனை வல்லவர் கொல்லோ? ஆயின் இத்தனை பேர்க்குள தொழிலெலாம் தம்மேல் ஏற்றிட வல்லரை மாற்றிநீ நிறுத்திக் |
| | 80 | காட்டுதி எனக்கு. |
| முதற் படை: | | காட்டுவன் ஈதோ! |
| | | (அணிவகுத்துக் காட்ட) |
| நாரா: | | (தனதுள்) |
வாயில் -கோட்டை வாயில், திறத்தார்-வலிமையுள்ளவர். புரையற்றோர்-குற்றமற்றவர். ஏலும்- இயலும், முடியும்.