| பதிப்பு : மனோன்மணியம் - நாடகம் | 285 |
| | | மனத்திடை மயக்கற மதித்துளை ஆயின், ஒழுங்கா யிவையெலாம் ஒழித்தியான் குறித்த மருங்கே அணைந்து வாழலே கருமம். வேறிலை தேறு மார்க்கம். | | | 100 | கூறுதி அதனால் உன்மனக் கோளே. 2 | | ஜீவ: | | ஐய!யான் உரைப்பதென்? அடுத்தவை | | | | (இவையெலாம்) | | | | கைவிடில் என்னுயிர் கழியும், அதனில் இன்றியான் பட்ட இகழ்ச்சி முழுதும் பொன்றிடப் பொருதுபின் பொன்றுதல் அன்றோ | | | 105 | சிறப்பது செப்புதி! சிறியேன் ஒருசொல் மறுத்தது பொறுத்தருள் மாதவக் கொழுந்தே! | | சுந்தர: | | சங்கரா! சற்றே தாதான் மியபலம்! வெங்கரா பிடித்தவை விடினும் விடுமே! நல்லது ஜீவக! நண்டெனும் புல்லிய | | | 110 | அற்பமாம் சிற்றுயிர் அரியதன் உடலையும் பிற்கிளைக் கிரையென வீந்தவை பேணல் கண்டும் புகழிற் கொண்டனை பிராந்தி. இவ்வுயி ரியலுல கியற்கையென் றெண்ணினேன். செவ்விதின் நின்னிலை தேர்ந்தபின் ஐயம் | | | 115 | வருவது. அதனால், மதிகுலம் வந்த ஒருமலர் நின்னுழை உள்ளது; தமிழர் ஆவோர் யார்க்கும் அஃதுரித் தாம்;நீ காவா யாகிற் காப்பதெம் கடனே. |
மருங்கு - இடம். மனக்கோள் - மனத்திற் கொண்டது தாதான்மியம் - ஒன்று மற்றொன்றாதல். செயற்கை வாசனை என்பது பொருள். குடிலனோடு பழகியதனால் ஏற்பட்ட குணம் என்பது பொருள். வெம்கரா - கொடிய முதலை. அடி 108. முதலைப்பிடி என்பது கருத்து. “மூர்க்கனும் முதலையும் கொண்டது விடா” என்பது பழமொழி. 109 - 111 அடிகள், நண்டு குஞ்சகளை ஈன்றவுடன் செத்துத் தன் உடம்பையே குஞ்சுகளுக்கு உணவாக அளிக்கிறது என்பது கருத்து. பிராந்தி - மயக்கம். ஒருமலர் - ஒரு பூ; என்றது மனோன்மணியை. |