பக்கம் எண் :

பதிப்பு : மனோன்மணியம் - நாடகம்319

2-ம் தோழி என்செய் கின்றனள் இப்போது ஏழை?
முதற்றோழி வஞ்சியிவ் அறையே வருவள் வல்லை!
ஏதோ எழுது கின்றனள். வாணி
கோதிநின் றாற்று கின்றனள் கூந்தல்.
2-ம் தோழி நீரா டினளோ இந்நிசி?
முதற்றோழி:  ஆம்!ஆம்!
 70எழுந்து வாசநீ ராடி முன்சுரத்
தழுந்திய அன்றுதான் அணிந்தவெண் பட்டினைக்
கொடுவரப் பணித்தங் கதுவே தரித்து
நெடுநுதல் திலகமும் நேர்படத் தீட்டி,
அன்றிரா அணிந்தமுத் தாரமும் அணிந்து,
 75நின்றுதன் நிலையெலாம் ஆடியில் நோக்கி,
‘நன்றோ நங்காய்! வாணி! நவிலுதி!
அன்றுபோல் அன்றோ இன்றென் நிலைமை!’
என்று சிறுமுறு வலித்தனள். என்சொல!
உருவமும் உடையும் உரையும் நடையும்
 80சருவமும் பாவனை பண்ணியும்...     (அழ)
  (மனோன்மணியும் வாணியும் வர)
  அஃதோ!
2-ம் தோழி வந்தனள் காணுதி. வாணியும் பின்னுளள்.
மறைகுவம் அவ்வறை. வருகஇவ் வழியே!
   (தோழிமார் போக)
மனோ: எந்தைபோல் தயாநிதி எங்கணும் இல்லை.
வந்தனம் வழங்கவும் வாய்கூ சுவதே!
 85ஏதோ ஒருவிதம் எழுதினேன் என்க!


வல்லை - விரைவில். வாசநீர் - மணமுள்ள நீர். முன்சுரத்து அழுந்திய அன்று - முன்னொருநாள் கனவு கண்டு சுரத்தினால் வருந்திய அன்றைய தினம். ஆடியில் - முகம் பார்க்கும் கண்ணாடியில்.