| 2-ம் தோழி | | என்செய் கின்றனள் இப்போது ஏழை? |
| முதற்றோழி | | வஞ்சியிவ் அறையே வருவள் வல்லை! ஏதோ எழுது கின்றனள். வாணி கோதிநின் றாற்று கின்றனள் கூந்தல். |
| 2-ம் தோழி | | நீரா டினளோ இந்நிசி? |
| முதற்றோழி: | | ஆம்!ஆம்! |
| | 70 | எழுந்து வாசநீ ராடி முன்சுரத் தழுந்திய அன்றுதான் அணிந்தவெண் பட்டினைக் கொடுவரப் பணித்தங் கதுவே தரித்து நெடுநுதல் திலகமும் நேர்படத் தீட்டி, அன்றிரா அணிந்தமுத் தாரமும் அணிந்து, |
| | 75 | நின்றுதன் நிலையெலாம் ஆடியில் நோக்கி, ‘நன்றோ நங்காய்! வாணி! நவிலுதி! அன்றுபோல் அன்றோ இன்றென் நிலைமை!’ என்று சிறுமுறு வலித்தனள். என்சொல! உருவமும் உடையும் உரையும் நடையும் |
| | 80 | சருவமும் பாவனை பண்ணியும்... (அழ) |
| | | (மனோன்மணியும் வாணியும் வர) |
| | | அஃதோ! |
| 2-ம் தோழி | | வந்தனள் காணுதி. வாணியும் பின்னுளள். மறைகுவம் அவ்வறை. வருகஇவ் வழியே! |
| | | (தோழிமார் போக) |
| மனோ: | | எந்தைபோல் தயாநிதி எங்கணும் இல்லை. வந்தனம் வழங்கவும் வாய்கூ சுவதே! |
| | 85 | ஏதோ ஒருவிதம் எழுதினேன் என்க! |
வல்லை - விரைவில். வாசநீர் - மணமுள்ள நீர். முன்சுரத்து அழுந்திய அன்று - முன்னொருநாள் கனவு கண்டு சுரத்தினால் வருந்திய அன்றைய தினம். ஆடியில் - முகம் பார்க்கும் கண்ணாடியில்.