| | | வாணி!உன் மணத்திற் கிசைந்தான் மன்னன். காணா யீதோ அதற்குள கட்டளை.(திருமுகங்காட்ட; வாணி வாசிக்க) |
| | | சொன்னேன் அன்றே வாணீ! முன்னமே அன்னை தந்தையர் அன்பறி யார்சிறார். |
| வாணி: | 90 | இத்தரு ணத்தில் இதுவென்? அம்மணீ! சத்தியம். எனக்கிது சம்மதம் அன்று. நினைப்பரும் துயரில் நீயிவண் வருந்த எனக்கிது தகுந்தகும்! ஏதிது தாயே! உன்மனப் படியெலாம் உறுங்காற் காண்குவம். |
| மனோ: | 95 | என்மனப் படியெது? எனக்கொரு மனதோ? எந்தையின் மனப்படி என்மனப் படியே. வந்தஇச் சுரத்திடை மாண்டதென் சித்தம். |
| வாணி: | | ஆயினும் அம்மா! யாரிஃ தறியார்? பாயிருள் தொகுதியும் பரிதியும் கொடிய |
| | 100 | வெஞ்சினக் கழுகும் அஞ்சிறைக் கிளியும் பொருந்தினும் பொருந்தீர். ஐயோ! இத்தகைப் பெருந்துயர்க் கெங்ஙனம் இசைந்தனை என்க. என்னையுன் நினைவோ! என்னையும் துணிபோ! இன்னன் மகிழ்ச்சியில் என்மண மேகுறை! |
| | | (அழ) |
| மனோ: | 105 | வருந்தலை வாணி! வா வா. இன்னும் தெரிந்திலை, ஐயோ! சிறுமியோ நீயும்? உண்மையான் உரைத்தேன். உணருதி உறுதி. என்மனம் ஆரவே இசைந்தேன். மெய்ம்மை. ஏதென எண்ணினை இவ்வுயிர் வாழ்க்கை? |
| | 110 | தீதற இன்பம் துய்ப்பநீ எண்ணில் ஈதல அதற்காம் உலகம். இமையவர் வாழ்க்கையி லுந்துயர் வந்துறும் எனிலிவ் |
திருமுகம் - கடிதம். இது - வாணிக்கும் நடராஜனுக்கும் நடக்கப் போகிற திருமணம். துயரில் - பலதேவனை மனோன்மணி மணக்கப்போகும் துன்பத்தில்.