வா: | | ஈதெலாம் உனக்குயார் ஓதுதற் கறிவர்!
| | மாதர்க் குரியதிக் காதல், |
| 85 | என்பதொன் றறியும் மன்பதை யுலகே.. 16 |
மனோ: | | மின்புரை யிடையாய்! என்கருத் துண்மையில்
| | வனத்தி லெய்தி வற்கலை புனைந்து
| | மனத்தை யடக்கி மாதவஞ் செயற்கே.
| | சுந்தர முனிவன் சிந்துர அடியும், |
| 90 | வாரிசம் போல மலர்ந்த வதனமும்,
| | கருணை யலையெறிந் தொழுகுங் கண்ணும்,
| | பரிவுடன் முகிழ்க்கு முறுவலும், பால்போல்
| | நரைதரு தலையும், புரையறும் உரையும்,
| | சாந்தமுந் தயையும் தங்கிய உடலும், |
| 95 | மாந்தளிர் வாட்டு மேனி வாணி!
| | எண்ணுந் தோறுங் குதித்து
| | நண்ணும் என்னுளம் மன்னிய தவத்தே. 17 |
வா: | | சின்னாட் செலுமுனந் தேர்குவன் நீசொல்
| | கட்டுரைத் திண்ணம். மட்டள வின்றிக் |
| 100 | காதல் கதுவுங் காலை
| | ஓதுவை நீயே யுறுமதன் சுவையே. 18 |
மனோ: | | வேண்டுமேற் காண்டி. அவையெலாம் வீண், வீண்.
| | காதலென் பதுவென்? பூதமோ? பேயோ?
| | வெருட்டினால் நாய்போ லோடிடும்; வெருவில் |
| 105 | துரத்தும் குரைக்கும் தொடரும் வெகுதொலை.
| | அடிக்கடி முனிவரிங் கணுகுவர். அஃதோ
| | அடுத்தஅவ் வறையில் யாதோ சக்கரம்
| | இருத்திடத் திறவுகோல் வாங்கினர். கண்டனை!
| | படர்சுழி யோடு பாய்திரை காட்டும் |
மின்புரை இடை - மின்னல் மகளிர் இடைக்கு உவமை. வற்கலை - மரவுரியாடை. சிந்துர அடி - சிவந்த பாதம். வாரிசம் - தாமரை. வதனம் - முகம். கருணை அலை - கருணையாகிய அலை. பரிவு - அன்பு. முகிழ்க்கும் - அரும்பும். புரையறும் - குற்றமற்ற. மாந்தளிர் வாட்டு மேனி - மாந்தளிர் மகளிரின் நிறத்திற்கு உவமை. கதுவு - கௌவு ; பற்று. வெருவில் - அஞ்சினால். இருத்திட - வைக்க.