| 55 | பேய்கொண் டனையோ? பித்தே றினையோ
| | நீயென் நினைத்தனை? நிகரில் குடிலன்
| | தன் மக னாகிச் சாலவும் வலியனாய்
| | மன்னனுக் கினியனாய் மன்பல தேவனும்
| | உன்னுளங் கவர்ந்த ஒருவனும் ஒப்போ? | | 60 | பேய்கொண் டனையோ? பேதாய்!
| | வேய்கொள் தோளி விளம்பா யெனக்கே. 11 |
வா: | | அறியா யொன்றும், அம்ம! அரிவையர்
| | நிறையழி காதல் நேருந் தன்மை
| | ஒன்றுங் கருதி யன்றவ ருள்ளஞ் |
| 65 | சென்று பாய்ந்து சேருதல். திரியுங்
| | காற்றும் பெட்புங் காரணம் இன்மையில்
| | ஆற்றவும் ஒக்குமென் றறைவர்.
| | மாற்றமென்? நீயே மதிமனோன் மணியே! 12 |
மனோ: | | புதுமைநீ புகன்றது. பூவைமார் காதல் |
| 70 | இதுவே யாமெனில் இகழ்தற் பாற்றே!
| | காதல் கொள்ளுதற் கேதுவும் இலையாம்!
| | தானறி யாப்பே யாட்டந் தானாம்!
| | ஆயினும் அமைந்துநீ ஆய்ந்துணர்ந் தோதுதி.
| | உண்டோ இவர்தமில் ஒப்பு? |
| 75 | கண்டோ எனுமொழிக் காரிகை யணங்கே! 13 |
வா: | | ஒப்புயா னெப்படிச் செப்புவன்? அம்ம!
| | என்னுளம் போயிறந் ததுவே
| | மன்னிய ஒருவன் வடிவுடன் பண்டே. 14 |
மனோ: | | பித்தே பிதற்றினை. எத்திற மாயினுந் |
| 80 | தாந்த முளத்தைத் தடைசெயில் எங்ஙனம்,
| | காந்தள் காட்டுங் கையாய்!
| | தவிர்ந்தது சாடி யோடிடும் வகையே?. 15 |
வேய் - மூங்கில்; கணுவுடைய மூங்கிலை மகளிர் தோளுக்கு உவமை கூறுவது மரபு. பெட்பு - அன்பு; ஆசை.
கண்டு-கற்கண்டு. காரிகை அணங்கு - தெய்வமகள் போன்ற அழகுள்ள பெண். காந்தள் காட்டும் கை - காந்தள்பூ கைக்கு உவமை.