வா: | | எப்படி யுனக்கியான் செப்புவே னம்மா?
| | தலைவிதி தடுக்கற் பாற்றே? தொலைய
| | அனுபவித் தன்றே அகலும்? மனையில்
| | தந்தையுங் கொடியன்; தாயுங் கொடியள்! |
| 35 | சிந்தியார் சிறிதும் யான்படும் இடும்பை.
| | என்னுயிர்க் குயிராம் என்கா தலர்க்கும்
| | இன்ன லிழைத்தனர். எண்ணிய வெண்ணம்
| | முதலையின் பிடிபோல் முடிக்கத் துணிந்தனர்.
| | யாரொடு நோவேன்! யார்க்கெடுத் துரைப்பேன்? |
| 40 | வார்கடல் உலகில் வாழ்கிலன்.
| | மாளுவன் திண்ணம். மாளுவன் வறிதே. 8 |
மனோ: | | முல்லையின் முகையும் முருக்கின் இதழுங்
| | காட்டுங் கைரவ வாயாய்! உனக்கும்
| | முரண்டேன்? பலதே வனுக்கே மாலை |
| 45 | சூடிடிற் கேடென்? காதால்
| | வள்ளியி னழகெலாங் கொள்ளை கொ ளணங்கே! |
வா: | | அம்மொழி வெம்மொழி. அம்ம! ஒழிதி.
| | நஞ்சும் அஞ்சிலேன்; நின்சொல் அஞ்சினேன்.
| | இறக்கினும் இசையேன். தாமே துறக்கினும் |
| 50 | மறப்பனோ என்னுளம் மன்னிய ஒருவரை?
| | ஆடவ ராகமற் றெவரையும்
| | நாடுமோ நானுள வளவுமென் உளமே? 10 |
மனோ: | | வலம்புரிப் புறத்தெழு நலந்திகழ் மதியென
| | வதியும் வதன மங்காய்! வாணீ ! |
“முதலையின் பிடிபோல்” - இது, மூர்க்கனும் முதலையும் கொண்டது விடாது என்னும் பழமொழியைக் குறிக்கிறது.
கைரவம் - ஆம்பல். முரண்டு - பிடிவாதம். வள்ளை - வள்ளை இலை, இது காதுக்கு உவமை. மன்னிய - நிலைத்திருக்கிற. ஒருவர் - இங்கு நடராஜனைக் குறிக்கிறது.