பக்கம் எண் :

64மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் - 20

மனோ:   மறையேல்! மறையேல்! பிறைபழி நுதலாய்!
  10 திங்கள் கண்டு பொங்கிய கடலெனச்
செம்புனல் பரக்கச் செந்தா மரைபோற்
சிவந்தவுன் கபோல நுவன்று, நின்மனக்
களவெலாம் வெளியாக் கக்கிய பின்னர்
ஏதுநீ யொளிக்குதல்? இயம்பாய்
  15 காதலன் நேற்றுனக் கோதிய தெனக்கே.     3
வா:   ஐயோ கொடுமை! அம்ம! அதிசயம்!
எருதீன் றெனுமுனம் என்னகன் றென்று
திரிபவ ரொப்பநீ செப்பினை!
நான் கண் டேநாள் நாலைந் தாமே.     4
மனோ: 20 ஏதடி! நுமது காதல் கழிந்ததோ?
காணா தொருபோ திரேமெனுங் கட்டுரை
வீணா யினதோ? பிழைத்தவர் யாவர்?
காதள வோடிய கண்ணாய்!
ஓதுவாய் என்பா லுரைக்கற் பாற்றே.     5
வா: 25 எதனையான் இயம்புகோ! என்றலை விதியே. (கண்ணீர் சிந்தி)
வா; விளை யாடுவோம் வாராய்.
யார்முறை யாடுதல்? வார்குழற் றிருவே!      6
மனோ:   ஏனிது! ஏனிது வாணீ! எட்பூ
ஏசிய நாசியாய்! இயம்புக.
  30 மனத்திடை யடக்கலை! வழங்குதி வகுத்தே.     7


கபோலம் - கன்னம். நுவன்று - சொல்லி; வெளிப்படுத்தி. இயம்பு - b சால்லு. ‘எருது ஈன்றது என்றால் என்ன கன்று. என்பதுபோல’ என்பது பழமொழி. ‘ எருது ஈன்றது என்றால் தொழுவத்திலே கட்டு’ என்றும் கூறுவர். ‘காள பெற்றென்னு கேட்டு கயறெடுத்து’ என்பது மலையாளப் பழமொழி.

பிழைத்தவர் - பிழை செய்தவர். எட்பூ - எள்ளின் பூவை. ஏசிய - இழித்துக் கூறிய. நாசி - மூக்கு. எள்ளின் பூவை மகளிரின் மூக்குக்கு உவமை கூறுவது மரபு.