மனோ: | | இருளில் தனித்துறை யேழையர் தங்கள் மேற் பொருதலோ வீரமென் றாடாய் கழல் போயெரிந் தான்பண்டென் றாடாய் கழல். 3 |
வா: | | எரிந்தன னாயிலென் என்றென்றுந் தம்முடல் கரிந்தது பதியென் றாடாய் கழல் கடுவுண்ட கண்டர்க்கென் றாடாய் கழல். 4 |
மனோ: | | தெருவில் பலிகொண்டு திரிதரும் அம்பலத் தொருவர்க் குடைந்தானென் றாடாய் கழல் உருவங் கரந்தானென் றாடாய் கழல். 5 |
வா: | | உருவங் கரந்தாலென் ஓர்மல ரம்பினால் அரையுரு வானாரென் றாடாய் கழல் அந்நட ராஜரென் றாடாய் கழல். 6 (பெருமூச்செறிய) (நேரிசை ஆசிரியப்பா) |
மனோ: | | (சிரித்து) ஏதடி வாணி! ஓதிய பாட்டில் ஒருபெய ரொளித்தனை பெருமூச் செறிந்து? நன்று! நன்று! நின் நாணம். மன்றலு மானது போலும்வார் குழலே! 1 |
வா: | 5 | ஏதம் மாநீ சூது நினைத்தனை? ஒருபொரு ளும்யான் கருதினே னல்லேன். இச்சகத் தெவரே பாடினும், உச்சத் தொனியில் உயிர்ப்பெழல் இயல்பே. 2 |
பலி கொண்டு - பிச்சை ஏற்று. அம்பலத்தொருவர் -திருச்சிற்றம் பலத்தில் எழுந்தருளிய சிவபெருமான். உடைந்தான்- தோற்றான். கரந்தான் - மறைந்தான். நடராஜர் - வாணியின் காதலன் பெயர். மன்றல் - திருமணம். வார்குழல் - நீண்ட கூந்தலையுடையவள். இச்சகம் - இந்த உலகம். உயிர்ப்பு - மூச்சு.