62 | மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் - 20 |
இரண்டாம் களம் இடம் : கன்னிமாடம் காலம் : எற்பாடு (மனோன்மணியும் வாணியும் கழல் விளையாடி இருக்க) (ஆசிரியத் தாழிசை) மனோன்மணி: | (தோழியுடன் கழல் விளையாடிப் பாட) | | துணையறு மகளிர்மேற் சுடுகணை தூர்ப்பவன்
| | அணைகில னரன்முன்னென் றாடாய் கழல்
| | அணைந்துநீ றானானென் றாடாய் கழல். 1 | வாணி: | நீறாயி னாலென்னை நேர்மலர் பட்டபுண்
| | ஆறா வடுவேயென் றாடாய் கழல்
| | அழலாடுந் தேவர்க்கென் றாடாய் கழல். 2 |
எற்பாடு = எல் + படுதல்; சூரியன் மறையும் நேரம். கணை - அம்பு. சுடுகணை - காமமாகிய அம்பு. சுடுகணை தூர்ப்பவன் - காமன்; மன்மதன். அரன் முன்- சிவ பெருமானுக்கு முன்னர். கழல்- கழல் விளையாட்டு; கழற்காய் கொண்டு மகளிர் விளையாடுவது. அணைந்து-சேர்ந்து, நீறு ஆனான்- சாம்ப லானான். (மன்மதனைச் சிவபெருமான் எரித்ததைப் புராணக்கதை விளக்கத்திற் காண்க.) என்னை - என்ன. வடு - தழும்பு. அழலாடுந் தேவர் - சிவபெருமான். ஏழையர் - பெண்கள். கடு - நஞ்சு. கடுவுண்ட கண்டர் - நீலகண்டர்; சிவபெருமான். (நஞ்சுண்ட வரலாற்றைப் புராணக்கதை விளக்கத்திற் காண்க.) |