பக்கம் எண் :

பதிப்பு : மனோன்மணியம் - நாடகம்61

145 மங்கிய அங்கி வலமாய்ப் பொங்கிப்
புங்கவர் மகிழ்ச்சியைப் பொறித்தது முதலா
முனிவர் யாவரும் மணியென மொழியில்
தங்கள் தலைமிசைக் கொள்வர் தரணியில்
எங்குள தவட்கொப் பியம்புதற் கென்றே.
4-ம் ந: 150 ஒக்கும்! ஒக்கும்! இக்குங் கைக்கு
மென்னும் இன்மொழிக் கன்னிக் கெங்கே
ஒப்புள துரைக்க! ஓ! ஓ! முனிவர்
அவ்வழி யேகுநர் போலும்.
இவ்வழி வம்மின் காண்குதும் இனிதே.
(நகரவாசிகள் போக)

முதல் அங்கம் : முதற் களம் முற்றிற்று


புங்கவர் - உயர்ந்தவர். இக்கு - இக்ஷு; கரும்பு.