சொல்
|
அருஞ்சொற்பொருள் |
| உழக்குதல் | கலக்குதல் ; மிதித்தல் ; உழுதல் ; விளையாடுதல் ; கொன்று திரிதல் ; வெல்லுதல் . |
| உழக்குருட்டுதல் | சூதாடுதல் . |
| உழக்கோல் | உழவுக்கம்பு , தாற்றுக்கோல் . |
| உழத்தல் | செய்தல் ; பயிலுதல் ; பழகுதல் ; முயலுதல் ; வெல்லுதல் ; வருந்துதல் ; பட்டனுபவித்தல் ; துவைத்தல் . |
| உழத்தி | உழவர்சாதிப் பெண் , மருதநிலப் பெண் . |
| உழத்திப்பாட்டு | உழவுபற்றிய செய்திகளைக் கூறும் ஒருவகைச் சிற்றிலக்கியவகை . |
| உழப்பன் | கள்ள நியாயம் பேசுகிறவன் . |
| உழப்பு | முயற்சி , ஊக்கம் ; வருத்தம் ; பழக்கம் ; வலிமை . |
| உழப்புதல் | மழுப்புதல் ; குழப்பிப் பேசுதல் ; போலிவாதஞ் செய்தல் ; காலங்கடத்துதல் . |
| உழம்புதல் | பல ஒலிகள் கலந்தொலித்தல் ; குழும்புதல் . |
| உழமண் | உவர்மண் , அழுக்கெடுக்கும் மண் . |
| உவர் | உப்பு ; உப்புச்சுவை ; களர்நிலம் ; உழைமண் ; கடல் ; இனிமை ; உயர்திணைப் பலர்பாலில் வரும் ஒரு சுட்டுப்பெயர் . |
| உவர்க்கடல் | உப்புநீர்க் கடல் . |
| உவர்க்கம் | கடற்கரை . |
| உவர்க்களம் | காண்க : உவர்நிலம் . |
| உவர்க்காரம் | சவர்க்காரம் . |
| உவர்ச்சங்கம் | முட்சங்குப்பூண்டு . |
| உவர்த்தரை | காண்க : உவர்நிலம் . |
| உவர்த்தல் | உப்புக்கரித்தல் ; துவர்த்தல் ; அருவருத்தல் ; வெறுத்தல் . |
| உவர்நிலம் | களர்நிலம் ; உப்பளம் . |
| உவர்நீர் | உப்புநீர் , உப்புச்சுவையுள்ள நீர் . |
| உவர்ப்பு | உப்புச்சுவை ; துவர்ப்பு ; இகழ்ச்சி ; வெறுப்பு ; அவாவின்மை ; உயிரால் அளவின்றி ஈட்டப்பட்ட வினைகளுள் இனி நுகரக் கிடக்கும் வினையின் பயன்கள் . |
| உவர்மண் | உப்புச்சேர்ந்த மண் , உழைமண் ; களர்நிலம் . |
| உவரகம் | உப்புச்சேர்ந்த மண் , உழைமண் ; களர்நிலம் . |
| உவராகம் | மறைப்பு , கிரகணம் ; மறைப்புக் காலம் . |
| உவரி | உவர்நீர் , உப்புநீர் ; கடல் ; சிறுநீர் . |
| உவருண்டான் | களர்நிலத்தில் பயிரிடப்படும் ஒருவகை நெல் . |
| உவரோதம் | உவர்க்கடல் ; இடையூறு . |
| உவல் | தழை ; சருகு |
| உவலை | தழை ; சருகு ; மரக்கொம்பு ; இழிவு ; துன்பம் ; வம்புச்சொல் . |
| உவவனம் | உபவனம் , சோலை , உய்யானம் , பூந்தோட்டம் . |
| உவவு | உவப்பு ; நிறைமதி ; மறைமதி . |
| உவள் | உயர்திணைப் பெண்பாலில் வரும் ஒரு சுட்டுப்பெயர் ; அவளுக்கும் இவளுக்கும் இடையில் உள்ளவள் ; முன் நிற்பவள் . |
| உவளகம் | அந்தப்புரம் ; சிறைச்சாலை ; காவற்கூடம் ; மதில் ; ஒருபக்கம் ; அகழி ; பள்ளம் ; வாயில் ; குளம் ; உப்பளம் ; இடைச்சேரி ; விரிவு ; நீர்நிலை ; பிரித்தல் . |
| உவளித்தல் | தூய்மை செய்தல் ; துப்புரவாக்கல் . |
| உவளுதல் | துவளுதல் ; நடுங்குதல் ; பரத்தல் . |
| உவற்றுதல் | சுரக்கச் செயதல் . |
| உவறுதல் | ஊறுதல் , சுரத்தல் . |
| உவன் | உயர்திணை ஆண்பாலில் வரும் ஒரு சுட்டுப்பெயர் ; அவனுக்கும் இவனுக்கும் இடையில் உள்ளவன் ; முன் நிற்பவன் ; பின்புறத்துள்ளவன் . |
| உவன்றி | நீர்நிலை . |
| உவனாயம் | துவைத்துக் கட்டும் மருந்து . |
| உவனித்தல் | அம்பெய்யத் தொடங்குதல் ; தூய்மை செய்தல் ; ஈரமாதல் . |
| உவனிப்பு | ஈரம் . |
| உவா | வெள்ளுவா , முழுமதிநாள் ; காருவா , அமாவாசை ; கடல் ; உகாமரம் . |
| உவாத்தி | கற்பிப்போன் , ஆசிரியன் , உபாத்தியாயன் ; வேதமோதுவிப்போன் . |
| உவாத்திகன் | கற்பிப்போன் , ஆசிரியன் , உபாத்தியாயன் ; வேதமோதுவிப்போன் . |
| உவாத்திமை | கற்பிக்கும் தொழில் . |
| உவாத்தியாயன் | காண்க : உவாத்தி . |
| உவாத்தியாயனி | ஆசிரியை . |
| உவாத்து | காண்க : உவாத்தி . |
| உவாதி | எல்லை ; கடுந்துன்பம் , பெருந்துன்பம் . |
| உவாந்தம் | காருவா , அமாவாசை ; வெள்ளுவா , பௌர்ணிமை . |
| உவாய் | ஒரு மரம் , உவாத்தேக்கு . |
| உவாலம்பம் | பழிப்பு , தூடணை . |
| உவாலம்பனம் | பழிப்பு , தூடணை . |
| உவாவுதல் | நிறைதல் . |
| உவாளி | பூட்டை ; அறுகு . |
| உவித்தல் | அவித்தல் . |
| உவிதல் | சாதல் ; அவிதல் , நீர்வற்றி யவிதல் ; காற்றில்லாமல் புழுங்கல் . |
| உவியல் | சமைத்த கறி . |
| உவை | அஃறிணைப் பன்மைப் படர்க்கைச் சுட்டுப் பெயர் ; உங்குள்ளவை , உவ்விடத்துள்ளவை . |
| உழக்கு | காற்படி ; மிதிப்பு ; கவறு உருட்டும் உழக்கு ; சிலம்பம் . |
| உழுக்கு | (வி) கலக்கு ; மிதி ; சிலம்பம் பழகு . |
| உவமவாசகம் | உவமவுருபு |
| உவமவுருபு | உவமானத்தைச் சார்ந்து ஒப்புமை விளக்கவரும் இடைச்சொல் ; அன்ன , ஒப்ப , ஏய்ப்ப என்றாற்போல வருபவை |
| உவமன் | ஊமன் ; உவமை |
| உவமாநிலம் | சுவர் |
| உவமானம் | உபமானம் , ஒப்பு , சமானம் ; ஒரு பொருளுக்கு ஒப்பாக உரைக்கத்தக்க உயர் பொருள் |
| உவமித்தல் | உவமைப்படுத்தல் , ஒப்புமை காட்டிக் கூறுதல் |
| உவமேயம் | உபமேயம் , உவமிக்கப்படும் பொருள் |
| உவமை | உவமம் ; ஒப்புமை ; உவமையணி ; வினை , பயன் , மெய் , உரு என்பவை காரணமாக ஒரு பொருளோடு மற்றொரு பொருளை ஒப்புமை புலப்படப் பேசுகை |
| உவமைத்தொகை | உவமையுருபுதொக்கதொடர்மொழி ; மதிமுகம் , கயற்கண் என்றாற்போல வருவது . |
| உவமையாகுபெயர் | உவமையான பொருளின் பெயர் உவமேயத்திற்கு ஆகிவருவது ; 'பாவை வந்தாள்' என்பதுபோல வருவது . |
| உவமையின்மை | ஒப்பின்மை , இறைவன் எண் குணங்களுள் ஒன்று . |
| உவமையுருபு | காண்க : உவமவுருபு . |
|
|
|