சொல்
|
அருஞ்சொற்பொருள் |
| கந்திற்பாவை | தூணில் பெண் வடிவாய் அமைந்த தெய்வம் . |
| கந்து | தூண் ; யானை கட்டும் தறி ; ஆதீண்டு குற்றி ; தெய்வம் உறையும் தூண் ; பற்றுக் கோடு ; யாக்கையின் மூட்டு ; சந்து ; கழுத்தடி ; வண்டியுளிரும்பு ; வண்டி இருசு ; வண்டி ; மாடு பிணைக்குந் தும்பு ; வைக்கோல் வரம்பு ; பொலிப் புறத்தடையும் பதர் . |
| கந்துகட்டுதல் | காய்கறிகளைக் கொதிக்கவைக்கும்போது நீரில் அவை ஒதுங்கி மிதத்தல் ; களத்தைச் சுற்றி வைக்கோல் சேர்தல் . |
| கந்துகம் | பந்து ; குதிரை ; குறுநில மன்னரின் குதிரை . |
| கந்துகவரி | மகளிர் பந்தாட்டுப் பாட்டு . |
| கந்துகளம் | நெல்லும் பதரும் கலந்த களம் . |
| கந்துகன் | தான்றிமரம் . |
| கந்திவாருணி | பேய்த் தும்மட்டி . |
| கந்தடித்தல் | சூடு மிதித்தபின் கதிர்த்தாளைக் கோல்கொண்டு அடித்தல் . |
| கந்தடைத்தல் | களத்தைச் சுற்றி வைக்கோலால் வேலி கட்டுத்தல் . |
| கந்தநாகுலி | செவ்வியம் ; மிளகு ; மிளகுகொடி . |
| கந்தநாகுலியம் | பேரரத்தை . |
| கந்தப்பொடி | மணப்பொடி . |
| கந்தபத்தம் | புழுகுசம்பா நெல் . |
| கந்தபாடாணம் | கந்தகம் . |
| கந்தபுட்பி | மெருகன்கிழங்குச் செடி . |
| கந்தபுட்பை | அவுரி . |
| கந்தம் | மணம் ; சந்தனம் ; வசம்பு ; கந்தகம் ; கிழங்குப்பொது ; கழுத்தடி ; வெள்ளைப் பூண்டு ; கருணைக்கிழங்கு ; இந்திரியம் ; மணப்பூடு ; தூண் . |
| கந்தமாதனம் | ஒரு மலை , குலகிரி எட்டனள் ஒன்று . |
| கந்தமூடிகம் | கத்தூரி விலங்கு ; மூஞ்சூறு . |
| கந்தமூலபலம் | கிழங்கு வேர் கனிகள் . |
| கந்தமூலி | சிறு இண்டஞ்செடி . |
| கந்தர் | கந்தன் , முருகக்கடவுள் . |
| கந்தர்ப்ப நகரம் | கந்தருவ நகரம் . |
| கந்தர்ப்பர் | கந்தருவர் . |
| கந்தர்ப்பன் | மன்மதன் . |
| கந்தரக்காட்டம் | வெள்ளைப் பாடாணம் . |
| கந்தரசம் | சந்தனம் . |
| கந்தரசு | சாம்பிராணி . |
| கந்தரம் | கழுத்து ; மேகம் ; மலைக்குகை ; புனமுருங்கைமரம் ; கடற்பாசி ; கற்கடகபாடாணம் ; தீமுறுகற் பாடாணம் . |
| கந்தரமுட்டி | நேரே அம்பெய்வதற்கு வில்லைப் பிடிக்கை . |
| கந்தராசம் | ஒருவகை மணமுள்ள மரம் , சந்தனம் . |
| கந்தருவம் | இசை , பண் ; இசைப்பாட்டு ; எண்வகை மணத்துள் ஒன்று , தலைவனும் தலைவியும் தாமே மணத்தல் ; தேவசாதியுள் ஒன்றான கந்தருவ சாதி ; குதிரை . |
| கந்தருவர் | பதினெட்டுத் தேவசாதியுள் ஒரு வகையார் ; இசைவல்ல சிறுகுடைத் தேவகுலத்தார் . |
| கந்தருவவேதம் | இசைநூல் , சாமவேதத்தின் ஒருபாகம் . |
| கந்தல் | கேடு , ஒழுக்கக்கேடு ; அறியாமையால் விளையும் குற்றம் ; பீறல் , கிழிந்த ஆடை . |
| கந்தவகம் | மோப்பம் ; மூக்கு . |
| கந்தவகன் | காற்று , வாயுதேவன் . |
| கந்தவடி | மணத்தயிலம் . |
| கந்தருவக்கம் | மணப்பொருள்கள் . |
| கந்தவாகன் | காண்க : கந்தவகன் . |
| கந்தவாகனம் | காண்க : கந்தவகன் . |
| கந்தவாரம் | அரண்மனையிலுள்ள அந்தப்புரம் , அரசன் தேவியிருக்கை . |
| கந்தவுத்தி | கந்தவருக்கம் , சேர்த்தற்குரிய மணப்பண்டங்கள் . |
| கந்தழி | பரம்பொருள் , ஒரு பற்றுக்கோடும் இன்றி அருவாகித் தானே நிற்கும் தத்துவங் கடந்த பொருள் , கடவுள் ; கண்ணன் வாணனது சோநகரத்தை அழித்ததைக் கூறும் புறத்துறை ; மதிலையழித்தலாகிய புறத்துறை . |
| கந்தளம் | கவசம் , சட்டை ; கதுப்பு ; பொன் ; முளை ; தளிர் ; போர் . |
| கந்தன் | முருகக்கடவுள் ; அருகதேவன் ; சீர்பந்த பாடாணம் , சூதபாடாணம் . |
| கந்தாடை | ஒரு பார்ப்பனக் குடி . |
| கந்தாயம் | ஆண்டில் மூன்றில் ஒரு பாகம் ; தவணை ; ஆதாயம் ; அறுவடைக்காலம் ; கந்தாய வரி கொடுக்குங் காலம் . |
| கந்தார்த்தம் | ஓர் இசைப்பாட்டு . |
| கந்தாரம் | கள் ; காந்தாரம் , ஓர் இசைப்பாட்டு . |
| கந்தாலி | கச்சோலம் . |
| கந்தாவகன் | காண்க : கந்தவகன் . |
| கந்தி | மணப்பொருள் ; ஆரியாங்கனை என்னும் தவப்பெண் , கமுகு ; துவரை ; மரகதம் ; கந்தகம் , கந்தக பாடாணம் . |
| கந்திகை | சிறுதேக்கு . |
| கந்தித்தம் | சீலை |
| கந்தித்தல் | மணத்தல் . |
| கந்திரி | ஒரு முகமதியப் பண்டிகை , நாகூரில் துருக்கர் கொண்டாடும் சிறப்புப் பண்டிகை ; பிச்சைக்காரன் ; வண்டி . |
| கந்திருவர் | கந்தருவர் , யாழ்வல்லோர் . |
| கதையெடுத்தல் | ஒரு பொருளை அறிவிக்கத் தொடங்குதல் . |
| கதைவளர்த்தல் | பேச்சை விவரித்தல் . |
| கதைவிடுதல் | பொய்ச்செய்தி எழுப்புதல் ; இரகசியம் வெளிவரும்படி தந்திரமாய்ச் சொல்லுதல் . |
| கந்தகட்பலம் | தான்றிமரம் . |
| கந்தகதைலம் | சொறிக்கிடும் கந்தகக் கலப்புள்ள எண்ணெய் . |
| கந்தகப் பூ | மருந்துச் சரக்குவகை . |
| கந்தகபூமி | கந்தக சம்பந்தமுள்ள நிலம் ; காங்கையான நாடு . |
| கந்தகம் | ஒருவகைத் தாதுப்பொருள் ; ஒரு மருந்து ; உள்ளி ; முருங்கை மரம் ; ஒருவகைத் தவச அளவை . |
| கந்தக விரைப்பாடு | ஐந்து ஏக்கர் அளவுள்ள நிலம் . |
| கந்தகாப்பிரகம் | மஞ்சள் அப்பிரகம் . |
| கந்தகாரி | ஆடுதின்னாப்பாளை . |
| கந்தங்குவளம் | கழுகு . |
| கந்தசட்கம் | தமரத்தைமரம் . |
| கந்தசட்டி | ஐப்பசி மாதத்தின் அமாவாசைக்குப் பின் வரும் சட்டி திதி , முருகக் கடவுள் சூரபதுமனை வென்றதைக் குறித்து ஐப்பசி மாதச் சட்டி திதியில் நடத்தப்படும் திருநாள் . |
| கந்தசாரம் | சந்தனம் ; பனிநீர் . |
| கந்தசாலி | ஒருவகை உயர்ந்த செந்நெல் . |
|
|
|