சொல்
|
அருஞ்சொற்பொருள் |
| காயக்கிலேசம் | உடலை வருத்தி யொடுக்குகை . |
| காமுகப்பிரியம் | கத்தூரி மஞ்சள் . |
| காமுகன் | காம இச்சை மிகுந்தவன் ; மன்மதன் ; திருமால் ; நாகரிகன் . |
| காமுருகி | ஓணான் . |
| காமுறுதல் | விரும்புதல் ; வேண்டிக்கொள்ளுதல் . |
| காமோத்தீபகம் | காமத்தை மிகுவிக்கும் பொருள் . |
| காய் | முதிர்ந்து பழுக்காத மரஞ்செடிகளின் பலன் ; மூவகைச்சீரின் இறுதியிலுள்ள நேரசை ,காய்ச்சீர் ; பழுக்காத புண்கட்டி ; முதிராது விழுங் கரு ; பயனின்மை ; வஞ்சனை விதை ; சொக்கட்டான்காய் ; பக்குவப்படாத விளை பொருள்கள் . |
| காய்க்கடுக்கன் | உருத்திராட்சம் வைத்துக் கட்டிய கடுக்கன் . |
| காய்க்கறியமுது | கடவுட்குப் படைக்குங் கறி . |
| காய்க்கும்பருவம் | காய் தோன்றுங் காலம் ; பிள்ளைபெறும் பருவம் . |
| காய்கறி | உணவுக்குரிய மரக்கறிகள் . |
| காய்ங்கனி | காயும் கனியும் . |
| காய்ச்சல் | உலர்ச்சி ; சுரநோய் ; மனவெரிச்சல் ; வெப்பம் . |
| காய்ச்சல்காரன் | சுரமுள்ளவன் ; பணம் வறண்வன் ; பொறாமையால் மனவெரிச்சல் உள்ளவன் . |
| காய்ச்சற்பாடாணம் | பிறவிப் பாடாணங்களுள் ஒன்று . |
| காய்ச்சற்பாடு | தவசத்தின் நன்றாகக் காய்ந்த நிலை ; நெல் முதலியன உலர்த்துதலால் உண்டாகும் அளவுக்குறைவு ; பொருளிழந்து ஏங்கிநிற்கும் நிலை . |
| காய்ச்சி | துவரை . |
| காய்ச்சிரக்கு | புளிச்சைக்கீரை . |
| காய்ச்சீர் | நேரீற்று மூவசைச் சீர் . |
| காய்ச்சுக்கட்டி | காசுக்கட்டி . |
| காய்ச்சுக்கல் | போலி இரத்தினம் . |
| காய்ச்சுக்குப்பி | திராவகம் காய்ச்சி இறக்கும் குப்பி . |
| காய்ச்சுண்டை | காசுக்கட்டி . |
| காய்ச்சுப்பு | சவட்டுப்பு ; உவர்நீரைக் காய்ச்சியெடுக்கும் உப்பு . |
| காய்ச்சுமண் | வளையல் செய்தற்குரிய மணல் . |
| காய்ச்சுரை | புடமிட்ட பொன் ; புளிச்சைக்கீரை . |
| காய்ச்சுறுக்கு | புளிச்சைக்கீரை . |
| காய்த்தல் | மரஞ்செடி முதலியன காய்களை உண்டாக்குதல் . |
| காய்த்தானியம் | முதிரை ; கதிர்த்தானியம் ; முசுக்கட்டை . |
| காய்த்துதல் | எரியச்செய்தல் ; சினத்தல் ; காய்ச்சுதல் . |
| காய்த்தும்பை | கறித்தும்பை . |
| காய்தல் | உலர்தல் ; சுடுதல் ; மெலிதல் ; வருந்தல் ; விடாய்த்தல் ; வெயில்நிலாக்கள் எறித்தல் ; எரித்தல் ; அழித்தல் ; விலக்குதல் ; வெறுத்தல் ; வெகுளுதல் ; கடிந்துகூறுதல் ; வெட்டுதல் . |
| காய்நீர் | வெந்நீர் . |
| காய்ப்பழம் | முழுதும் பழுக்காத பழம் . |
| காய்ப்பறங்கி | கோழிக்கு வரும் நோய்களுள் ஒன்று . |
| காய்ப்பனை | சாறு எடுக்காத பெண்பனை . |
| காய்ப்பு | வெறுப்பு ; மட்டமான இரும்பு ; மரஞ்செடி முதலியன பலன் தருதல் ; தோலின் தடிப்பு ; தழும்பு . |
| காய்ப்புமரம் | காய்களுள்ள மரம் . |
| காய்பசி | மிக்க பசி . |
| காய்ம்பனை | காய்க்கும் பனை . |
| காய்ம்பாளை | பெண்பனையின் பாளை . |
| காய்மகாரம் | பொறாமை , எரிச்சல் . |
| காய்மடி | பசுவின் வன்முலை . |
| காய்மரம் | காண்க : காய்ப்புமரம் . |
| காய்மை | பொறாமை . |
| காய்மைகரித்தல் | பொறாமைப்படுதல் . |
| காய்மைகாரி | பொறாமைப்பட்டவன்(ள்) . |
| காய்வள்ளி | ஒரு வகை வள்ளிக்கொடி , காட்டுவள்ளி ; சீரகவள்ளி ; வெற்றிலைவள்ளி ; கிழங்குவகை . |
| காய்வாழை | நிறையக் காய்க்கும் வாழை வகை . |
| காய்விழுதல் | கருச்சிதைந்து வெளிப்படுதல் . |
| காயக்கம் | மோகமயக்கம் . |
| காயக்கரணம் | உறுப்பினாற் செய்யும் அபிநயம் . |
| காமனூர்தி | தென்றல் . |
| காமனை | சிறுகிழங்கு ; விருப்பம் . |
| காமனைங்கணை | காண்க : காமன்கணை . |
| காமாக்கினி | காமத்தீ . |
| காமாட்சி | பார்வதி ; காஞ்சிபுரத்து அம்பிகை . |
| காமாட்சிப்புல் | காவட்டம்புல் ; சுன்னாறிப்புல் ; கருப்பூரப்புல் . |
| காமாட்சிவிளக்கு | கலியாணம் முதலிய சிறப்பு நாள்களில் பயன்படுத்தும் பாவைவிளக்கு . |
| காமாட்டி | மண்வெட்டுவோன் ; மூடன் . |
| காமாதூரன் | காம இச்சை மிக்கவன் . |
| காமாந்தகன் | சிவன் ; காமத்தால் அறிவிழந்தவன் . |
| காமாப்பலகை | மரக்கலத்தின் சுற்றுப்பலகை . |
| காமாரி | சிவன் ; காளி . |
| காமி | காம இச்சை மிகுந்தவன் ; உவர்மண் ; பொன்னிமிளை . |
| காமிகம் | இருபத்தெட்டுச் சிவாகமங்களுள் ஒன்று . |
| காமித்தல் | விரும்புதல் ; காமங்கொள்ளுதல் . |
| காமியக்கல் | கோமேதகம் . |
| காமியகுரு | ஈசுரபத்தியும் அறமும் போதிக்கும் குரு . |
| காமியசத்தி | அப்பிரகம் . |
| காமியம் | இச்சிக்கும் பொருள் ; பயன்கருதிச் செய்யும் வினை ; கன்மமலம் ; ஆகாமியம் . |
| காமியமரணம் | தற்கொலை . |
| காமியர் | காமவேட்கையுள்ளோர் . |
| காமினி | பெண் ; ஆகாயகமன மந்திரம் ; அழகு . |
| காமீ | சென்ம லக்கினத்திலிருந்து ஏழாமிடத்துள்ள கோள் . |
|
|
|