சொல்
|
அருஞ்சொற்பொருள் |
| குருத்தோலை ஞாயிறு | கிறித்தவர்களின் ஒரு திருநாள் , ஞாயிறன்று கிறித்துநாதர் எருசலேம் நகருக்குள் வெற்றிமுழக்கோடு நுழைந்ததைக் கொண்டாடும் திருநாள் . |
| குருத்தோலைப் பெருநாள் | கிறித்தவர்களின் ஒரு திருநாள் , ஞாயிறன்று கிறித்துநாதர் எருசலேம் நகருக்குள் வெற்றிமுழக்கோடு நுழைந்ததைக் கொண்டாடும் திருநாள் . |
| குருதட்சினை | படிப்பு முடிந்தபின் குருவுக்குச் சீடன் கொடுக்கும் காணிக்கை . |
| குருதி | இரத்தம் ; சிவப்பு ; செவ்வாய் ; மூளை . |
| குருதிப்பலி | வீரன் தன் இரத்தத்தைக் கொற்றவைக்குக் கொடுக்கும் பலி . |
| குருதிப்புனல் | செந்நீர் ; உதிரநீர் . |
| குருதியூட்டுதல் | விலங்குப் பலிகொடுத்தல் . |
| குருதிவாரம் | செவ்வாய்க்கிழமை . |
| குருது | தானியக்குதிர் ; நெய் . |
| குருந்தக்கல் | மணிவகையுள் ஒன்று , குருவிந்தக்கல் . |
| குருந்தம் | குருந்தக்கல் ; குருந்தமரம் . |
| குருந்து | வெண்குருந்து ; குழந்தை ; காட்டெலுமிச்சை ; ஒருவகைச் சிறுமரம் ; குருக்கத்தி ; குருந்தக்கல் . |
| குருநாத்தகடு | ஒளியுள்ள ஒருவகை மெல்லிய வண்ணத்தகடு . |
| குருநாதன் | பரமகுரு , முருகக்கடவுள் . |
| குருநாள் | வியாழக்கிழமை ; பூசநாள் . |
| குருநிந்தை | ஐம்பெரும் குற்றங்களுள் ஒன்றாகிய குருவைப் பழித்தல் . |
| குருநோய் | அம்மைநோய் . |
| குருப்பித்தல் | பருவுண்டாதல் . |
| குருப்பு | பரு . |
| குருப்பூச்சி | காண்க : குருவண்டு . |
| குருபத்தி | குருவின்மேல் கொள்ளும் அன்பு . |
| குருபத்திரம் | துத்தநாகம் ; புளியமரம் . |
| குருபரம்பரை | குருவமிசவழி ; ஆழ்வார் ஆசாரியார்களின் வரலாறு கூறும் நூல் . |
| குருபரன் | பரமகுரு . |
| குருபன்னி | குருபத்தினி . |
| குருபாரம்பரியம் | குருவமிசவழி ; ஆசாரியபரம்பரை . |
| குருபீடம் | குருவினது இடம் . |
| குருபூசை | சமாதியடைந்த குருவின் (பெரியாரின்) வருட நட்சத்திரந்தோறும் மடங்களில் மகேசுவர பூசையுடன் அக் குருவிற்குச் செய்யும் ஆராதனை . |
| குரும்பட்டி | தென்னை பனைகளின் இளங்காய் . |
| குரும்பி | புற்றாஞ்சோறு . |
| குரும்பை | பனை தெங்குகளின் பிஞ்சு ; இளநீர் ; புற்றாஞ்சோறு ; காதினுள் திரளும் குறும்பி . |
| குருமகன் | குரு ; குருவின் புதல்வன் . |
| குருமணி | பரமகுரு . |
| குருமன் | ஒருசார் விலங்குபறவைகளின் இளமைப் பெயர் . |
| குருமான் | ஒருசார் விலங்குபறவைகளின் இளமைப் பெயர் . |
| குருமித்தல் | பேரொலி செய்தல் , முழங்குதல் . |
| குருமுடித்தல் | உலோகங்களை நீற்றுதற்கு உதவும் மருந்து செய்தல் ; இரசவாதத்தில் பொன்னாக்குதற்கு மருந்து செய்தல் . |
| குருகுமணல் | வெண்பொடி மணல் . |
| குருகுருத்தல் | நமைத்தல் ; நெஞ்சை உறுத்துதல் . |
| குருகுலம் | குரு மரபு ; குருவின் வாழ்விடம் . |
| குருகுலவாசம் | கல்வியின் பொருட்டு மாணாக்கர் ஆசிரியருடன் வாழ்தல் . |
| குருகூர் | நம்மாழ்வார் தோன்றிய ஆழ்வார்திருநகரி . |
| குருகை | நம்மாழ்வார் தோன்றிய ஆழ்வார்திருநகரி . |
| குருச்சி | சீனக்காரம் ; நாற்காலி . |
| குருசந்திரயோகம் | வியாழனுஞ் சந்திரனும் ஓர் இராசியிற் கூடியிருக்கும் யோகம் . |
| குருசம் | வெண்தோன்றிக்கிழங்கு . |
| குருசில் | காண்க : குரிசில் . |
| குருசு | சிலுவை . |
| குருசேவை | ஆசாரியனை வழிபடுகை . |
| குருட்டடியாய் | முன்னதாக நினையாதிருத்தல் ; தற்செயலாய் . |
| குருட்டாட்டம் | கண்மூடித்தனமான செய்கை . |
| குருட்டுக்கண்ணாடி | முகம் தெரியாத கண்ணாடி . |
| குருட்டுக்கல் | ஒளிமங்கின கல் . |
| குருட்டுச்சாயம் | மங்கலான சாயம் . |
| குருட்டுத்தனம் | அறியாமை , கண்மூடித்தனம் . |
| குருட்டுநாள் | செவ்வாயும் சனியும் . |
| குருட்டுநியாயம் | கண்மூடித்தனமான நியாயம் . |
| குருட்டுப்பத்தி | அறியாமையான பக்தி . |
| குருட்டுப்போக்காய் | கண்மூடித்தனமாய் ; தற்செயலாய் . |
| குருட்டுயோகம் | முயற்சியின்றிச் செல்வம் கிட்டுகை . |
| குருட்டுவழி | கண்மூடித்தனமான முறை . |
| குருட்டுவாக்கில் | தற்செயலாய் . |
| குருட்டெழுத்து | மங்கலான எழுத்து . |
| குருடன் | பார்வையில்லாதவன் ; சுக்கிரன் ; திருதராட்டிரன் . |
| குருடி | பார்வையில்லாதவள் . |
| குருடு | பார்வையின்மை ; ஒளியின்மை ; ஆடை முதலியவற்றின் முருட்டுப்பக்கம் ; மூடன் ; காதின் வெளிப்புறத்திலுள்ள செவிள் . |
| குருத்தடைத்தல் | நெல் முதலிய பயிர்கள் குருத்து விடாதிருத்தல் ; கதிர் பொதிநிரம்புதல் . |
| குருத்தல் | தோன்றுதல் ; வேர்க்குரு உண்டாதல் ; சினங்கொள்ளுதல் . |
| குருத்து | மரம் முதலியவற்றின் குருத்து , ஓலைக் கொழுந்து ; தந்தம் , மூளை இவற்றின் குருத்து ; காதுக் கருத்து ; இளமை ; வெண்மை . |
| குருத்துமணல் | பொடிமணல் . |
| குருத்துரோகம் | ஆசிரியனுக்குச் செய்யும் துரோகம் . |
| குருத்துவம் | குருத்தன்மை ; பெருமை ; கனம் ; நன்றி . |
| குருத்துவாங்குதல் | குருத்துவிடுதல் . |
| குருத்தெலும்பு | இளவெலும்பு . |
| குருத்தோலை | இளவோலை . |
|
|
|