சொல்
|
அருஞ்சொற்பொருள் |
| கோகுகட்டுதல் | காண்க : கோகுதட்டுதல் . |
| கோகுத்தம் | மல்லிகை . |
| கோகுதட்டுதுல் | தோள்தட்டி ஆரவாரஞ் செய்தல் . |
| கோகுலம் | கண்ணன் வளர்ந்த ஆயர்பாடி ; குயில் ; குரங்கு ; துளை ; கோயில் ; கொட்டில் ; பசுக்கூட்டம் . |
| கோகோவேனல் | பேரொலிசெய்தற் குறிப்பு . |
| கோங்கந்தட்டம் | கோங்கம்பூ . |
| கோங்கம் | நெல்லிமரம் ; ஒரு மரவகை . |
| கோங்கலர் | முற்காலத்தில் வழங்கிய ஒரு துகில் வகை . |
| கோங்கிலவு | ஒரு மரவகை . |
| கோங்கு | கோங்குவகை ; நீர்க்கோங்கு ; முள்ளிலவு ; மரவகை . |
| கோசக்கம் | குழப்பம் . |
| கோசகாரம் | பட்டுப்பூச்சி . |
| கோசங்கம் | வைகறை . |
| கோசணை | பேரொலி . |
| கோசம் | முட்டை ; உறை ; கவசம் ; ஐந்து கோசம் ; மதிலுறுப்பு ; ஆண்குறி ; கருப்பை ; கருவூலம் ; கருவூல அறை ; அகரமுதலி முதலிய புத்தகம் ; பட்டா ; அபிநயத்துக்குரிய அலிக்கை வகை ; தொகுதி ; சாதிக்காய் ; வீதி ; அடங்கல் கணக்கு . |
| கோசம்பி | கௌசாம்பி என்னும் நகரம் . |
| கோசமதம் | ஆண்யானையின் குறியிலிருந்து வரும் மதநீர் . |
| கோசமம் | பீர்க்கங்கொடி . |
| கோசமாற்றுதல் | பட்டா முதலியவற்றிற் பேர் மாற்றுதல் . |
| கோசர் | பழைய மறக்கடியினருள் ஒருசாரார் . |
| கோசரபலம் | சன்ம ராசியிலிருந்து தற்காலத்தில் கோள்கள் இருக்கும் நிலையின் பலன் . |
| கோசரம் | ஐம்பொறி , மனம் இவற்றுக்கு ஆதாரமானது ; பொறியுணர்வு ; ஊர் ; குறித்த காலத்தில் கோள்கள் இருக்கும் நிலை ; கோசார பலன் ; கோத்திரம் ; பூந்தாது ; மகிழமரம் . |
| கோசரித்தல் | அறிவுக்குப் புலனாதல் . |
| கோசலம் | பசுமூத்திரம் ; கோசலநாடு ; பதினெண் மொழியுள் ஒன்று . |
| கோசலை | கோசலைநாடு ; இராமனின் தாய் . |
| கோசவதி | காண்க : கோசமம் . |
| கோசன் | சீர்பந்த பாடாணம் . |
| கோசனை | கோரோசனை ; பேரொலி . |
| கோசா | அலி ; அன்னிய ஆடவர் காணாதபடி திரையிட்டு வாழும் பெண்கள் . |
| கோசாங்கம் | நாணற்புல் . |
| கோசாரம் | குறித்த காலத்தில் கோள்கள் இருக்கும் நிலை . |
| கோசாரி | காண்க : கோசமம் . |
| கோசாலை | ஓரங்கொய்து சுருக்கப்பட்ட ஆடை ; பசுக்கொட்டில் . |
| கோசாவித்திரி | பசுவைத் துதிக்கும் மந்திரம் . |
| கோசிகம் | பட்டாடை ; ஒரு பண்வகை ; சாமவேதம் ; கூகை . |
| கோசிகன் | குசிகர் மரபில் வந்தவனான விசுவாமித்திரன் . |
| கோசிகை | பட்டுச்சீலை . |
| கோசிலேபிடித்துவருதல் | காற்றின் திசையிலே செல்லும்படி கப்பற் சுக்கானைத் திருப்புதல் . |
| கோசிலேவருதல் | காற்றின் திசையிலே செல்லும்படி கப்பற் சுக்கானைத் திருப்புதல் . |
| கோசு | கூப்பிடு ; தொலைவு ; வீதி ; தோணிப் பாயின் முன்புறக் கயிறு ; தடவை ; தோல்வி ; செயல் ; முட்டைக்கோசு . |
| கோசப்பாய் | கப்பலின் பின்புறப் பாய் . |
| கோசுபோதல் | தாழ்ச்சியாதல் ; தோல்வியுறுதல் . |
| கோசுமந்தில் | படகின் பின்பக்கத்துப் பாய் தாங்கும் கட்டை . |
| கோட்காரன் | கோட்சொல்லுவோன் . |
| கோட்கூறு | இராசியை முப்பது கூறுகளாகப் பிரிக்கை ; கிரகக்கோளாறு . |
| கோட்சொல்லி | குறளை சொல்லுவோன் . |
| கோகு | புயம் ; கபடம் ; அடைவுகேடு ; கழுதை . |
| கோ | ஒர் உயிர்மெய்யெழுத்து (க்+ஓ) ; இறைவன் ; பேரரசன் ; அரசன் ; தந்தை ; தலைமை ; மலை ; குயவன் ; பசு ; எருது ; தேவலோகம் ; வானம் ; பூமி ; திசை ; கதிர் ; சூரியன் ; சந்திரன் ; வச்சிரப்படை ; அம்பு ; கண் ; சொல் ; மேன்மை ; நீர் ; இரசம் ; இலந்தைமரம் ; இரங்கற்குறிப்பு . |
| கோக்கதவு | பெரிய கதவு |
| கோக்கலம் | வெண்கலப் பாத்திரம் . |
| கோக்காமரம் | கடலிற் செலுத்தும் கட்டுமர வகைகளில் ஒன்று ; தூக்குமரம் . |
| கோக்காலி | பாத்திரங்கள் வைப்பதற்குச் சுவரை ஒட்டி அமைக்கப்படும் சடடம் ; நெட்டையானவள் ; போரிலிருந்து வைக்கோலைத் கோத்தெடுக்கும் கருவி . |
| கோக்குஞ்சம் | அம்பறாத் தூணி . |
| கோகடம் | முயல்வகை . |
| கோகண்டம் | நெருஞ்சிற்பூண்டு . |
| கோகத்தி | பசுக்கொலையாகிய பாவம் . |
| கோகம் | சக்கரவாகப்புள் ; செந்நாய் ; தவளை ; உலர்ந்த பூ . |
| கோகயம் | தாமரை . |
| கோகரணம் | பசுப்போல் காதசைக்கும் வித்தை ; மலைநாட்டில் உள்ள ஒரு சிவதலம் . |
| கோகருணி | பெருங்குரும்பை . |
| கோகலி | கடப்பமரம் . |
| கோகழி | திருவாவடுதுறை என்னும் சிவதலம் . |
| கோகன்னம் | மலைநாட்டில் உள்ள ஒரு சிவதலம் ; யோகாசனவகை . |
| கோகனகத்தி | திருமகள் ; கலைமகள் . |
| கோகனகம் | செந்தாமரை . |
| கோகனகத்தோன் | தாமரையில் பிறந்தவனாகிய பிரமன் . |
| கோகனகன் | தாமரையில் பிறந்தவனாகிய பிரமன் . |
| கோகனதம் | காண்க : கோகனகம் . |
| கோகனதன் | நான்முகன் , பிரமன் . |
| கோகனதை | தாமரையில் இருப்பவளாகிய திருமகள் . |
| கோகனம் | கரிசலாங்கண்ணி ; நிலக்கடம்புப்பூடு ; நிலவேம்பு . |
| கோகிலம் | குயில் ; பல்லி ; குரங்கு ; துளை ; சிறு குறிஞ்சாக்கொடி ; கலப்பை ; உலக்கை . |
| கோகிலவாசம் | குயிலுக்கு இருப்பிடமாகிய மாமரம் . |
| கோகிலாட்சம் | நீர்முள்ளிச்செடி ; கொம்மட்டி மாதுளை மரம் . |
| கோகிலோற்சவம் | குயிலுக்கு மகிழ்ச்சியை விளைவிக்கும் மாமரம் . |
|
|