சொல்
|
அருஞ்சொற்பொருள் |
சடங்குகழித்தல் | பெண்ணின் முதல் பூப்பில் உரிய சடங்கு செய்தல் ; சில செயல்களுக்குரிய முறைகளைச் செயதல் . |
சடசடவெனல் | ஓர் ஒலிக்குறிப்பு . |
சடசடெனல் | ஓர் ஒலிக்குறிப்பு . |
சடசீதிமுகம் | ஆனி , புரட்டாசி , மார்கழி , பங்குனி மாதங்கள் பிறக்கும் நாள் ; சூரியன் தனுசு 26ஆம் பாகையிலும் ,மீனம் 22 ஆம் பாகையிலும் ; மிதுனம் 18ஆம் பாகையிலும் , கன்னி 14ஆம் பாகையிலும் செல்லும் காலம் . |
சடப்பால் | முலைப்பால் . |
சடபதார்த்தம் | அறிவில்பொருள் . |
சடபுடெனல் | ஓர் ஒலிக்குறிப்பு ; விரைவுக் குறிப்பு . |
சடம் | அறிவில்பொருள் ; அறியாமை ; உடல் ; பொய் ; வஞ்சகம் ; கொடுமை ; சோம்பல் ; பிறக்கும்போது ஆன்மாவில் மோதி அதன் அறிவைக் கெடுக்கும் ஒரு வாயுவகை ; ஆறு என்னும் எண் . |
சடம்பு | சணல் . |
சடரம் | வயிறு . |
சடராக்கினி | வயிற்றுத் தீ , மூலாக்கினி . |
சடலபுடலம் | பருத்திருப்பது . |
சடலம் | உடம்பு ; பருத்த உடல் ; அறிவில் பொருள் . |
சடலை | பருத்திருப்பது ; வீண்செயல் . |
சடவுப்பு | அமரியுப்பு ; சமாதியுப்பு . |
சடன் | மூடன் , அறிவற்றவன் . |
சடாக்கரம் | காண்க : ஆறெழுத்து . |
சடாக்கரி | காண்க : சடாட்சரி . |
சடாகம் | அருநெல்லிமரம் . |
சடாட்சரம் | காண்க : ஆறெழுத்து . |
சடாட்சரி | உமை . |
சடாடவி | சடைத்திரள் , அடர்ந்த சடை . |
சடாதரம் | காண்க : சடாகம் . |
சடாதரன் | சடைதரித்த சிவன் ; வீரபத்திரன் . |
சடாதரி | பார்வதி . |
சடாதாரம் | ஆறு ஆதாரம் ; அவை : மூலாதாரம் , சுவாதிட்டானம் , மணிபூரகம் , அனாகதம் , விசுத்தி , ஆஞ்ஞை . |
சடாதாரி | சடைதரிதத்வன் , சிவன் ; பார்வதி ; கொடியாள்கூந்தல் ; வரிக்கூத்துவகை . |
சடாபாரம் | சடைக்கற்றை |
சடாமகுடம் | சடைமுடி . |
சடாமகுடன் | சிவன் . |
சடாமாஞ்சி | செடிவகை ; ஒரு மருந்துவகை . |
சடாமாஞ்சில் | செடிவகை ; ஒரு மருந்துவகை . |
சடாமுடி | சடைமுடி , மயிர்த்திரள் . |
சடாமுனி | பேய்வகை . |
சடாய் | சடாயு என்னும் கழுகுவேந்தன் ; காற்சோடுவகை . |
சடாய்த்தல் | துப்பாக்கி கெட்டித்தல் ; பெருமிதமாகப் பேசுதல் ; அதட்டுதல் . |
சடாரி | கவசம் ; சடகோபன் , நம்மாழ்வார் . |
சடாரிடல் | ஓர் ஒலிக்குறிப்பு . |
சடாரெனல் | ஓர் ஒலிக்குறிப்பு . |
சடாலம் | ஆலமரம் ; தேன்கூடு . |
சடாவல்லவன் | சடைமுறையில் வேதப் பகுதிகளைச் சொல்வதில் வல்லவன் . |
சடானன் | ஆறு முகத்தையுடைய முருகன் . |
சடிதி | விரைவு , சீக்கிரம் ; ஏலத்தோல் . |
சடிதிவு | ஏலத்தோல் . |
சடிலம் | செறிவு , நெருக்கம் ; வேர் ; குதிரை ; சடையாக அமைந்த மயிர்முடி . |
சடினம் | வசம்பு நெட்டிவேர் . |
சடுகுடு | ஒருவகை விளையாட்டு . |
சட்டை | மேலாடை ; தைத்த உடை ; பாம்புச் சட்டை ; பாம்பின்தோல் ; உடம்பு ; மதிப்பு ; ஒருவகை நிறை ; பொதி ; தைவேளைப் பூண்டு . |
சட்டைக்காரன் | ஐரோப்பியருக்கும் இந்தியருக்கும் பிறந்த சாதியான் . |
சட்டைகழற்றுதல் | பாம்புதோல் உரித்தல் . |
சட்டைநாதன் | சட்டை அணிந்தவன் ; சிவன் ; வயிரவன் . |
சட்டைப்புரை | மேலாடையில் அமைக்கப்படும் பை . |
சட்டைப்பை | மேலாடையில் அமைக்கப்படும் பை . |
சட்டைபண்ணுதல் | இலட்சியம் செய்தல் . |
சட்பதம் | அறுகால் வண்டு . |
சட்பம் | அறுகம்புல் ; இளம்புல் ; ஆண்பெண் குறிகளை அடுத்துள்ள மயிர் . |
சட்பாவம் | உடலுக்குண்டாகும் இருத்தல் , தோன்றுதல் , உருத்திரிதல் , வளர்தல் , சுருங்குதல் , அழிதல் என்னும் ஆறு நிலைகள் . |
சட்பிதாபுத்திரிகம் | ஐந்து தாளத்துள் ஒன்று . |
சடக்கடை | ஒன்பது . |
சடக்கரம் | காண்க : ஆறெழுத்து . |
சடக்கு | வேகம் ; செருக்கு ; உடல் . |
சடக்குச்சடக்கெனல் | ஈரடுக்கு ஒலிக்குறிப்பு . |
சடக்கெனல் | விரைவுக்குறிப்பு . |
சடக்கோதன் | வசம்பு . |
சடகம் | ஊர்க்குருவி ; கரிக்குருவி ; வட்டில் . |
சடகோபம் | திருமால் கோயில்களில் தரிசிப்போர் முடிமீது வைக்கப்படும் திருமாலின் திருவடிநிலை . |
சடகோபன் | சடம் என்னும் வாயுவை வென்ற நம்மாழ்வார் . |
சடங்கப்படுதல் | மூட்டையாகக் கட்டப்படுதல் ; வேலை செய்துகொண்டிருத்தல் . |
சடங்கப்பூட்டு | குண்டுக்கட்டாய்க் கட்டும் மற்பிடிவகை . |
சடங்கம் | வேதத்திற்கு அங்கமான அறுவகைச் சாத்திரம் ; அவை : சிட்சை , கற்பம் , வியாகரணம் , நிருத்தம் , சந்தோபிசிதம் , சோதிடம் ; பயணமூட்டை ; வருத்தம் ; வேலை ; பதினாறு தூக்களவு . |
சடங்கம்போடுதல் | மூட்டையாகக் கட்டுதல் . |
சடங்கர் | மறைக்குரிய ஆறங்கங்களையும் அறிந்தவன் . |
சடங்கவி | மறைக்குரிய ஆறங்கங்களையும் அறிந்தவன் . |
சடங்காதல் | பெண்மகள் பூப்படைதல் . |
சடங்கு | சாத்திரமும் வழக்கமும்பற்றிய முறையை நடத்தும் கிரியை ; முதற்பூப்புச் சடங்கு ; சாந்திக் கலியாணம் ; குண்டுக் கட்டாய்க் கட்டும் மற்பிடிவகை . |
![]() |
![]() |
![]() |