சொல்
|
அருஞ்சொற்பொருள் |
| சிலுவல் | கந்தை ; எளிமை ; அழகின்மை ; ஒழுங்கின்மை ; மரியாதையின்மை . |
| சிலுவலி | சீர்கெட்டவள் . |
| சிலுவாணம் | செலவுக்குக் கொடுத்ததில் மிகுத்து வைக்கும் பணம் . |
| சிலுவை | கழுமரம் ; கிறித்து அறையப்பட்ட மரம் ; கிறித்தவ சமய சின்னத்துள் ஒன்று . |
| சிலேட்டர் | செட்டிகள் , வணிகர் . |
| சிலேட்டி | செட்டி . |
| சிலேட்டுமம் | உடலிலுள்ள கபக்கூறு . |
| சிலேடித்தல் | இருபொருள்படப் பேசுதல் . |
| சிலேடை | பல பொருள் தரும் பாட்டு ; ஒரு வடிவாய் நின்ற சொற்றொடர் பல பொருளுடையதாக வரும் அணி ; இனிய சொற்றொடர் . |
| சிலேதம் | செம்முருங்கைமரம் . |
| சிலேபணம் | உடலிலுள்ள கபக்கூறு ; இறக்குந்தறுவாயில் தோன்றம் மூச்சு . |
| சிலேபி | ஓர் இனிப்புப் பண்டம் . |
| சிலேற்பனை | காண்க : சிலேபணம் . |
| சிலை | கல்லிற் செதுக்கிய உருவம் ; முழக்கம் ; வில் ; தனுராசி ; மார்கழி மாதம் ; மூல நாள் ; வானவில் ; ஒளி ; வால் ; மருந்து அரைக்கும் குழி அம்மி ; மலை ; அம்மி ; ஒரு மரம் ; சூதகபாடாணம் . |
| சிலைக்கல் | ஈரக்கல் . |
| சிலைத்தல் | ஒலித்தல் ; முழங்குதல் ; யாழொலித்தல் ; கொட்டுதல் ; சினங்கொள்ளுதல் ; பின்னிடுதல் . |
| சிலைநாகம் | சூடாலைக்கல் . |
| சிலைநார் | கல்நார் . |
| சிலைநிறக்கல் | மாமிசச்சிலை . |
| சிலைபாரித்தல் | வில் வளைத்தல் . |
| சிலைமா | மாக்கல் . |
| சிலையடித்தல் | கல்லில் உருவம் செதுக்குதல் . |
| சிலையாவி | காண்க : சிலைநார் . |
| சிலையிராசன் | இரத்தினங்களுள் அரசாகிய வயிரம் . |
| சிலையுடம்பு | புண்கட்டிகள் அடிக்கடி புறப்படுதற்குரிய உடற்கூறு . |
| சிலையோடுதல் | புரையோடுதல் ; எதிரொலித்தல் . |
| சிலைவயிரம் | வயிரக்கல் . |
| சிலைவிந்து | காண்க : சிலைநார் . |
| சிலோச்சயம் | மலை . |
| சிவ்வல் | கடற்பாசி . |
| சிவ்வெனல் | சிவத்தற்குறிப்பு ; விரைவுக்குறிப்பு ; இறுகற்குறிப்பு . |
| சிவக்குறி | சிவலிங்கம் . |
| சிவகணம் | சிவச்சேவைப் பரிவாரம் . |
| சிவகணமுதல் | சிவகணத்தின் தலைவராகிய நந்திதேவர் . |
| சிவகதி | வீடு , முத்தி . |
| சிவகதிக்கிறை | சிவகதிக்குத் தலைவனான அருகன் . |
| சிவகம் | சாதிக்காய் ; நாய்ச்சீரகம் . |
| சிவகரந்தை | ஒரு பூண்டுவகை . |
| சிவகாமி | சிதம்பரத்து அம்பிகை . |
| சிவங்கரன் | மங்களத்தைச் செய்பவனாகிய சிவபெருமான் . |
| சிவங்கரி | மங்களத்தைச் செய்பவளாகிய பார்வதி . |
| சிவச்சி | சாதிக்காய் . |
| சிவசக்தி | சிவனிற் பிரியாத சக்தி . |
| சிவசத்தி | ஐந்துவகைச் சத்தி ; துரிசு . |
| சிவசமயம் | சைவமதம் . |
| சிவசன் | சிவனிடம் பிறந்தவனாகிய சுக்கிரன் . |
| சிவசாதனம் | உருத்திராக்கம் , திருநீறு முதலிய சைவசமயத்திற்குரிய சின்னங்கள் ; உருத்திராக்கம் . |
| சிவசாதாக்கியம் | அருட்சக்தியால் தியான மூர்த்தியாய் நின்ற சிவம் . |
| சிவசித்தர் | சைவ சமயத்திற் கூறிய பரமுத்தியை அடைந்தவர் . |
| சிவசிவ | ஓர் இரக்கக்குறிப்பு . |
| சிவசின்னம் | காண்க : சிவசாதனம் . |
| சிவஞானம் | இறையுணர்வு , தெய்வ அறிவு . |
| சிவஞானி | சிவஞானம் பெற்றோன் . |
| சிவண | உவமைச்சொல் . |
| சிவணுதல் | நட்புக்கொள்ளுதல் ; பொருந்துதல் ; அளவளாவுதல் ; அணுகுதல் ; ஒத்தல் ; பெறுதல் ; |
| சிவத்ததாசி | செடிவகை ; செம்பருத்தி ; செம்பரத்தை . |
| சிவத்தம் | செம்முருங்கைமரம் . |
| சிவத்தல் | சிவக்குதல் ; கோபித்தல் ; சினக்குறிப்பு . |
| சிவத்துருமம் | வில்வமரம் . |
| சிவதடி | வெள்ளரி . |
| சிவதரம் | அதிக மங்களமானது . |
| சிவதலம் | சிவபிரான் கோயில்கொண்ட இடம் . |
| சிவதாரம் | தேவதாரு என்னும் மரவகை . |
| சிவதுளசி | திருநீற்றுப்பச்சை . |
| சிவதூதி | துர்க்கை . |
| சிவதை | கொடிவகை . |
| சிவந்தசோறு | தீயந்துபோன சோறு . |
| சிவந்தவேசை | செமபரத்தைச்செடி . |
| சிவந்தி | பாலைவகை ; பூச்செடிவகை ; கடுக்காய்வகை . |
| சிவந்திரம் | கைம்மாறு ; வேலையில் இருப்பவர்க்கு அம் முறையில் கொடுக்கும் சுதந்தரம் . |
| சிவநாபம் | ஒருவகை இலிங்கம் . |
| சிவநிசி | சிவராத்திரி . |
| சிவப்பன் | செந்நிறமுள்ளவன் . |
| சிவப்பி | செந்நிறமுள்ளவள் ; செந்தெங்கு . |
| சிவப்பிராமணர் | காண்க : ஆதிசைவர் . |
|
|
|