சொல்
|
அருஞ்சொற்பொருள் |
| சிவப்பிரியம் | உருத்திராக்கம் . |
| சிவப்பிரியை | சிவபிரானிடம் அன்புடையாளாகிய பார்வதிதேவி . |
| சிவப்பு | செந்நிறம் ; சிவப்புக்கல் ; சீட்டு முதலிய விளையாட்டுகளில் வென்ற கட்சிக்கு இடும் குறியீடு ; கோபம் ; கறுப்பு . |
| சிவப்புக்கந்தி | கோழித்தலைக் கந்தகம் . |
| சிவப்புக்கல் | ஈரற்கல் ; ஒரு மணிவகை . |
| சிவப்புச்சிலை | கெம்பு . |
| சிவப்பூர்தல் | சிவந்தநிறமடைதல் . |
| சிவப்பேறு | சிவமாம் தன்மையை அடைகை . |
| சிவபண்டாரி | சிவாலயக் கருவூலக்காரன் . |
| சிவபதம் | சிவனடியார்கள் தத்தம் பரிபாகத்திற்கு ஏற்ப அடையும் தான் ஆள் உலகிருத்தல் , தன்பால் இருத்தல் , தான் ஆம் பதம் பெறல் , தான் ஆகுதல் என்னும் நால்வகைச்சிவபதவி . |
| சிவபாத்தியன் | சிவனடியான் . |
| சிவபீசம் | காண்க : சிவவிந்து . |
| சிவபுரம் | சிவலோகம் . |
| சிவபூசை | சிவவழிபாடு . |
| சிவபோகம் | சிவானந்தம் . |
| சிவம் | மங்களம் ; உயர்வு ; களிப்பு ; நன்மை ; குறுணி ; முத்தி ; கடவுளின் அருவுரு நிலை ; சிவத்துவம் . |
| சிவமது | சிறுபுள்ளடிப்பூடு . |
| சிவமயம் | சிவமாந்தன்மை ; மங்கலமொழி . |
| சிவமரம் | வெண்கடப்பமரம் ; சவுக்குமரம் . |
| சிவமல்லி | காண்க : கொக்குமந்தாரை . |
| சிவயோகி | சிவயோகத்தால் முத்தியடைந்தோர் ; காண்க : வசம்பு . |
| சிவரசம் | மூன்றுநாள் ஊறிய கஞ்சி ; பாதரசம் . |
| சிவராத்திரி | சிவனடியார்கள் நாள் முழுதும் பட்டினியிருந்து இரவெல்லாம் கண்விழித்துச் சிவனைப் பலகாலம் அருச்சித்து மாசி மாதத்துக் கிருட்டின சதுர்த்தசியில் கொண்டாடும் மகாசிவராத்திரி விரதம் . |
| சிவல் | கவுதாரி ; காடைவகை ; செந்நிலம் ; பகன்றைக்கொடி . |
| சிவலை | சிவப்பு நிறமுள்ள ஆள் ; சிவப்புநிறமுள்ளது ; செந்நிற விலங்கு . |
| சிவலோகச்சேவகன் | காந்தம் . |
| சிவலோகம் | கைலாசம் . |
| சிவவல்லபம் | எருக்கு ; ஒருவகை நாவல் ; செவந்திச் செடி . |
| சிவவிந்து | இதள் , பாதரசம் . |
| சிவவெற்பு | பழநி . |
| சிவவேடம் | உருத்திராக்கம் முதலிய சிவசின்னம் தரித்த கோலம் . |
| சிவளிகை | தலையணி . |
| சிவளிகைக்கச்சு | உடைமேல் கட்டும் கச்சு . |
| சிவன் | மும்மூர்த்திகளுள் ஒருவரான அழிக்கும் கடவுள் ; சிவனடியார்க்கு வழங்கிய சிறப்புப் பெயர் . |
| சிவனார்கிழங்கு | காண்க : கார்த்திகைக்கிழங்கு . |
| சிவனார்பாகல் | கோவைக்கொடி ; ஐவிரலிக்கொடி . |
| சிவனார்வேம்பு | ஒரு செடிவகை . |
| சிவனி | கழுதை . |
| சிவா | கடுக்காய் ; கீழாநெல்லி ; ஆடுதின்னாப் பாளை ; வன்னிமரம் . |
| சிவாசாரியர் | ஆதிசைவர்களுடைய பட்டப்பெயர் . |
| சிவாட்சம் | உருத்திராக்கமணி . |
| சிவாதரம் | மரக்கொம்பு . |
| சிவாயநம | சைவர்களால் போற்றப்படும் ஐந்தெழுத்து மந்திரம் . |
| சிவார்ச்சனம் | சிவபூசை . |
| சிவார்ச்சனை | சிவபூசை . |
| சிவாருகம் | ஆலமரம் . |
| சிவாலயம் | சிவன்கோயில் . |
| சிவானுபூதி | சிவனோடு இரண்டறக் கலக்கும் அனுபவம் . |
| சிவிகரம் | சாதிக்காய் . |
| சிவிகை | பல்லக்கு ; எருதுபூட்டிய வண்டிவகை . |
| சிவிகையார் | பல்லக்குச் சுமக்கும் சாதியார் . |
| சிவிங்கி | ஒரு விலங்குவகை ; ஒரு பறவைவகை ; சிறுத்தை . |
| சிவிட்கு | கோபம் . |
| சிவிட்கெனல் | பொறுமையின்மைக் குறிப்பு ; விரைவுக்குறிப்பு . |
| சிவிடு | சிறிது ; முந்நூற்றறுபது நெல் பிடிக்கும் அளவு . |
| சிவிரம் | படையெடுத்த அரசன் தங்குமிடம் , பாசறை . |
| சிவிறி | விசிறி ; நீர்வீசும் கருவி . |
| சிவிறுதல் | பரத்தல் ; காண்க : விசிறுதல் . |
| சிவுகம் | மோவாய் . |
| சிவேதை | செடிவகை ; நாணல் . |
| சிவேரெனல் | செந்நிறக்குறிப்பு . |
| சிவை | பார்வதி ; காளி ; நரி ; வேர் ; உலைமூக்கு ; நெல்லிக்காய் . |
| சிவைக்கியம் | சிவனும் உயிரும் ஒன்றாய் இருத்தல் . |
| சிவோகம்பாவனை | சிவனே நான் என்று பாவித்தல் . |
| சிழகுதல் | விம்முதல் . |
| சிள்வண்டு | சுவர்க்கோழி . |
| சிள்வீடு | சுவர்க்கோழி . |
| சிள்ளீடு | சுவர்க்கோழி . |
| சிள்ளுப்புள்ளெனல் | சினக்குறிப்பு . |
| சிள்ளெனல் | விரைவுக்குறிப்பு ; ஆரவாரக் குறிப்பு . |
| சிளுசிளுத்தல் | இரைச்சற்குறிப்பு ; பதனழிவு . |
| சிளுசிளெனல் | ஓர் ஒலிக்குறிப்பு . |
| சிளுபுளெனல் | ஓர் ஒலிக்குறிப்பு . |
| சிளைத்தல் | சோர்தல் . |
| சிற்குணம் | மெய்யறிவு , ஞானமாகிய குணம் . |
|
|
|