சொல்
|
அருஞ்சொற்பொருள் |
| செவிடன் | காது கேளாதவன் . |
| செவிடி | காது கேளாதவள் . |
| செவிடு | காது கேளாமை ; கன்னம் ; காது கேளாதவர் ; ஆழாக்கில் ஐந்திலொன்றாகிய அளவு ; காதணிவகை . |
| செவிடுசெல்லுதல் | ஓசை மிகுதியால் காது கேளாது போதல் ; காண்க : செவிடெறிதல் . |
| செவிடுபடுதல் | ஓசை மிகுதியால் காது கேளாது போதல் ; காண்க : செவிடெறிதல் . |
| செவிடெறிதல் | சத்தத்தால் அலைவுறுதல் . |
| செவித்துறண்டி | குறும்பிவாங்கி . |
| செவிதாழ்த்தல் | காண்க : செவிகொடுத்தல் . |
| செவிதின்னுதல் | இரகசியம் பேசுதல் . |
| செவிநிறக்கல் | காண்க : மாந்தளிர்க்கல் . |
| செவிப்படுத்துதல் | காதில் மெல்ல அறிவித்தல் . |
| செவிப்படுதல் | கேட்கப்படுதல் . |
| செவிப்பண் | நீர்க்கரகத்தை அடக்கிவைக்க உதவும் பிரம்புக்கூடை . |
| செவிப்பறையறைதல் | மந்திரம் முதலியவற்றைப் பிறர் செவியிற் படாதவாறு இரகசியமாகக் கூறுதல் . |
| செவிப்பாடு | கேள்வியால் வரும் இன்பம் ; காதில் புகுகை . |
| செவிப்பாம்பு | காண்க : செவிப்பூரான் ; மாட்டுக் குற்றவகை . |
| செவிப்புலன் | காதால் உணரும் ஓசையுணர்வு . |
| செவிப்புற்று | காதுநோய்வகை . |
| செவிப்பூரான் | காதுக்குள் சென்று துன்புறுத்தும் பூரான்வகை . |
| செவிபடுவாதம் | காது கேளாமற் செய்யும் நோய்வகை . |
| செவிமடல் | காதின் வெளியுறுப்பு ; காண்க : செவிமலர் . |
| செவிமடுத்தல் | கேட்டல் . |
| செவிமந்தம் | செவிடு . |
| செவிமலர் | ஒரு காதணிவகை ; மகளிர் காதணிவகை ; தெய்வத் திருமேனிகளிற் சாத்தும் காதோலை ; காதுநோய் நீங்கியமைக்காகச் செலுத்தும் செவியுருவம் ; உட்செவி . |
| செவிமறை | செவியில் மறுவுள்ள எருது . |
| செவிமாட்டுதல் | பிறர் காதில் வலிய நுழைத்தல் . |
| செவியடி | காதின் அடிப்பகுதி ; களத்தில் கதிரடித்தவுடன் நெற்பட்டறை வைத்திருந்த இடம் . |
| செவியடித்தல் | காதாட்டுதல் . |
| செவியம் | காண்க : செவ்வியம் . |
| செவியறிவு | காண்க : செவியறிவுறூஉ . |
| செவியறிவுறுத்தல் | நல்லறிவு புகட்டுதல் . |
| செவியறிவுறூஉ | அரசர் முதலியோர்க்குச் செவிக்கண் நிற்கக் கூறும் நீதி ; அரசர்க்கு நல்லறிவு புகட்டுதலைக் கூறும் புறத்துறை ; ஒரு நூல்வகை . |
| செவியறை | காண்க : காதறை . |
| செவியன் | முயல் . |
| செவியான் | காண்க : செவிப்பூரான் . |
| செவியிலி | காண்க : செவியறை . |
| செவியுறை | காதுக்கிடும் மருந்து ; செவிக்கண் நிற்கக் கூறும் நீதி . |
| செவியுறையங்கதம் | அரசர்க்கு உறுதிகூறும் நோக்குடன் அறிஞர் கூறும் வசைச்செய்யுள் . |
| செவியேறு | கேள்வி . |
| செவிரம் | ஒரு பாசிவகை . |
| செவிலி | வளர்ப்புத்தாய் ; முன்பிறந்தவள் . |
| செவிலித்தாய் | வளர்ப்புத்தாய் . |
| செவிள் | காதின் மேற்புறத்து உறுப்பு . |
| செவுள் | மீனின் மூச்சு உறுப்பு . |
| செவேரெனல் | சிவந்திருத்தற் குறிப்பு . |
| செவை | காண்க : செவ்வை . |
| செழிச்சி | செழிப்பு ; வளம் . |
| செழித்த கல் | சுக்கான் கல் . |
| செழித்தல் | தழைத்தல் ; வளம் பெருகுதல் ; சிறப்பு நிலையில் இருத்தல் ; அளவுக்கு மிஞ்சியிருத்தல் ; முகமலர்ச்சியுறுதல் . |
| செழிதல் | வளர்தல் . |
| செழிப்பம் | வளம் ; நிறைவு ; பொலிவு . |
| செழிப்பு | வளம் ; நிறைவு ; பொலிவு . |
| செழியன் | பாண்டியன் . |
| செழுகம் | அட்டை . |
| செழுகை | சாணளப்பான் புழு . |
| செழுசெழுத்தல் | மிகு வளப்பமாதல் ; தழைத்தல் . |
| செழுஞ்சோறு | கொழுத்த உணவு . |
| செழுத்து | வளம் . |
| செழுந்து | நிறைவு . |
| செழுப்பம் | வளம் ; நிறைவு . |
| செழும்பல் | வளம் ; நிறைவு . |
| செழுமறை | நெருப்பு . |
| செழுமை | செழிப்பு ; மாட்சிமை ; தழைவு ; அழகு . |
| செழுவிதின் | செம்மையாக . |
| செள்ளு | தெள்ளுப்பூச்சி ; உண்ணிவகை . |
| செளிம்பன் | குணக்கேடன் . |
| செளிம்பு | களிம்பு ; பிடிவாதம் . |
| செளிம்பூறல் | களிம்புப் பற்று . |
| செளுகம் | அட்டை . |
| செளுகை | அட்டை . |
| செளைப்பு | சோர்வு . |
| செற்றம் | மனவயிரம் ; நெடுங்காலம் நிகழ்வதாகிய பகைமை ; வெறுப்பு ; தணியாக்கோபம் ; ஊடற்சினம் . |
| செற்றல் | கொல்லுதல் ; அழித்தல் ; கேடு ; செறிவு ; ஈமுட்டை . |
| செற்றலர் | பகைவர் . |
| செற்றார் | பகைவர் . |
|
|
|