சொல்
|
அருஞ்சொற்பொருள் |
| தருமக்கட்டை | பிறர் தருமத்தால் வாழும் உடலான அநாதப்பிள்ளை ; ஆவுரிஞ்சு தறி . |
| தருமக்கல் | ஒருவன் செய்த அறங்கள் வரையப்பட்ட கல்வெட்டு . |
| தருமக்கிழவர் | தருமத்தைக் காப்பவர் ; அறச்செயல் புரிதற்குரிய வணிகர் . |
| தருமகர்த்தா | கோயில் அதிகாரி ; நீதி உரைக்கும் அதிகாரி . |
| தருமகாரியம் | அறச்செயல் . |
| தருமச்செல்வி | காண்க : தருமதேவதை ; பார்வதி . |
| தருமச்செலவு | அறத்திற்காகச் செய்யும் செலவு . |
| தருமச்சக்கரம் | அறவாழி . |
| தருமசங்கடம் | மாறுபட்ட இரு கடமைகளுள் எதைச் செய்வது என்று அறியாது துன்புறும் நிலை . |
| தருமசத்திரம் | அறக்கூழ்ச்சாலை , அன்னசத்திரம் . |
| தருமசபை | நீதிமன்றம் . |
| தருமசாசனம் | அறச்செயலைக் குறிக்கும் செப்புப் பட்டயம் . |
| தருமசாதனம் | அறச்செயலைக் குறிக்கும் செப்புப் பட்டயம் . |
| தருமசாலி | அறஞ்செய்வோன் . |
| தருமசாலை | தருமசத்திரம் ; முப்பத்திரண்டு அறங்களையும் புரிதற்குரிய இடம் . |
| தருமசிந்தை | அறம்புரியுங் கருத்து . |
| தருமசீலன் | அறஞ்செய்பவன் . |
| தருமசீலி | அறம்புரிபவள் . |
| தருமணல் | புதிதாகக் கொணர்ந்து பரப்பும் மணல் . |
| தருமத்தியானம் | ஆன்மா ஈடேறுவதைப்பற்றிய நினைவு . |
| தருமதலைவன் | தருமத்திற்குரிய தலைவனான புத்தன் . |
| தருமதாயம் | அறத்திற்காக விடும் இறையிலி நிலம் . |
| தருமதானம் | சமய தருமப்படி செய்யும் தானம் . |
| தருமதி | நிலுவை . |
| தருமதேவதை | அறக்கடவுள் ; இயக்கிதேவி ; யமன் . |
| தருமநாள் | பரணிநாள் . |
| தருமநியாயம் | அறநூல்களில் கூறும் நீதி . |
| தருமநீதி | அறநூல்களில் கூறும் நீதி . |
| தருமப்பள்ளி | அறப்புறமான கல்விச்சாலை . |
| தருமப்பிணம் | ஊராராற் சுடப்படும் அநாதப்பிணம் . |
| தருமப்பெட்டி | தருமக் காணிக்கையிடும் பெட்டி . |
| தருமபத்தினி | கணவனோடு உடனிருந்து வைதிகக் கருமங்களை நடத்தும் மனைவி . |
| தருமபீடிகை | புத்தர் பாதங்கள் அமைந்த பீடம் . |
| தருமபுத்திரன் | பாண்டவருள் மூத்தோன் ; தருமபத்தினியிடம் பிறந்த மகன் . |
| தருமபுரம் | யமலோகம் ; சைவமடமுள்ள ஒரு சோணாட்டுத்தலம் . |
| தருமம் | நற்செயல் ; விதி ; நீதி ; தானம் முதலிய அறம் ; நல்லொழுக்கம் ; கடமை ; இயற்கை ; பதினெண்வகைப்பட்ட அறநூல் . |
| தருமமன்று | தருமசபை . |
| தருமமுதல்வன் | அருகக்கடவுள் . |
| தருமமூர்த்தி | தருமமே உருவானவன் . |
| தருமராசன் | பாண்டவருள் மூத்தவன் ; புத்தன் ; அருகன் ; யமன் ; பாலைமரம் . |
| தருமரேகை | அறஞ்செய் குணத்தைக் குறிக்கும் கைரேகை . |
| தருமலோபம் | அறக்கடமை தவறுகை . |
| தருமவட்டி | நியாயவட்டி . |
| தருமவதி | அறச்செயலுள்ள பெண் . |
| தருமவந்தன் | காண்க : தருமவான் . |
| தருமவாகனன் | அறமே வடிவான காளையை ஊர்தியாகக் கொண்ட சிவன் . |
| தருமவாசனம் | காண்க : தருமசபை . |
| தருமவாட்டி | அறச்செயலுள்ள பெண் . |
| தருமவாடி | பிச்சை வழங்குமிடம் . |
| தருமவாளன் | அறச்சிந்தையுள்ளோன் . |
| தருமவான் | அறச்சிந்தையுள்ளோன் . |
| தருமவினைஞர் | அறப்புறங் காவலர் . |
| தருமவைத்தியசாலை | நோயாளிகளுக்குப் பொருள் வாங்காது மருத்துவம் செய்யுமிடம் . |
| தருமன் | அறக்கடவுள் ; யமன் ; தருமபுத்திரன் ; புத்தன் ; அருகன் ; பாண்டவருள் மூத்தோன் ; திருக்குறள் உரைகாரருள் ஒருவர் . |
| தருமாசனத்தார் | நீதிபதிகள் . |
| தருமாசனத்துக் கருத்தாக்கள் | நீதிபதிகள் . |
| தருமாசனம் | காண்க : தருமசபை ; பார்ப்பனருக்குவிட்ட இறையிலி நிலம் . |
| தருமாத்திகாயம் | சமரணது பஞ்சாஸ்திகாயத்துள் மீனுக்கு நீர்போலச் சீவனது செலவுக்கு உதவும் பொருள் . |
| தருமாத்துமா | காண்க : தருமவான் . |
| தருமாதருமம் | நியாய அநியாயம் . |
| தருமி | காண்க : தருமவான் ; ஒரு வேதியத் தொண்டன் ; தருமத்தையுடைய பொருள் . |
| தருமிருகம் | குரங்கு . |
| தருராசன் | மரங்களின் அரசனாகிய பனை . |
| தருவாரி | கல்லுப்பு . |
| தருவி | துடுப்பு ; ஓமத்திற்கொள்ளும் இலைக்கரண்டி ; பேர் மாத்திரத்துக்கு உள்ளது . |
| தருவித்தல் | வருவித்தல் |
| தருவை | பெரிய ஏரி . |
| தரூடம் | தாமரைப்பூ . |
| தரை | பூமி ; நிலம் ; ஆணித்தலை ; நரம்பு ; சூற்பை . |
| தரைக்காற்று | பூமியில் எழுந்து வீசுங்காற்று . |
| தரைகாணுதல் | அளவிடுதல் ; கீழ்விழுதல் . |
| தரைதட்டுதல் | கப்பல் தரையில் மோதுதல் . |
| தரைப்படுத்துதல் | தோற்கச்செய்தல் . |
| தரைமகன் | பூமியின் மகனான செவ்வாய் . |
| தரைமட்டம் | நிலமட்டம் . |
|
|
|