சொல்
|
அருஞ்சொற்பொருள் |
| தறுகணாளன் | காண்க : தறுகண்ணன் . |
| தறுகணி | வன்கண்மையுள்ளவள் . |
| தறுகுதல் | தடைப்படுதல் ; தவறுதல் ; திக்கிப்பேசுதல் ; தாமதித்தல் . |
| தறுகுறும்பன் | தீயோன் ; முரடன் . |
| தறுகுறும்பு | முருட்டுத்தன்மை ; தீம்பு . |
| தறுசு | இழைக்குளிர்த்தி . |
| தறுதல் | இறுக உடுத்துதல் ; கட்டுதல் . |
| தறுதலை | அடங்காதவன் . |
| தறுதலையன் | அடங்காதவன் . |
| தறுதும்பன் | அடங்காதவன் . |
| தறும்பு | நீரணை ; முளை . |
| தறுவாய் | உற்ற சமயம் ; பருவம் . |
| தறுவுதல் | குறைதல் . |
| தறைதல் | ஆணி முதலியவற்றை இறுக்கல் ; தைத்தல் ; குற்றப்படுத்துதல் ; தட்டையாதல் . |
| தறைமலர் | ஆணியின் மரை . |
| தறையடித்தல் | நிலத்தில் அசையாமல் இருத்துதல் . |
| தன் | தான் என்னும் சொல் வேற்றுமையுருபை ஏற்குமிடத்துப் பெறும் திரிபு . |
| தன்கடையே | தன்னடைவே . |
| தன்காரியக்குட்டி | தன்னலக்காரன் . |
| தன்காரியம் | சொந்தச் செயல் . |
| தன்காலம் | உரிய பருவம் ; கள் மிகுதியாகக் கிடைக்கும் காலம் . |
| தன்கு | மகிழ்ச்சி . |
| தன்குலம்வெட்டி | தன்குலத்தை அழிப்பதான கோடரிக்காம்பு . |
| தன்கோட்கூறல் | முன்னூல் ஆசிரியர் கூறியவாறு கூறாது தன் கோட்பாட்டாற் கூறுகை . |
| தன்தரை | வெறுந்தரை ; போடு மண்ணின்றி இயற்கையான தரை . |
| தன்படியே | தானாகவே ; தன்னிச்சைப்படி . |
| தன்படுவன் | தானாக உண்டாகும் விளையுப்பு . |
| தன்பாட்டில் | தானாகவே ; பிறர் செயலில் தலையிடாமல் . |
| தன்பாடு | தன் செயல் ; தன் உழைப்பு . |
| தன்பிடி | தன் கொள்கை . |
| தன்பேறு | சொந்தப் பயன் . |
| தன்பொறுப்பு | தனதாக ஏற்றுக்கொள்ளும் கடமை . |
| தன்மசரணம் | தருமத்தைச் சரண்புகுகை . |
| தன்மணி | அறச்சிந்தனை உள்ளவன் . |
| தன்மதிப்பு | தற்பெருமை . |
| தன்மப்பயிர் | அறத்தை விளைவிக்கும் பயிரான பேருபகாரி . |
| தன்மப்புத்திரன் | காண்க : தருமபுத்திரன் . |
| தன்மம் | தருமம் ; சலாசனவகை . |
| தன்மயம் | தன் இயற்கை ; திறமை ; வேறொன்றனொடு ஒன்றுபடுகை . |
| தன்மயமாதல் | வேறுபாடின்றி ஒன்றாதல் . |
| தன்மராசா | தருமபுத்திரன் ; பாலைமரம் ; அறச்சிந்தனையுள்ளவன் . |
| தன்மன் | யமன் ; தருமபுத்திரன் ; திப்பிலி . |
| தன்மாத்திகாயம் | பஞ்சாஸ்திகாயத்துள் மீனுக்கு நீர்போலச் சீவனது செலவுக்குச் சாதனமான பொருள் . |
| தன்மாத்திரை | ஐம்பொறிகளுக்குக் காரணமான சுவை , ஒளி , ஊறு , ஒசை , நாற்றம் என்னும் மூலப்பொருள்கள் . |
| தன்மானி | வறுமை . |
| தன்மி | காண்க : தருமி . |
| தன்மிட்டன் | அறச்சிந்தை உள்ளவன் ; நன்னெறியில் ஒழுகுபவன் . |
| தன்மூப்பு | இறுமாப்பு ; எதேச்சை . |
| தன்மேம்பாட்டுரை | தற்புகழ்ச்சி அணி . |
| தன்மை | குணம் ; இயல்பு ; நிலைமை ; முறை ; பெருமை ; ஆற்றல் ; நன்மை ; மெய்ம்மை ; தன்னைக் குறிக்குமிடம் ; ஒரணி . |
| தன்மைநவிற்சி | பொருள் முதலியவற்றை இயற்கையிலுள்ளவாறே கூறும் அணி . |
| தன்மைமிகுத்துரை | ஒரு பொருளின் இயல்பை மிகுத்துக் கூறுகை . |
| தன்வசப்படுத்துதல் | தன்னுடையதாக்குதல் . |
| தன்வயத்தனாதல் | கடவுள் எண்குணத்துள் சுதந்தரனாந் தன்மை . |
| தன்வழி | தன் மரபு ; தன் விருப்பம் . |
| தன்வினை | ஊழ்வினை ; இயற்றுதற் கருத்தாவின் வினையை உணர்த்துஞ் சொல் ; தனது செயல் . |
| தன்வேதனை | தன் அனுபவம் . |
| தன்னடக்கம் | தன்னைக் கட்டுப்பாடு பண்ணல் ; அமைதி . |
| தன்னடிச்சோதி | பரந்தாமனது திருவடியின் ஒளியாகிய பரமபதம் . |
| தன்னந்தனி | முற்றுந்தனிமை . |
| தன்னந்தனித்தல் | முழுதும் தனிமையாதல் . |
| தன்னம் | பசுவின்கன்று ; மான்கன்று ; மரக்கன்று ; சிறுமை . |
| தன்னமை | நட்பு ; இணக்கம் . |
| தன்னயம் | தன்னலம் . |
| தன்னரசு | சுதந்தர அரசு ; அரசியலற்றிருக்கை . |
| தன்னரசுநாடு | ஒருவன் தன் இச்சைப்படி ஆளும் நாடு ; அராசக நாடு . |
| தன்னலம் | சுயநலம் . |
| தன்னவன் | தன்னைச் சேர்ந்தவன் . |
| தன்னறிவு | சுயவறிவு ; மயக்கமற்ற அறிவு . |
| தன்னாட்சி | சுய ஆட்சி . |
| தன்னாரவண்ணம் | மனப்பாங்கின்படி . |
| தன்னிச்சை | தன்விருப்பம் ; சுதந்தரம் . |
| தன்னியம் | முலைப்பால் . |
| தன்னியல்பு | சிறப்புக்குணம் . |
| தன்னியன் | செல்வமுடையோன் ; பாக்கியவான் . |
|
|
|