சொல்
|
அருஞ்சொற்பொருள் |
| தன்னியாசி | ஒரு பண்வகை . |
| தன்னிலை | இயல்புநிலை ; சமனாய் நிற்கை . |
| தன்னினமுடித்தல் | ஒன்றைச் சொல்லுமிடத்து விரிவுறாமைவேண்டி அதற்கினமாகிய மற்றொன்றையும் அதனோடு கூட்டி முடித்தலாகிய உத்தி . |
| தன்னினி | வேங்கைமரம் . |
| தன்னீங்கள் | எதேச்சை ; தன்னுரிமையாக்கல் ; தொடர்பின்மை . |
| தன்னுண்மை | பரப்பிரமத்தின் உண்மை அறிவு இன்பமாய இயல்பு ; சிறப்பியல்பு . |
| தன்னுணர்ச்சி | தன்னறிவு ; ஞாபகம் . |
| தன்னுதல் | சிறிதுசிறிதாக எடுத்தல் ; தோணியை மெல்லத் தள்ளுதல் ; பொருந்துதல் . |
| தன்னுதோணி | சிறிய படகு . |
| தன்னூட்டி | தாய்ப்பாலைத் தடையின்றி உண்டு வளர்ந்த சேங்கன்று . |
| தன்னேத்திரம் | காண்க : கோமேதகம் . |
| தன்னேற்றம் | தன்னைச் சார்ந்த இனத்தார் ; சிறப்பாய் அமைந்த பெருமை . |
| தன்னை | தலைவன் ; தமையன் ; தமக்கை ; தாய் . |
| தன்னைக்கட்டுதல் | போதியதாதல் ; மந்திரத்தால் தன்னைக் காத்தல் ; வசப்படுத்துதல் ; சம்மதித்தல் ; குறை நீக்குதல் ; செட்டாக நடத்துதல் ; நிருவகித்தல் . |
| தன்னையறிதல் | தனது உண்மைத் தன்மையை உணர்தல் ; பூப்படைதல் . |
| தன்னைவேட்டல் | தலைவனுடன் வீரன் தன்னுயிர் மாய்த்தலைக் கூறும் புறத்துறை ; இறந்த கணவனுடலைப் போர்க்களத்தில் அவன் மனைவி தேடுதலைக் கூறும் புறத்துறை . |
| தன்னொழுக்கம் | தன்னிலைக்குத் தக்க நடை . |
| தன்னோர் | தன்னைச் சார்ந்தவர் . |
| தனக்கட்டு | பெருஞ்செல்வம் . |
| தனகரன் | கள்வன் ; குபேரன் ; சுதந்தரன் . |
| தனகு | மனக்களிப்பு . |
| தனகுதல் | சரசஞ்செய்தல் ; உள்ளங்களித்தல் ; சண்டைசெய்தல் . |
| தனசாரம் | காண்க : தன்னியம் . |
| தனஞ்சயன் | அருச்சுனன் ; உடலைவிட்டு உயிர் நீங்கினும் தான் நீங்காது சிறிது நேரம் நின்று வெளியேறும் வளி ; நெருப்பு . |
| தனஞ்செயகாரம் | படிக்காரம் . |
| தனத்தோர் | பொருள் ஈட்டுதற்குரிய வணிகர் . |
| தனதன் | குபேரன் . |
| தனதாள் | சொந்த வேலைக்காரன் ; உடந்தையாயிருக்கும் ஆள் . |
| தனதானியம் | பொன்னும் விளைபொருள்களும் . |
| தனது | சொந்தம் ; உரிமை . |
| தனதுபண்ணுதல் | தன்வயப்படுத்துதல் . |
| தனந்தயன் | பாலுண்ணும் குழந்தை . |
| தனபதி | குபேரன் . |
| தனபதித்துவம் | செல்வநிலை ; கொடைக்குணம் . |
| தனபாரம் | கொங்கைச்சுமை . |
| தனம் | செல்வம் ; பொன் ; பொருள் ; முலை ; தன்மை ; உத்திரம் ; பசுவின்கன்று ; வருத்தம் ; கூட்டற்கணக்கு ; பண்புணர்த்தற்குப் பெயரின் பின்வரும் இடைச்சொல் ; சாதகத்தில் சென்மலக்கினத்திலிருந்து செல்வத்தைக் குறிக்கும் இடமான இரண்டாம் வீடு . |
| தனமதம் | பொருட்செருக்கு . |
| தனயன் | மகன் . |
| தனயை | மகள் . |
| தனரேகை | பொருள் நிலையைக் காட்டும் கைக்கோடு . |
| தனலக்குமி | செல்வமாகிய திரு . |
| தனவந்தன் | செல்வன் . |
| தனவனா | ஆச்சாமரம் . |
| தனவான் | செல்வன் . |
| தனவை | சிறுகாஞ்சொறி . |
| தனவைசியர் | மூவைசியருள் பொன்வணிகர் ; நாட்டுக்கோட்டைச் செட்டிமார் . |
| தனவையாதம் | காண்க : தனவை . |
| தனன் | வணிகர் பட்டப்பெயர் . |
| தனாசி | ஒரு பண்வகை . |
| தனாட்டி | செல்வமுடையவள் . |
| தனாட்டியன் | செல்வன் . |
| தனாதிபதி | குபேரன் . |
| தனாதிபதின் | குபேரன் . |
| தனாது | தன்னுடையது . |
| தனி | ஒற்றை ; தனிமை ; ஒப்பின்மை ; உரிமை ; கலப்பின்மை ; உதவியின்மை ; சீட்டாட்டத்தில் ஒருவனே எல்லாச் சீட்டையும் பிடிக்கை ; தேர் நெம்புந் தடி . |
| தனிக்காட்டுராசா | காட்டுத்தலைவன் ; கட்டுக்கு அடங்காதவன் . |
| தனிக்குடி | தனியாகப் பிரிந்துவாழுங் குடும்பம் . |
| தனிக்குடித்தனம் | குடும்பத்திலிருந்து பிரிந்து தனித்து வாழ்ந்துவருகை ; மனைவியுடன் தனி வீட்டில் வாழ்க்கை நடத்துகை . |
| தனிக்குடை | தனியரசாட்சி . |
| தனிக்கோல் | தனியரசாட்சி . |
| தனிகம் | கொத்துமல்லி . |
| தனிகன் | செல்வன் . |
| தனிகை | இளம்பெண் ; கற்புடையவள் . |
| தனிச்சி | கணவனைப் பிரிந்து தனித்திருப்பவள் . |
| தனிச்சித்தம் | அமைதியான மனம் . |
| தனிச்செய்கை | பிறருடன் சேராது தானே செய்யும் வேளாண்மை . |
| தனிச்சொல் | கலிப்பா முதலியவற்றில் ஆங்கு என்பதுபோலத் தனித்து வருஞ்சொல் ; தனிச்சீர் . |
| தனிசர் | கடன் வாங்கினோர் , கடன்காரராகிய குறும்பரசர் . |
| தனிசு | கடன் . |
| தனிட்டை | அவிட்டநாள் ; அவிட்டம் முதலிய ஐந்து நட்சத்திரங்கள் . |
| தனித்தகுடி | அநாதக் குடும்பம் . |
| தனித்தல் | ஒன்றியாதல் ; நிகரற்றிருத்தல் ; உதவியற்றிருத்தல் . |
| தனித்தன்மைப்பன்மை | தன்னொருவனையே குறிக்கும் தன்மைப்பன்மை . |
| தனித்தனி | ஒவ்வொன்றாய் அல்லது ஒவ்வொருவராய் . |
| தனித்தாள் | ஒன்றியாள் ; உதவியற்ற ஆள் ; ஒற்றைக் காகிதம் . |
|
|
|