சொல்
|
அருஞ்சொற்பொருள் |
| திருநாமக்கத்திரி | ஒரு பாம்புவகை . |
| திருநாமச்செடி | ஒரு செடிவகை . |
| திருநாமத்துக்காணி | தேவதான நிலம் . |
| திருநாமத்துத்தி | ஒரு பூடுவகை . |
| திருநாமப்பாட்டு | இயற்றியவரின் பெயர் , பயன் முதலியவை கூறும் பதிகவிறுதிப் பாட்டு . |
| திருநாமப்பாலை | ஒரு பூடுவகை . |
| திருநாமம் | தெய்வம் அல்லது பெரியோரின் பெயர் ; வைணவர் தரிக்கும் ஊர்த்துவ புண்டரம் ; மதிப்புவாய்ந்த மக்கள் . |
| திருநாள் | விழாநாள் ; பிறந்தநாள் . |
| திருநாளைப்போவார்நாயனார் | தில்லையைக் காண நாளைப் போவேன் என்றவராகிய நந்தனார் . |
| திருநிலைமகளிர் | சுமங்கலிகள் . |
| திருநீலக்கண்டன் | கரிய கழுத்தையுடையவனான சிவன் ; ஒரு பூரான்வகை ; தீயன் . |
| திருநீற்றுக்காப்பு | பெரியோரால் ஒருவருக்குக் காப்பாக இடப்படும் திருநீறு ; திருநீறு . |
| திருநீற்றுக்கோயில் | திருநீற்றுப் பை . |
| திருநீற்றுப்பச்சை | ஒரு செடிவகை . |
| திருநீற்றுப்பத்திரி | ஒரு செடிவகை . |
| திருநீற்றுப்பழம் | திருநீற்றுருண்டை . |
| திருநீற்றுமடல் | திருநீறு வைக்கும் கலம் . |
| திருநீறு | விபூதி . |
| திருநுந்தாவிளக்கு | காண்க : திருநந்தாவிளக்கு . |
| திருநோக்கம் | கடவுள் , குரு முதலியோரின் அருட்பார்வை . |
| திருநோக்கு | கடவுள் , குரு முதலியோரின் அருட்பார்வை . |
| திருப்தி | காண்க : திருத்தி . |
| திருப்படிமாற்று | திருக்கோயிலில் மூர்த்திகளுக்குப் படைக்கும் அரிசி முதலிய பண்டம் . |
| திருப்படிமாறுதல் | சுவாமிக்குப் படையற் பொருள் அமைத்தல் . |
| திருப்படைவீடு | கடவுள் கோயில்கொண்டுள்ள தலம் . |
| திருப்பணி | கோயில்தொண்டு ; கோயில் கட்டுதல் புதுப்பித்தல் முதலிய வேலை ; பெரியோர்களுக்குச் செய்யும் தொண்டு ; நற்காரியம் . |
| திருப்பணிமாலை | கோயில் திருப்பணி விவரம் கூறும் நூல்வகை . |
| திருப்பதி | புண்ணியத்தலம் ; திருவேங்கடம் என்னும் திருமால் தலம் . |
| திருப்பதிகம் | தெய்வத்தைப் புகழ்ந்துரைக்கும் பத்து அல்லது பதினொரு பாடல் கொண்டது . |
| திருப்பதியம் | தெய்வத்தைப் புகழ்ந்துரைக்கும் பத்து அல்லது பதினொரு பாடல் கொண்டது . |
| திருப்பம் | திரும்புகை ; திரும்பும் தெருக்கோடி ; சவரி என்னும் மயிர்முடி ; பண வாணிகம் . |
| திருப்பரிவட்டம் | தெய்வத் திருமேனிக்குச் சாத்தும் ஆடை ; கோயில் மரியாதையாகப் பெரியோர் தலையில் சுற்றிக் கட்டப்படும் கடவுளின் ஆடை . |
| திருப்பல்லாண்டு | பல்லாண்டு பல்லாண்டு என்று கடவுளரைப் புகழ்ந்து பாடும் பாடல்வகை ; சிவபெருமான்மீது சேந்தனார் பாடிய நூல் ; நாலாயிரத் திவ்வியப் பிரபந்தத்துள் பெரியாழ்வார் பாடிய நூல் . |
| திருப்பள்ளி | திருக்கோயில் ; தெய்வசயனம் . |
| திருப்பள்ளித்தாமம் | கோயில்மூர்த்திகளுக்குச் சாத்தப்படும் மாலை . |
| திருப்பள்ளிபடுத்துதல் | சன்னியாசிகளை அடக்கம் செய்தல் . |
| திருப்பள்ளியெழுச்சி | தேவர்கள் உறக்கம் விட்டெழுதல் ; கடவுளைத் துயிலெழுப்புவதாக அமைந்த பாடல்கள் அடங்கிய பதிகம் . |
| திருப்பாட்டு | கடவுளைப்பற்றிப் பெரியோர் பாடிய பாட்டு ; தேவாரம் ; வசைச்சொல் . |
| திருப்பாவாடை | கோயில் மூர்த்திக்குப் படைக்கும் பெரிய நிவேதனம் ; நிவேதனம படைக்கும் ஆடை . |
| திருப்பாவை | நாலாயிரத் திவ்வியப் பிரபந்தத்துள் பாவைநோன்பு குறித்து ஆண்டாள் பாடியதொரு நூல் . |
| திருப்பாற்கடல் | திருமால் பள்ளிகொண்டருளும் இடம் . |
| திருப்பி | ஆணியைத் திருகி உட்செலுத்தும் ஆயுதவகை ; காண்க : வட்டத்திருப்பி . |
| திருப்பு | தடவை ; ஒரு மீன்வகை . |
| திருப்புகழ் | தெய்வப் புகழ்ச்சியான பாடல் ; அருணகிரிநாதர் முருகக்கடவுள்மீது பாடிய நூல் . |
| திருப்புதல் | திரும்பச் செய்தல் ; மாற்றுதல் ; பாடத்தை மறுமுறை ஓதல் ; மொழிபெயர்த்தல் ஏட்டின் பக்கத்தைத் தள்ளுதல் ; முறுக்குதல் ; கவிழ்த்தல் ; சாவி கொடுத்தல் ; திருப்பிக் கொடுத்தல் ; விதிர்த்தல் ; நோய் முதலியன தணித்தல் ; சூனியத்தைத் திரும்பச் செய்தல் . |
| திருப்புளி | திருகாணி இறுக்கும் கருவி . |
| திருப்பூட்டு | தாலி ; மணமகளுக்குத் தாலி கட்டுகை . |
| திருப்பூட்டுதல் | மணமகள் கழுத்தில் தாலி கட்டுதல் . |
| திருப்பூவல்லி | மகளிர் பூக்கொய்தலைப்பற்றிக் கூறும் திருவாசகப் பகுதி . |
| திருப்பொறி | அரசர் முதலியோர்க்குரிய உடல் இலக்கணம் . |
| திருப்போனகம் | கடவுளுக்குப் படைத்த அமுது . |
| திரும்புகால் | மீளும் சமயம் . |
| திரும்புதல் | மாறுதல் ; மீளுதல் ; விலகுதல் ; வளைதல் ; சூரியன் சாய்தல் . |
| திருமகள் | செல்வத்துக்குத் தலைவியான திருமால் மனைவி . |
| திருமகள்கொழுநன் | திருமகளின் கணவனான திருமால் . |
| திருமகள்மைந்தன் | திருமகளின் புதல்வனான மன்மதன் . |
| திருமகளாடல் | பாவை என்னும் கூத்து . |
| திருமகன் | திருமகள் கொழுநனான திருமால் ; திருமகள் மைந்தனான காமன் ; செல்வமகன் . |
| திருமங்கலியம் | தாலி . |
| திருமங்கிலியம் | தாலி . |
| திருமஞ்சனம் | திருமுழுக்கு ; திருமுழுக்குக்குரிய நீர் . |
| திருமஞ்சனமாட்டுதல் | திருமுழுக்காட்டுதல் . |
| திருமடந்தை | திருமகள் . |
| திருமடம் | குருவின் மாளிகை . |
| திருமடவளாகம் | கோயிலைச் சுற்றியுள்ள இடம் . |
| திருமடைப்பள்ளி | சமையலறை . |
| திருமண் | வைணவர் நெற்றியலணியும் நாமம் ; நாமக்கட்டி . |
| திருமண்காப்பு | வைணவர் நெற்றியில் இடும் திருநாமம் . |
| திருமணம் | கலியாணம் . |
| திருமணம்பரிமாறுதல் | தாளித்தல் ; பொய் கலந்து பேசுதல் . |
| திருமணிகுயிற்றுநர் | முத்துக்கோப்போர் . |
| திருமதில் | கோயிலின் சுற்றுமதில் . |
| திருமதுரம் | பழம் , நெய் , சருக்கரை சேர்த்துச் செய்யப்படும் படையற்பொருள் . |
| திருமந்திரம் | சிவஐந்தெழுத்து ; திருமால் எட்டெழுத்து ; திருமூலர் இயற்றிய நூல் ; கோயில் . |
| திருமந்திரவோலைநாயகம் | அரசவை எழுத்தாளர் தலைவன் . |
|
|
|