சொல்
|
அருஞ்சொற்பொருள் |
| திருமரம் | அரசமரம் . |
| திருமலர் | திருமகள் வீற்றிருக்கும் தாமரைமலர் . |
| திருமலை | தூய்மையான மலை ; கயிலாயமலை ; திருவேங்கடமலை . |
| திருமறுமார்பன் | அருகன் ; மார்பில் அழகிய மறுவையுடைய திருமால் . |
| திருமாது | திருமகள் . |
| திருமாமகள் | திருமகள் . |
| திருமாமணிமண்டபம் | பரமபதத்துள்ள திருவோலக்க மண்டபம் . |
| திருமால் | விட்டுணு ; அரசன் . |
| திருமால்குன்றம் | அழகர்மலை . |
| திருமால்கொப்பூழ் | திருமாலின் கொப்பூழிலிருந்து உண்டான தாமரை . |
| திருமால்நிலை | திருமாலின் பரம் , வியூகம் , விபவம் , அந்தர்யாமித்துவம் , அர்ச்சை என்னும் ஐவகை வடிவங்கள் . |
| திருமால்புதல்வன் | திருமாலின் மகனான மன்மதன் ; பிரமன் . |
| திருமாலவதாரம் | மீன் , ஆமை , பன்றி , நரசிங்கம் , வாமனம் , பரசுராமன் , இராமன் , பலராமன் , கண்ணன் , கற்கி என்னும் திருமாலின் பத்துப் பிறப்புகள் ; சனகன் , சனந்தனன் , சனாதனன் , சனற்குமாரன் , நரநாராயணன் , கபிலன் , இடபன் , நாரதன் , அயக்கிரீவன் , தத்தாதிரேயன் , மோகினி , வேள்வியின்பதி , வியாதன் , தன்வந்திரி , புத்தன் எனப் பதினைந்து கூறுகளையுடைய பிறப்புகள் . |
| திருமாலாயுதம் | திருமாலின் ஐம்படைகளான பாஞ்சசன்னியம் என்னும் சங்கு , சுதரிசனம் என்னும் சக்கரம் , சார்ங்கம் என்னும் வில் , நாந்தகம் என்னும் வாள் கௌமோதகி என்னும் தண்டு . |
| திருமாலிருஞ்சோலை | காண்க : அழகர்மலை . |
| திருமாளிகை | கோயில்மதிலை ஒட்டி உட்புறத்து அமைத்துள்ள கட்டட வரிசை ; பெரியோர் வாழும் இல்லம் . |
| திருமானகரம் | காண்க : திருநாடு . |
| திருமுகம் | கடவுள் சன்னிதானம் ; பெரியோர் வரைந்து அனுப்பும் ஓலை ; அரசனது சாசனம் . |
| திருமுட்டு | பூசைத்தட்டு முதலியன . |
| திருமுடி | கோயில்மூர்த்தியின் தலைப்பகுதி ; மதிப்புவாய்ந்த மக்கள் ; கொத்துவேலை செய்வோர் . |
| திருமுடிச்சாத்து | தலைப்பாகை . |
| திருமுடிச்சேவகர் | ஐயனார் . |
| திருமுடித்திலகம் | திருமுடியில் சூட்டும் மணி . |
| திருமுடியோன் | முடிசூடிய அரசன் . |
| திருமுண்டம் | சைவர்கள் மூன்று வரியாக நெற்றியில் இடும் திருநீற்றுக்குறி . |
| திருமுதல் | திரும்புதல் ; நன்றாகத் தேய்த்தல் . |
| திருமுழுக்கு | காண்க : திருமஞ்சனம் ; மார்கழி மாதத்தில் பாவைநோன்புகொண்டு மகளிர் முழுகும் நீராட்டு . |
| திருமுளைப்பாலிகை | திருமணம் முதலிய சிறப்பு நிகழ்ச்சிகளில் தானிய முளை வளர்க்கப்பெறும் மண்குடுவை . |
| திருமுற்றத்தார் | கோயிற்பணி செய்வோர் . |
| திருமுற்றம் | கோயிற் சன்னிதானம் ; குதிரை வையாளிவீதி . |
| திருமுறை | இறைவனிடம் முறையிட்டுப் பாடும் தெய்வப்பாடல்கள் ; தேவாரம் , திருவாசகம் , திருவிசைப்பா , திருப்பல்லாண்டு , திருமந்திரம் , பதினோராந் திருமுறை , பெரியபுராணம் என்னும் சைவத் திருநூல்கள் ; இராமலிங்க அடிகள் பாடிய நூல்கள் . |
| திருமுன் | சன்னிதி ; சன்னிதியில் . |
| திருமுன்பு | சன்னிதி ; சன்னிதியில் . |
| திருமுன்னர் | சன்னிதி ; சன்னிதியில் . |
| திருமெய்க்காப்பு | கோயில் காப்போன் . |
| திருமெய்ப்பூச்சு | கோயில்மூர்த்தங்களின்மேல் பூசப்படும் மணப்பூச்சு ; புனுகு , களபம் முதலியன . |
| திருமெழுக்கு | சாணம் ; கோயிலிடத்தை மெழுகுகை . |
| திருமேற்பூச்சு | காண்க : திருமெய்ப்பூச்சு . |
| திருமேனி | கடவுள் , முனிவர் முதலியோரது தெய்வ உடல் ; சிலை ; பெண்கள் காதணி ; காண்க : குப்பைமேனி . |
| திருமேனிகாவல் | கோயிற்காவல் . |
| திருமேனியழகி | காண்க : குப்பைமேனி . |
| திருமை | அழகு . |
| திருமொழி | பெரியோர் சொல் ; ஆகமம் ; தருமம் ; நாலாயிரத் திவ்வியப் பிரபந்தத்துள் ஒன்றான பெரிய திருமொழி . |
| திருவகுப்பு | சந்தக் குழிப்பில் அமைந்த செய்யுள் வகை . |
| திருவட்டி | காண்க : திருகுகள்ளி . |
| திருவடி | சீபாதம் ; சுவாமி ; முனிவர் ; திருமாலின் பாதத்தில் இருக்கும் அனுமான் ; கருடன் ; திருவாங்கூர் அரசர் ; நோவில்லாத புண் ; கோமாளி விகடம் . |
| திருவடிக்கம் | திருமால்கோயிற் படிக்கத்தினின்று எடுத்து வழங்கும் சுவாமி தீர்த்தம் . |
| திருவடிசம்பந்தி | சீடன் . |
| திருவடித்தலம் | கடவுள் முதலியோர் பாதுகை . |
| திருவடிதீட்சை | சீடன் தலையில் குரு தன் பாதத்தை வைத்தருளும் தீட்சைவகை . |
| திருவடிதொழுதல் | கடவுள் முதலியோரை வணங்குதல் . |
| திருவடிநிலை | சிலை வைக்கும் மேடை ; கடவுளர் முதலியோர் மிதியடி . |
| திருவடிபிடிப்பான் | கோயில் அருச்சகன் . |
| திருவடையாளம் | சைவசமயத்திற்குரிய திருநீறு முதலிய சாதனங்கள் . |
| திருவணுக்கன் | திருவாயில் கருவறையை அடுத்துள்ள இடம் . |
| திருவணை | சேது . |
| திருவணைக்கரை | தனுக்கோடி . |
| திருவத்தவர் | செல்வம் படைத்த நல்வினையாளர் . |
| திருவத்தியயனம் | திவ்வியப் பிரபந்தம் ஓதுகை ; சிராத்தம் . |
| திருவந்திக்காப்பு | திருவிழாக் காலத்தில் சுவாமி புறப்பாட்டின் முடிவில் கண்ணேறு போகச் செய்யும் சடங்கு . |
| திருவம்பலம் | தென்னார்க்காட்டு மாவட்டத்திலுள்ள புகழ்வாய்ந்த சிவதலம் , சிதம்பரம் . |
| திருவமால் | திருமால் . |
| திருவமுது | நிவேதனவுணவு . |
| திருவரங்கு | கோயிலுள்ள முதன்மை மண்டபம் . |
| திருவலகிடுதல் | கோயிலைப் பெருக்கித் துப்புரவாக்கல் . |
| திருவலகு | கோயிலைப் பெருக்கும் துடைப்பம் . |
| திருவள்ளுவப்பயன் | திருவள்ளுவர் தந்த திருக்குறள் . |
| திருவளத்தான் | நகைச்சுவை நடிகன் , கோமாளி , விகடன் . |
| திருவறம் | மததருமம் ; சமண ஒழுக்கம் . |
| திருவன் | செல்வன் ; திருமால் ; விகடக்காரன் ; புரட்டன் ; ஒரு மீன்வகை . |
| திருவாக்கு | தெய்வப் பெரியோர்களின் வாய்மொழி . |
| திருவாங்குதல் | தாலி களைதல் . |
| திருவாசகம் | திவ்விய வாக்கு ; மாணிக்கவாசகர் அருளிய துதிநூல் . |
| திருவாசி | வாகனப் பிரபை ; ஒரு மாலை வகை . |
| திருவாசிகை | வாகனப் பிரபை ; ஒரு மாலை வகை . |
|
|
|