சொல்
|
அருஞ்சொற்பொருள் |
| நாழிகைவெண்பா | காண்க : நாழிகைக்கவி . |
| நாள் | தினம் ; காலம் ; வாழ்நாள் ; நல்ல நாள் ; காலை ; முற்பகல் ; நட்சத்திரம் ; திதி ; புதுமை ; அன்றலர்ந்த பூ ; வெண்பாவின் ஈற்றடியிறுதியில் வரும் ஒரசைச்சீர் வாய்பாடு . |
| நாள்கேட்டல் | நல்லநாள் குறிக்கும்படி கேட்டல் . |
| நாள்தள்ளுதல் | காலங்கழித்தல் ; காலங்கடத்தல் . |
| நாள்வழிக்கணக்கு | அன்றாடக் கணக்கு . |
| நாள்வேலை | அன்றைய பணி ; கலியாணத்தன்று மணமகன் செய்துகொள்ளும் சவரச் சடங்கு . |
| நாள்வைத்தல் | திருமணநாள் குறித்தல் . |
| நாளகம் | இலாமிச்சம்புல் . |
| நாளங்காடி | பகற்கடை . |
| நாளடைவில் | நாள் செல்லச்செல்ல . |
| நாளனதினாலே | நடப்புத் தினத்தில் . |
| நாளது | நடப்பு . |
| நாளந்தி | விடியற்காலம் . |
| நாளம் | உள்துளை ; தண்டு ; நரம்பு ; பொன்னரி தாரம் . |
| நாளரம் | காண்க : நாளகம் . |
| நாளரும்பு | புதிய அரும்பு . |
| நாளவை | நாளோலக்கம் . |
| நாளறுதி | காலவெல்லை ; நாளடைவில் . |
| நாளன்று | நாளைநின்று , நாளை மறுநாள் . |
| நாளாதல் | காலங்கழிகை ; காலத்திற்கு உரியதன்றாகை . |
| நாளாய்ந்தோர் | வாழ்நாளைக் கணிப்பவரான மருத்துவர் . |
| நாளார் | யமன் . |
| நாளாவட்டத்தில் | காண்க : நாளடைவில் . |
| நாளி | கள் ; நாய் ; அறுபது விநாடிகொண்ட நேரம் ; ஒரு கால அளவு ; காண்க : நாடா . |
| நாளிகம் | காண்க : நாளகம் ; வெள்ளைக்கொடி ; தாமரை ; கோட்டை மதிற்சுவரில் அமைக்கப்படும் எறிபடைவகை . |
| நாளிகேரம் | தென்னை |
| நாளிகேரளம் | தென்னை |
| நாளிடுதல் | நல்ல நாள் குறித்தல் . |
| நாளிதழ் | செய்தித்தாள் , தினசரிப் பத்திரிகை . |
| நாளிது | காண்க : நாளது . |
| நாளிருக்கை | காண்க : நாளவை . |
| நாளில் | காண்க : நாளடைவில் . |
| நாளினி | புளிமாமரம் . |
| நாளினுநாளும் | காண்க : நாளுக்குநாள் . |
| நாளுக்கு | ஒரு நாளில் ; நல்ல நாளில் . |
| நாளுக்குநாள் | ஒவ்வொரு நாளும் . |
| நாளுநாளினும் | ஒவ்வொரு நாளும் . |
| நாளும் | தினந்தோறும் . |
| நாளுலத்தல் | இறத்தல் ; நாட்கழிதல் . |
| நாளெடுத்தல் | நன்முகூர்த்தஞ் செய்தல் . |
| நாளெல்லை | மறையும் நேரம் , அத்தமனம் ; இறுதிக்காலம் . |
| நாளேரடித்தல் | நல்ல நாளில் உழத்தொடங்குதல் . |
| நாளை | அடுத்த தினத்தில் ; நாளுக்குரிய . |
| நாளைக்கழித்து | அடுத்த தினத்தின் பின்நாள் . |
| நாளைக்கு | அடுத்த தினத்தில் . |
| நாளைநின்று | பிற்றை நாளை அடுத்து . |
| நாளைநீக்கி | பிற்றை நாளை அடுத்து . |
| நாளைமற்றைநாள் | நாளை அல்லது நாளை நின்று ; இனிமேல் . |
| நாளைய | தற்காலத்துக்குரிய ; நாளுக்குரிய ; மறுநாட்குரிய . |
| நாளோட்டுதல் | காலங்கழித்தல் ; காலங்கடத்துதல் ; தாமதஞ் செய்தல் . |
| நாளோதி | பஞ்சாங்கமோதுவோன் . |
| நாளோலக்கம் | கடவுளர் அல்லது அரசர் காலையில் அத்தாணியில் வீற்றிருத்தல் . |
| நாளோலை | சாதகம் ; முகூர்த்த ஒலை ; நல்ல முகூர்த்தத்தில் வீட்டுக்கு ஒலை வேய்கை . |
| நாற்கணம் | நால்வகை எழுத்தான உயிர்க்கணம் , வன்கணம் , மென்கணம் , இடைக்கணம் . |
| நாற்கதி | நால்வகைப் பிறப்பான தேவகதி , மக்கள்கதி , விலங்குகதி , நரககதி . |
| நாற்கவி | நான்குவகைப் பாட்டான ஆசு , மதுரம் , சித்திரம் , வித்தாரம் ; ஆசுகவி முதலிய நால்வகைப் புலவர்கள் . |
| நாற்காலி | நான்கு கால்களையுடைய விலங்கு ; நான்கு காலுள்ள இருக்கை . |
| நாற்காற்சீவன் | நான்கு காலுள்ள விலங்கு . |
| நாற்குணம் | அறிவு , நிறை , ஒர்ப்பு , கடைப்பிடி ஆகிய ஆடவர்குணம் ; நாணம் , மடம் , அச்சம் , பயிர்ப்பு ஆகிய பெண்டிர் குணம் . |
| நாற்கோணம் | நான்கு கோணமுள்ள உருவம் . |
| நாற்சதுரம் | சமநீளமும் சமகோணமுமுடைய உருவம் ; காண்க : பிரண்டை . |
| நாற்சந்தி | நாலு தெருக்கள் கூடுமிடம் . |
| நாற்சி | தொங்குதல் . |
| நாற்படை | தேர்ப்படை , குதிரைப்படை , யானைப்படை , காலாட்படை , |
| நாற்பண் | நான்கு நிலத்துக்குரிய குறிஞ்சி , பாலை , மருதம் , நெய்தல் (செவ்வழி) என்னும் பண்கள் . |
| நாற்பது | நான்கு பத்துக்கொண்ட எண் . |
| நாற்பயன் | காண்க : நாற்பொருள் . |
| நாற்பாட்டன் | பாட்டனுக்குப் பாட்டன் . |
| நாற்பால் | நால்வகைச் சாதிப் பகுப்பான அந்தணர் , அரசர் , வணிகர் , வேளாளர் . |
| நாற்பால்மரம் | பால்மிகுதியாயுள்ள ஆல் , அரசு , அத்தி , இத்தி , என்னும் நால்வகை மரங்கள் . |
| நாற்பான் | காண்க : நாற்பது . |
| நாற்பொருள் | நான்கு உறுதிப்பொருள்களாகிய அறம் , பொருள் , இன்பம் , வீடு . |
| நாற்பொன் | காண்க : நால்வகைப்பொன் . |
| நாற்றங்கால் | நாற்றுக்காக விதையிடும் வயல் ; மூலம் . |
| நாற்றங்கேட்டல் | மணமறிதல் . |
|
|
|