சொல்
|
அருஞ்சொற்பொருள் |
| பசுப்புரை | காண்க : பசுநிலை . |
| பசுபதி | ஆன்மாக்களுக்குத் தலைவனாகிய சிவபெருமான் . |
| பசுபுண்ணியம் | உயிர்களின் பொருட்டுச் செய்யும் அறச்செயல் . |
| பசுபோதம் | ஆன்மவறிவு . |
| பசும்பட்டு | நேர்த்தியான பட்டு . |
| பசும்பதம் | சமைத்தற்குரிய அரிசி முதலியன . |
| பசும்பயறு | பாசிப்பயறு . |
| பசும்பிடி | பச்சிலைமரம் . |
| பசும்பிறப்பு | சமணசமயங் கூறும் அறுவகைப் பிறப்புகளுள் மூன்றாவது . |
| பசும்புண் | புதுப்புண் . |
| பசும்புல் | பச்சைப்புல் ; விளைபயிர் . |
| பசும்பை | வணிகர்கள் தோளில் மாட்டிக் கொள்ளும் நீண்ட பை . |
| பசும்பொன் | மாற்றுயர்ந்த பொன் ; காண்க : கிளிச்சிறை . |
| பசுமஞ்சள் | மஞ்சள்வகை . |
| பசுமந்தை | ஆநிரை , பசுக்கூட்டம் . |
| பசுமம் | திருநீறு . |
| பசுமை | பச்சைநிறம் ; குளிர்ச்சி ; இளமை ; அழகு ; புதுமை ; சாரம் ; நன்மை ; செல்வி ; உண்மை ; பொன்னிறம் ; செல்வம் ; சால்வை வகை . |
| பசுவதி | சாது . |
| பசுவன் | பசுக்கன்றின் வயிற்றில் உள்ள பாலை உறையச்செய்யும் பை ; கோரோசனை ; கோலாட்ட விழாவில் காளைபோல் மண்ணால் செய்துவைத்துப் பெண்கள் வணங்கும் உருவம் . |
| பசுவாசாரம் | சத்திபூசை . |
| பசுவெயில் | மாலைவெயில் . |
| பசேரெனல் | பச்சைநிறமாயிருத்தல் . |
| பசை | ஒட்டும் பசை ; பிசின் ; சாரம் ; ஈரம் ; பக்தி ; அன்பு ; பற்று ; இரக்கம் ; பயன் ; செல்வம் ; கொழுப்பு ; முழவின் மார்ச்சனைப் பண்டம் ; உசவு . |
| பசைத்தல் | மை முதலியன நன்றாய்ப் பதிதல் . |
| பசைதல் | அன்புகொள்ளல் ; நட்புக்கொள்ளுதல் ; செறிதல் ; இளகுதல் ; மை முதலியன நன்றாய்ப் பதிதல் ; பிசைதல் ; தாராளமாதல் ; ஒட்டவைத்தல் ; ஒன்றுசேர்த்தல் ; பதமாக்குதல் . |
| பசைந்தார் | நண்பர் . |
| பசையாப்பு | உலகப் பற்றாகிய பந்தம் . |
| பசைவு | அன்பு . |
| பஞ்ச | ஐந்து . |
| பஞ்சக்கிலேசம் | ஐவகைத் துன்பமான அவிச்சை , தன்முனைப்பு , அவா , ஆசை , வெகுளி . |
| பஞ்சகஞ்சுகம் | காலம் , நியதி , கலை , வித்தை , அராகம் என்னும் ஐந்து ஆன்மதத்துவச் சட்டைகள் . |
| பஞ்சகதி | குதிரையின் ஐவகை நடையான மயில்நடை , மல்லநடை , குரக்குநடை , ஏறுநடை , புலிநடை என்பன . |
| பஞ்சகந்தம் | ஐவகை முகவாசனைப் பண்டம் ; உருவம் , வேதனை , குறிப்பு , பாவனை , விஞ்ஞானம் என ஐவகைக் கந்தங்கள் ; இலவங்கம் , ஏலம் , கருப்பூரம் , சாதிக்காய் , தக்கோலம் என்னும் ஐவகை மணச்சரக்கு . |
| பஞ்சகம் | ஐந்தன் கூட்டம் . |
| பஞ்சகருவி | தோற்கருவி , துளைக்கருவி , நரப்புக்கருவி , கஞ்சக்கருவி , மிடற்றுக்கருவி என்னும் ஐவகை இசை உண்டாக்கும் கருவிகள் . |
| பஞ்சகலியாணி | நான்கு கால்களிலும் முகத்திலும் வெண்மை நிறமுள்ள சிவப்புக் குதிரை . |
| பஞ்சகவ்வியம் | பசுவினின்றுண்டாகும் பால் , தயிர் , நெய் , மூத்திரம் , சாணம் என்பவற்றின் கலப்பு . |
| பஞ்சகன்னியர் | ஒழுக்கத்தில் சிறந்த அகலிகை , சீதை , தாரை , திரௌபதி , மண்டோதரி என்னும் ஐந்து மகளிர் . |
| பஞ்சகாலம் | காலை , சங்கவ காலம் , நண்பகல் , அபரான்ன காலம் , மாலை என முறையே காலை முதல் அவ்வாறு நாழிகைகொண்ட ஐந்து பகற்பகுதிகள் ; அகவிலை குறைந்த காலம் . |
| பஞ்சகாவியம் | சிந்தாமணி , சிலப்பதிகாரம் , மணிமேகலை , வளையாபதி , குண்டலகேசி என்னும் ஐந்து தமிழ்ப்பெருங்காப்பியங்கள் . |
| பஞ்சகிருத்தியம் | படைத்தல் , நிலைபெறுத்தல் , அழித்தல் , மறைத்தல் , அருளல் என்னும் கடவுளின் ஐந்தொழில்கள் ; படைக்கலத்தால் பொரும்பொழுது வீரன் செய்தற்குரிய தொடை , விலக்கு , செலவு , சேமம் , தவிர்த்து வினைசெயல் என்னும் ஐந்தொழில்கள் ; உழுது பயிர் செய்தல் , பண்டங்களை நிறுத்து விற்றல் , நூல்நூற்றல் , எழுதுதல் , படைகொண்டு தொழில் பயிலுதல் ஆகிய ஐந்தொழில்கள் . |
| பஞ்சகோசம் | அன்னமயகோசம் , ஆனந்தமயகோசம் , பிராணமயகோசம் , மனோமயகோசம் , விஞ்ஞானமயகோசம் என ஆன்மாவை மூடிக்கொண்டுள்ள ஐவகை உறைகள் . |
| பஞ்சகோலம் | சுக்கு , திப்பிலி , திப்பிலிமூலம் , செவ்வியம் , சித்திரமூலம் இவற்றின் சேர்க்கை . |
| பஞ்சகௌவியம் | காண்க : பஞ்சகவ்வியம் . |
| பஞ்சங்கூறுதல் | ஏழைபோல நடித்தல் . |
| பஞ்சசத்தி | பரையாற்றல் , முந்தையாற்றல் , விருப்பாற்றல் , அறிவாற்றல் , வினையாற்றல் என்னும் ஐவகை சிவ ஆற்றல்கள் . |
| பஞ்சசயனம் | இலவம்பஞ்சு , பூ , கோரை , மயிர் , அன்னத்தூவி இவற்றால் செய்த படுக்கை ; அழகு , குளிர்ச்சி , மார்த்தவம் , பரிமளம் , வெண்மை என்னும் ஐவகைத் தன்மை கொண்ட படுக்கை . |
| பஞ்சசாயகன் | ஐங்கணைகளை உடைய மன்மதன் . |
| பஞ்சசீலம் | காமம் , கொலை , கள் , பொய் , களவு என்னும் ஐந்தனையும் முற்றத் துறத்தலாகிய பௌத்தரொழுக்கம் . |
| பஞ்சசுத்தி | பூசைக்கு இன்றியமையாத ஐவகைச் சுத்திகளாகிய ஆத்துமசுத்தி , இலிங்கசுத்தி , திரவியசுத்தி , பூதசுத்தி , மந்திரசுத்தி என்பன . |
| பஞ்சஞானன் | புத்தர் . |
| பஞ்சடைதல் | பசி முதலியவற்றால் பார்வை மயங்குதல் . |
| பஞ்சணை | பஞ்சால் செய்தல மெத்தை . |
| பஞ்சத்துவம் | பதினைந்து ; பன்னிரண்டாம் நாள் இறந்தவர்பொருட்டுச் செய்யும் சடங்கு ; பஞ்ச பூதங்களும் பிரிதலாகிய இறப்பு . |
| பஞ்சதசம் | பதினைந்து ; பன்னிரண்டாம் நாள் இறந்தவர்பொருட்டுச் செய்யும் சடங்கு ; பஞ்ச பூதங்களும் பிரிதலாகிய இறப்பு . |
| பஞ்சதரு | சந்தானம் , தேவதாரம் , கற்பகம் , மந்தாரம் , பாரிசாதம் என்னும் ஐவகைத் தெய்வமரங்கள் . |
| பஞ்சதன்மாத்திரை | ஐம்பெரும் பூதங்களின் நுண் நிலைகளாகிய ஐந்து தத்துவங்கள் . |
| பஞ்சதாரை | காண்க : பஞ்சகதி ; சருக்கரை . |
| பஞ்சதாளம் | சிவபிரானது ஐந்து முகத்தினின்றும் உதித்ததாகச் சொல்லப்படும் சச்சற்புடம் , சாசற்புடம் , சட்பிதா புத்திரகம் , சம்பத்து வேட்டம் , உற்கடிதம் என்னும் ஐந்துவகைத் தாளங்கள . |
| பஞ்சதிரவியம் | காண்க : பஞ்சகவ்வியம் ; மலைபடு பொருள் ; காடுபடுபொருள் , நாடுபடுபொருள் , நகர்படுபொருள் , கடல்படுபொருள் என்னும் ஐவகைப் பொருள்கள் . |
| பஞ்சதிராவிடம் | விந்தியத்திற்குத் தெற்கேயுள்ள திராவிடம் , ஆந்திரம் , கன்னடம் , மகாராட்டிரம் , கூர்ச்சரம் என்னும் ஐந்து திராவிட நாடுகள் . |
| பஞ்சது | குயில் ; நேரம் . |
| பஞ்சதுட்டன் | கொலை , களவு , பொய் , கள்ளுண்ணல் , குருநிந்தை என்னும் ஐவகைக் கொடுஞ்செயல்களைச் செய்வோன் . |
| பஞ்சதுந்துபி | காண்க : பஞ்சமாசத்தக்கருவி . |
| பஞ்சதூபம் | அகில் , சாம்பிராணி , குந்துருக்கம் , குக்குலு , சூடன் என்னும் ஐவகையான புகைத்தற்குரிய மணப்பொருள்கள் . |
| பஞ்சதை | ஐம்பூதம் ; இறப்பு . |
| பஞ்சநகம் | ஆமை ; யானை ; புலி . |
| பஞ்சநகி | உடும்பு . |
| பஞ்சநதம் | ஐயாறு ; திருவையாறு என்னும் தலம் . |
| பஞ்சநதி | ஐயாறு ; திருவையாறு என்னும் தலம் . |
| பஞ்சப்பாட்டு | ஓயாது தனது ஏழைமையைக் கூறுங் கூற்று . |
| பஞ்சப்பிரமம் | ஈசானம் , தற்புருடம் , அகோரம் , வாமதேவம் , சத்தியோசாதம் என்ற சிவனின் ஐம்முகங்கள் ; சிவபிரானின் ஐந்து திருமுகம் பற்றிய மந்திரங்கள் ; நூற்றெட்டு உபநிடதங்களுள் ஒன்று . |
| பஞ்சப்பொழுது | பஞ்சகாலம் , சிறுபொருளும் பெருவிலை விற்கும் காலம் . |
| பஞ்சபட்சி | குறியறிதற்கு உரியனவும் அ . இ . உ , எ , ஒ என்னும் எழுத்தால் முறையே குறிக்கப்படுவனவுமான வல்லூறு , மயில் , ஆந்தை , காகம் , கோழி ஆகிய ஐந்து புட்கள் ; பஞ்சபட்சிகளின் ஒலியைக்கொண்டு குறி சொல்லும் நூல் . |
| பஞ்சபல்லவம் | பூசனைக்குரிய ஆத்தி , மா , முட்கிளுவை , முல்லை , வில்வம் என்னும் ஐந்தன் தளிர்கள் . |
|
|
|