சொல்
|
அருஞ்சொற்பொருள் |
| பஞ்சபாணம் | முல்லைமலர் , அசோகமலர் , தாமரைமலர் , மாம்பூ , குவளைமலர் என்னு மன்மதனுக்குரிய ஐந்து அம்புகள் . |
| பஞ்சபாணன் | ஐங்கணையோனான மன்மதன் . |
| பஞ்சபாணி | பார்வதி . |
| பஞ்சபாதகம் | கொலை , களவு , பொய் , கட்குடித்தல் , குருநிந்தை என்னும் ஐந்துவகைக் கொடுஞ்செயல்கள் . |
| பஞ்சபூதம் | ஐம்பூதங்களான நிலம் , நீர் , தீ , வளி , வான் என்பன . |
| பஞ்சம் | சிறுவிலைக் காலம் ; ஐந்து . |
| பஞ்சமகதி | வீடுபேறு . |
| பஞ்சமம் | ஏழுவகைச் சுரங்களுள் ஐந்தாவது ; அழகு ; குறிஞ்சி அல்லது பாலைப்பண்வகை ; திறமை . |
| பஞ்சமலம் | ஆணவம் , கன்மம் , மாயை , மாயேயம் , திரோதனம் என்னும் ஐவகை மலங்கள் . |
| பஞ்சமாசத்தக்கருவி | தோற்கருவி , துளைக்கருவி , நரப்புக்கருவி , கஞ்சக்கருவி , மிடற்றுக்கருவி என்னும் ஐவகை இசைக்கருவிகள் . |
| பஞ்சமாபாதகம் | காண்க : பஞ்சபாதகம் . |
| பஞ்சமாபாதகன் | காண்க : பஞ்சதுட்டன் . |
| பஞ்சமி | ஐந்தாந் திதி ; ஐந்தாம் வேற்றுமை ; பார்வதி ; இருபத்தேழு நட்சத்திரங்களுள் இறுதி ஐந்து நட்சத்திரங்கள் . |
| பஞ்சமுகன் | சிவன் ; சிங்கம் . |
| பஞ்சமூர்த்தி | சிவபிரானுக்குரிய சதாசிவன் , மகேசுவரன் , உருத்திரன் , திருமால் , பிரமன் என்னும் ஐந்து மூர்த்தங்கள் ; விநாயகன் , முருகன் , சிவன் , உமை , சண்டேசுவரன் என்னும் ஐவகைக் கடவுளர் . |
| பஞ்சமூலம் | சிறுபஞ்சமூலம் , பெரும்பஞ்சமூலம் என்னும் ஐவகை வேர்கள் . |
| பஞ்சரம் | பறவைக்கூடு ; மட்பாண்டஞ் செய்யுமிடம் ; இடம் ; கோயிற்கருவறையின் ஒரு பகுதி ; செருந்திமரம் ; கழுகு ; உடம்பு . |
| பஞ்சரித்தல் | தொந்தரவுபடுத்துதல் ; கொஞ்சிப் பேசுதல் ; விரிவாய்ப் பேசல் . |
| பஞ்சலக்கணம் | எழுத்து , சொல் , பொருள் , யாப்பு , அணி என்னும் ஐவகைத் தமிழ் இலக்கணம் . |
| பஞ்சலட்சணம் | எழுத்து , சொல் , பொருள் , யாப்பு , அணி என்னும் ஐவகைத் தமிழ் இலக்கணம் . |
| பஞ்சலிங்கம் | பிருதிவிலிங்கம் (காஞ்சி , ஆரூர் ) , அப்புலிங்கம் (திருவானைக்கா) , தேயுலிங்கம் (திருவண்ணாமலை ) , வாயுலிங்கம் (சீகாளத்தி ) , ஆகாயலிங்கம் ( சிதம்பரம் ) என்னும் சிவனின் ஐவகை இலிங்கங்கள் . |
| பஞ்சலித்தல் | மனந்தடுமாறுதல் . |
| பஞ்சலிப்பு | பஞ்சத்தின் வருத்தம் ; எளிமை கூறல் . |
| பஞ்சலோகம் | பொன் , ஈயம் , வெள்ளி , செம்பு , இரும்பு என்னும் ஐந்து உலோகம் ; ஐவகை உலோகக்கலப்பு . |
| பஞ்சலோபி | மிக உலுத்தன் . |
| பஞ்சவடம் | பூணூல் . |
| பஞ்சவடி | மயிர்க்கயிற்றால் ஆகிய பூணூல் ; கோதாவரிக் கரையிலுள்ள ஒரு புண்ணியத்தலம் . |
| பஞ்சவத்திரம் | அகன்ற முகமுடைய சிங்கம் . |
| பஞ்சவத்திரன் | ஐம்முகனான சிவன் . |
| பஞ்சவமுது | காண்க : பஞ்சாமிர்தம் . |
| பஞ்சவர் | பாண்டியர் ; பாண்டுமன்னன் புதல்வர்களான தருமன் , வீமன் , அருச்சுனன் , நகுலன் , சகாதேவன் , ஐவகைச் சோதிகள் . |
| பஞ்சவர்ணக்கிளி | ஐவண்ணமுடைய கிளிவகை . |
| பஞ்சவர்ணம் | காண்க : பஞ்சவன்னம் . |
| பஞ்சவன் | பாண்டியன் . |
| பஞ்சவன்னக்களி | ஐந்து வண்ணமுடைய கிளி . |
| பஞ்சவன்னம் | கருமை , செம்மை , பசுமை , மஞ்சள் , வெண்மை என்னும் ஐந்து நிறம் . |
| பஞ்சவாசம் | ஐந்து மணப்பொருள்களான ஏலம் , தக்கோலம் , இலவங்கம் , சாதிக்காய் , கருப்பூரம் . |
| பஞ்சவாதனம் | அனந்தாசனம் , கூர்மாசனம் , சிங்காசனம் , பதுமாசனம் , யோகாசனம் என்னும் ஐவகையான இருக்கைநிலைகள் . |
| பஞ்சறை | தளிர்நிலை . |
| பஞ்சறைக்கிழவன் | தளர்ந்த கிழவன் . |
| பஞ்சனம் | அழிவு . |
| பஞ்சனி | சொக்கட்டான்மனை . |
| பஞ்சாக்கரம் | ஐந்தெழுத்து மறை . |
| பஞ்சாக்கினி | இராகம் , காமம் , வெகுளி , சடம் , தீபனம் என்னும் ஐவகை உடற்றீ ; தவசி நிற்பதற்கு நாற்றிசைக்கு நான்கு திக்குண்டமும் மேலே சூரியனுமாகிய ஐவகை அக்கினி ; ஐவகை மருந்துச்சரக்கு . |
| பஞ்சாங்கம் | திதி , வாரம் , நட்சத்திரம் , யோகம் , கரணம் எனும் ஐந்து உறுப்புகளைக் கொண்ட நூல் ; காலக்குறிப்பு நூல் ; ஆமை ; குதிரை ; சாதகம் ; புரோகிதத்துக்கு விடப்படும் மானியம் ; புரோகிதத்தொழில் ; கொலைப்பாவத்துக்குரிய ஐந்து உறுப்புகள் . |
| பஞ்சாங்குலம் | ஆமணக்கஞ்செடி . |
| பஞ்சாட்சரக்காவடி | திருநீற்றுக்காவடி . |
| பஞ்சாட்சரம் | நமசிவாய என்னும் ஐந்தெழுத்துகளாலான சிவபிரானை அதிதெய்வமாகக் கொண்ட மந்திரம் ; திருநீறு . |
| பஞ்சாடுதல் | கண் பஞ்சடைதல் . |
| பஞ்சாமிர்தம் | ஐந்தமுதமான சருக்கரை , நெய் , தேன் , வாழைப்பழம் , திராட்சை என்னும் இனிய பண்டங்களின் கூட்டுக்கலவை . |
| பஞ்சாமிலம் | இலந்தை , புளியாரை , நெல்லி , எலுமிச்சை , மாதுளை என்னும் ஐவகைப் புளிப்புள்ள மரங்கள் . |
| பஞ்சாய் | கோரைவகை ; தூபக்கால் . |
| பஞ்சாய்க்கோதை | காண்க : பஞ்சாய்ப்பாவை . |
| பஞ்சாய்ப்பறத்தல் | விரைவாய் நடத்தல் ; நிலை குலைந்திருத்தல் . |
| பஞ்சாய்ப்பாவை | பஞ்சாய்க்கோரையாற் செய்த பாவை . |
| பஞ்சாயத்தார் | நியாய சங்கத்தார் . |
| பஞ்சாயத்து | ஐவர் கூடிய நியாய சபை ; வழக்கு விசாரணை . |
| பஞ்சாயம் | ஐந்து பேர் கூடிய நியாய சங்கம் ; கோரைவகை . |
| பஞ்சாயுதபாணி | ஐம்படைக் கையனான திருமால் . |
| பஞ்சாயுதம் | திருமால் தரிக்கும் ஐம்படைகளான சக்கரம் , வில் , வாள் , தண்டு , சங்கம் , இவை முறையே சுதரிசனம் , சார்ங்கம் , நாந்தகம் , கௌமோதகி , பாஞ்சசான்னியம் எனப் பெயர் பெறும் ; காண்க : ஐம்படைத்தாலி . |
| பஞ்சாயுதன் | காண்க : பஞ்சாயுதபாணி . |
| பஞ்சார்த்தல் | பஞ்சடைதல் . |
| பஞ்சாரம் | ஐந்து சரம்கொண்ட கழுத்தணி ; குதிரை , எருது இவற்றின் வயது ; ஆடையில் பஞ்சு எழும்பியுள்ள நிலை ; பறவை அடைக்கும் கூடு . |
| பஞ்சாலை | பஞ்சு அரைக்கும் ஆலை . |
| பஞ்சாவமுதம் | காண்க : பஞ்சாமிர்தம் . |
| பஞ்சான் | பச்சைக்குழந்தை ; செடிவகை ; மீன்வகை . |
| பஞ்சான்மா | அந்தர ஆன்மா , சீவான்மா , தத்துவ ஆன்மா , பூத ஆன்மா , மந்திர ஆன்மா என்பன . |
| பஞ்சானனம் | ஐம்முகமுடைய சிங்கம் . |
| பஞ்சானனன் | ஐம்முகத்தோனான சிவன் . |
| பஞ்சானுங்குஞ்சும் | குழந்தைகுட்டிகள் . |
| பஞ்சி | பஞ்சு ; பஞ்சணை ; வெண்துகில் ; காண்க : இலவு ; செவ்வரக்கு ; சடைந்தது ; பெருந்தூறு ; வருத்தம் ; சோம்பல் ; பஞ்சாங்கம் . |
| பஞ்சிகம் | தாளிக்கொடி . |
| பஞ்சிகை | கணக்கு ; பஞ்சாங்கம் ; உரைநூல் . |
| பஞ்சிதம் | விண்மீன் . |
| பஞ்சிநாண் | பூணூல் . |
|
|
|