சொல்
|
அருஞ்சொற்பொருள் |
| பதாகன் | அரசன் ; கொடியுடையோன் . |
| பதாகினி | படை . |
| பதாகை | விருதுக்கொடி ; பெருங்கொடி ; இணையாவினைக்கைவகை ; அபிநயக்கைவகை . |
| பதாதி | காலாட்படை ; ஒரு யானை , ஒருதேர் , ஒரு குதிரை , ஐந்து காலாள்கள்கொண்ட படைத் தொகுதி ; அமைதியின்மை . |
| பதாயுதம் | காண்க : காலாயுதம் . |
| பதார்த்தம் | சொற்பொருள் ; பொருள் ; சோறு ஒழிந்த கறி முதலிய உணவுப்பொருள் ; சொத்து ; திரவியம் முதலிய எழுவகைப் பொருள்கள் ; சைவசமய முப்பொருள் ; சமணசமய இருவகை மூலப்பொருள்கள் . |
| பதி | நகரம் ; பதிகை ; நாற்று ; உறைவிடம் ; வீடு ; கோயில் ; குறிசொல்லும் இடம் ; ஊர் ; பூமி ; குதிரை ; தலைவன் ; கணவன் ; அரசன் ; மூத்தோன் ; குரு ; கடவுள் . |
| பதிக்கினி | கணவனைக் கொன்றவள் . |
| பதிகம் | பத்துச் செய்யுளால் முடியும் நூல் ; பாயிரம் ; நாற்று . |
| பதிகன் | வழிப்போக்கன் ; காலாள் . |
| பதிசித்திரம் | கோபுரப்பதுமை . |
| பதிசேவை | கணவனுக்குச் செய்யும் தொண்டு . |
| பதிஞானம் | கடவுளைப்பற்றிய அறிவு , இறையறிவு . |
| பதிஞானவாழ்வு | பரம்பொருளோடு இரண்டறக் கலத்தலாகிய அனுபவம் . |
| பதிட்டித்தல் | தொடங்குதல் . |
| பதிட்டை | நிறுவுதல் , பிரதிட்டை ; தொடக்கம் . |
| பதித்தல் | அழுத்துதல் ; மணி முதலியன இழைத்தல் ; பதியவைத்தல் ; குழியாக்குதல் ; தாழ்த்தல் ; எழுதல் ; அதிகாரம் கொடுத்தல் . |
| பதித்திரி | உலைத்துருத்தி . |
| பதித்தெழுதுதல் | அழுந்த எழுதுதல் ; மேலே இடம்விட்டுக் கீழே எழுதுதல் . |
| பதிதபாவனன் | ஒழுக்கம் தவறியவரைத் தூயராக்கும் கடவுள் . |
| பதிதல் | முத்திரை முதலியன அழுந்துதல் ; தாழந்திருத்தல் ; ஆழ்தல் ; ஊன்றுதல் ; நிலையாதல் ; தங்குதல் ; கோள் முதலியன இறங்குதல் ; விலை தணிதல் ; அதிகாரம் பெறுதல் ; பின்னிடுதல் . |
| பதிதன் | சமய ஒழுக்கந் தவறினவன் . |
| பதிநிச்சயம் | கடவுளின் இருப்பு அறிதல் . |
| பதிப்பு | பதித்தல் ; நூல் அச்சிடுகை ; அச்சிடப்பட்ட நூல் . |
| பதிபக்தி | கணவனிடம் கொண்டுள்ள அன்பு . |
| பதிபடை | மறைந்துநிற்கும் சேனை . |
| பதிபோடுதல் | பதுங்குதல் ; நாற்றுநடுதல் ; பதியம்போடுதல் . |
| பதிமினுக்கு | இடத்தைத் துலக்குவதாகிய துடைப்பம் . |
| பதிமை | பிரதிமை . |
| பதியம் | நாற்று ; ஊன்றிநடுஞ் செடிகொடிகிளை முதலியன ; காண்க : இலைப்பாசி ; பதிகம் ; பாடல் ; பதிப்பது ; தெய்வத்தைப்பற்றிப் பெரும்பாலும் பத்துச் செய்யுளால் பாடப்படும் நூல்வகை . |
| பதியரி | நாற்று . |
| பதியிலார் | கணிகையர் . |
| பதியெழுதல் | வலசைபோதல் ; பயத்தால் ஊரைவிட்டு ஓடிப்போதல் . |
| பதிரன் | செவிடன் . |
| பதில் | மாற்றம் ; விடை ; பதிலாக . |
| பதிலாள் | பிரதியாக அமர்த்தும் ஆள் . |
| பதிலிப்பத்திரம் | அதிகாரப்பத்திரம் . |
| பதிவிரதம் | காண்க : பதிவிரதாதர்(ரு)மம் . |
| பதிவிரதமுல்லை | கற்புக்கு அறிகுறியாக அணியும் முல்லை . |
| பதிவிரதாதர்மம் | கற்புநெறி . |
| பதிவிரதாதருமம் | கற்புநெறி . |
| பதிவிரதி | கற்புடைய மனைவி . |
| பதிவிரதை | கற்புடைய மனைவி . |
| பதிவிருத்தல் | ஒளித்திருத்தல் . |
| பதிவு | அழுந்துகை ; பள்ளம் ; விண்மீன்களின் சாய்வு ; பதுக்கம் ; தீர்மானிக்கப்பட்ட செலவு ; வழக்கம் ; கணக்குப் பதிகை ; மனம் ஊன்றுகை ; அமைதி ; விலைத்தணிவு ; பதியம் . |
| பதிவுவைத்தல் | கணக்கிற் பதிதல் ; வாடிக்கை வைத்தல் . |
| பதிவைத்தல் | நாற்றுப் பதித்தல் ; பதியம் போடுதல் . |
| பதிற்சீட்டு | பதிலியாக வாங்கும் ஆவணத்தின் படி . |
| பதினாயிரம் | பத்தாயிரம் . |
| பதினாலுலகம் | மேலேழுலகமான பூலோகம் , புவலோகம் , சுவர்க்கலோகம் , சனலோகம் , தபோலோகம் , சத்தியலோகம் , மகாலோகம் , கீழேழுலகமான அதலம் ; விதலம் ; சுதலம் , தராதலம் , இரசாதலம் , மகாதலம் , பாதலம் . |
| பதினாறுபேறு | புகழ் , கல்வி , வலிமை , வெற்றி , நன்மக்கள் , பொன் , நெல் , நல்லூழ் , நுகர்ச்சி , அறிவு , அழகு , பெருமை , இளமை , துணிவு , நோயின்மை , வாழ்நாள் என்பன . |
| பதினெட்டாம்பெருக்கு | ஆடிமாதம் பதினெட்டாம் நாள் காவிரிப்பெருக்கு ; ஆடிப் பதினெட்டில் கொண்டாடும் விழா . |
| பதினென்கண்ணன் | பதினெட்டுக் கண்களையுடைய முருகன் . |
| பதினெண்கணம் | அமரர் , சித்தர் , அசுரர் , தைத்தியர் , கருடர் , கின்னரர் , நிருதர் , கிம்புருடர் , இயக்கர் , பூதர் , விஞ்சையர் , கந்தருவர் , அந்தரர் , பசாசர் , முனிவர் , உரகர்(நாகர்) , விண்ணோர் , மண்ணோர் ஆகியோர் . |
| பதினெண்கீழ்க்கணக்கு | நாலடியார் , நான்மணிக்கடிகை , இன்னா நாற்பது , இனியவை நாற்பது , கார் நாற்பது , களவழி நாற்பது , ஐந்திணை ஐம்பது , ஐந்திணை எழுபது , திணைமொழி ஐம்பது , திணைமாலை நூற்றைம்பது , திருக்குறள் , திரிகடுகம் , ஆசாரக்கோவை , பழமொழி , சிறுபஞ்சமூலம் , முதுமொழிக்காஞ்சி , ஏலாதி , கைந்நிலை என்னும் பதினெட்டு நூல்கள் . |
| பதினென்குடிமக்கள் | ஓடாவி(ஓடஞ்செய்பவர்) ,கன்னார் , குயவர் , கொல்லர் , கோவியர்(இடையர்) , ஓச்சர் , தச்சர் , தட்டார் , நாவிதர் ; பள்ளர் ; பாணர் ; பூமாலைக்காரர் ; எண்ணெய் வாணியர் , உப்புவாணியர் , இலைவாணியர் , வண்ணார் , வலையர் , வெட்டியான் ஆகிய குடிமக்கள் . |
| பதினெண்புராணம் | மச்சம் , கூர்மம் , வராகம் , வாமனம் , பதுமம் , வைணவம் , பாகவதம் , பிரமம் , சைவம் , இலிங்கம் , பௌடிகம் , நாரதீயம் , காருடம் , பிரமகைவர்த்தம் , காந்தம் , மார்க்கண்டேயம் , ஆக்கினேயம் , பிரமாண்டம் என்பன . |
| பதினெண்மொழி | பதினெண் நாட்டார்க்குரிய மொழியான அங்கம் , அருணம் , கலிங்கம் , காம்போசம் ; கொங்கணம் , கோசலம் , கௌசிகம் , சாவகம் , சிங்களம் , சிந்து , சீனம் , சோனகம் , திரவிடம் , துளுவம் , பப்பரம் , மகதம் , மராடம் , வங்கம் என்பன . |
| பதினோராடல் | அல்லியம் , கொட்டி , குடை , குடம் , பாண்டரங்கம் , மல் , துடி , கடையம் , பேடு , மரக்கால் , பாவை என்னும் பதினொரு வகையான கூத்துகள் . |
| பதுக்கம் | ஒளிப்பு ; கபடம் ; பதுங்குந்தன்மை ; மன்னிக்கை ; கண்ணி . |
| பதுக்காய் | உள்ளான்குருவி ; பருத்துக் குள்ளமாய் உள்ளவன் . |
| பதுக்குதல் | ஒளித்துவைத்தல் . |
| பதுக்கை | கற்குவியல் ; இலைக்குவியல் ; மணற்குன்று ; சிறுதூறு ; பாறை . |
| பதுக்கைக்கடவுள் | மணற்குன்றின் மேலுள்ள நடுகல் தெய்வம் . |
| பதுங்கலன் | பின்னிற்பவன் ; கூச்சமுள்ளவன் . |
| பதுங்குதல் | ஒளித்தல் ; பதிவிருத்தல் ; மறைதல் ; பின்னிற்றல் ; காண்க : பதுங்குபிடித்தல் . |
| பதுங்குபிடித்தல் | மேல்தளத்துக்குச் சிறுகல் பாவுதல் . |
| பதுமகேசரம் | புன்னைமரம் . |
| பதுமகோசிகம் | தாமரைக்காய் உருவமாகக் கைகுவித்து ஐந்து விரலையும் அகல விரித்துக் காட்டும் இணையாவினைக்கைவகை . |
| பதுமநாபன் | உந்தித் தாமரையோனாகிய திருமால் . |
| பதுமநிதி | குபேரனது ஒன்பான் நிதியுள் ஒன்று . |
| பதுமபந்து | சூரியன் ; தேனீ . |
| பதுமபீடத்தன் | பிரமன் . |
| பதுமபீடம் | தாமரை வடிவாகச் செய்யப்பட்ட இடம் . |
| பதுமம் | தாமரை ; காண்க : பதுமரேகை ; பதினெண் புராணத்துள் ஒன்று ; காண்க : பதுமபீடம் ; பதுமநிதி ; ஆசனவகை ; முடியுறுப்பு ஐந்தனுள் ஒன்று ; அபிநயத்துக்குரிய ஆண் கைகளுள் ஒன்று ; சோதிநாள் ; மாணிக்கவகை . |
|
|
|