சொல்
|
அருஞ்சொற்பொருள் |
| பால்பகாவஃறிணைப்பெயர் | ஒருமை பன்மைக்குப் பொதுவாய் வரும் அஃறிணைப்பெயர் . |
| பால்பற்றிச்சொல்லுதல் | ஒருசார்பாகப் பேசுதல் . |
| பால்பாய்தல் | தாய்ப்பால் தானே பெருகுகை ; வெட்டு முதலியவற்றால் மரத்தினின்று பால் வெளிப்படுகை . |
| பால்பிடித்தல் | நென்மணி முதலியவற்றில் பால் பற்றுதல் . |
| பால்பிடிபதம் | பயிர்க்கதிர் பாலடையும் பருவம் . |
| பால்பொழிதல் | செழிப்பாயிருத்தல் . |
| பால்மடி | நிரம்பக் கறக்கக்கூடிய கால்நடைகளின் மடி . |
| பால்மடியழற்சி | பசு முதலியவற்றின் முலைக்காம்பு வெடித்திருக்கை . |
| பால்மணம் | பாலின் நாற்றம் ; கஞ்சி காய்ச்சுகையில் பக்குவமானவுடன் உண்டாகும் நாற்றம் ; பால்குடிக்கும் குழந்தைகளின் வாயிலிருந்து வீசும் பால்நாற்றம் ; முற்றின அம்மைப்பாலின் நாற்றம் . |
| பால்மரம் | பாலுள்ள மரம் . |
| பால்மறத்தல் | குழந்தை பால் குடிப்பதைத் தவிர்தல் . |
| பால்மறுத்தல் | பால் வற்றுதல் ; காண்க : பால்மறத்தல் . |
| பால்மறை | பசுக்கொட்டிலில் உள்ள குறை . |
| பால்மாறுதல் | பால் வற்றிப்போதல் ; தாய்ப்பால் உண்ணாது பிற உணவு கொள்ளுதல் ; சோம்பியிருத்தல் ; பின்வாங்குதல் . |
| பால்மேனியாள் | கலைமகள் . |
| பால்வண்ணன் | பலராமன் ; சிவன் . |
| பால்வரைகிளவி | எண் , அளவு முதலியவற்றின் பகுதியைக் குறிக்கும் சொல் . |
| பால்வரைதெய்வம் | நல்வினை தீவினைகளை வகுக்கும் தெய்வம் . |
| பால்வழு | ஒருபாற் சொல் ஏனைப்பாற் சொல்லோடு முடிதலாகிய குற்றம் . |
| பால்வழுவமைதி | பால் வழுவை ஆமென்று அமைத்துக்கொள்கை . |
| பால்வழுவமைப்பு | பால் வழுவை ஆமென்று அமைத்துக்கொள்கை . |
| பால்வறையல் | பாலைச் சேர்த்து செய்த துவட்டல் . |
| பால்வன்னத்தி | சிவசக்தி . |
| பால்வாய்க்குழவி | நற்பேறு பெற்ற குழந்தை . |
| பால்வார்த்தல் | பாம்புப்புற்றில் பாலூற்றிச் செய்யுஞ் சடங்கு . |
| பால்வெடித்தல் | நெற்பயிர் பாலடையாது கெட்டுப்போதல் . |
| பாலக்கிரகாரிட்டம் | கோள்களின் தீய பார்வையால் குழந்தைகட்கு உண்டாகும் பீடை ; குழந்தைகளுக்கு உண்டாகும் வயிற்றுப்போக்கு . |
| பாலகம் | காண்க : எள் ; வெண்கோட்டம் . |
| பாலகன் | காணக : பாலன் . |
| பாலகி | மகள் . |
| பாலசந்திரன் | பிறைச்சந்திரன் . |
| பாலசிட்சை | குழந்தைக்குப் கற்பிக்கை ; சிறுவர்க்குரிய பாடப்புத்தகம் . |
| பாலசூரியன் | உதயசூரியன் . |
| பாலடி | பாலில் சமைத்த சோறு . |
| பாலடிசில் | பாலில் சமைத்த சோறு . |
| பாலடை | குழந்தைகளுக்குப் பால் புகட்டுகிற சங்கு ; காண்க : சித்திரப்பாலாடை(வி) ; பாலகப்பை . |
| பாலத்தூண் | ஆற்றின்மேற் பாலத்தைத் தாங்குதற்குக் கட்டும் முள்ளுக்கட்டை . |
| பாலபாடம் | சிறுவர்க்குரிய புத்தகம் . |
| பாலம் | வாராவதி ; நீரின் அணைச்சுவர் ; நெற்றி ; பூமி ; மரக்கொம்பு ; வெட்டிவேர் . |
| பாலம்மை | வைசூரி . |
| பாலமணி | அக்குமணி ; வெள்ளைப் பாசிமணி . |
| பாலமணிக்கோவை | குழந்தைகளின் கழுத்தணிவகை . |
| பாலமிர்தம் | பாற்சோறு . |
| பாலமை | பிள்ளைமை ; அறியாமை . |
| பாலர் | சிறுவர் ; காப்பவர் ; இடையர் ; முல்லைநில மக்கள் . |
| பாலரசம் | பொன்னிறம் . |
| பாலல¦லை | குழந்தை விளையாட்டு ; இளைஞரின் இன்ப விளையாட்டு . |
| பாலலோசனன் | நெற்றிக்கண்ணுடைய சிவபிரான் . |
| பாலவன் | பால்வண்ணனான சிவன் . |
| பாலவி | காண்க : பாலமிர்தம் . |
| பாலவோரக்கட்டை | பாலத்தின் இருகரைகளிலுமுள்ள பக்கச்சுவர் . |
| பாலன் | குழந்தை ; புதல்வன் ; காப்போன் . |
| பாலனம் | பாதுகாப்பு . |
| பாலனன் | காப்போன் . |
| பாலா | கையீட்டி . |
| பாலாசிரியன் | குழந்தைகளுக்குக் கற்பிக்கும் ஆசிரியன் . |
| பாலாடை | காண்க : பாலேடு ; குழந்தைகளுக்குப் பால்புகட்டும் சங்கு . |
| பாலாலயம் | இளங்கோயில் , சிறிய ஆலயம் . |
| பாலாவி | பாலின் ஆவி . |
| பாலாறு | நந்திதுர்க்கத்தில் தோன்றித் தமிழ் நாட்டில் பாயும் ஓர் ஆறு . |
| பாலி | ஒரு பழைய மொழி ; ஆலமரம் ; செம்பருத்தி ; காண்க : பாலாறு ; கள் . |
| பாலிகை | இளம்பெண் ; ஒரு காதணிவகை ; கலியாணம் முதலிய நற்காலங்களில் முளைகள் உண்டாக ஒன்பதுவகைத் தானியங்கள் விதைக்குந் தாழி ; ஆயுதக்கூர் ; உதடு ; அடம்பு ; கத்திப்பிடி ; வட்டம் ; நீரோட்டம் ; மேற்கட்டி . |
| பாலிகைபாய்தல் | அணையின்றித் தானே நீர் பாய்தல் . |
| பாலிசம் | அறியாமை . |
| பாலிசன் | மூடன் . |
| பாலித்தல் | காத்தல் ; கொடுத்தல் ; விரித்தல் ; அருளுதல் . |
| பாலியம் | குழந்தைப்பருவம் ; இளம்பருவம் . |
| பாலியன் | ஆண்குழந்தை ; இளைஞன் . |
| பாலிறங்குதல் | பால் தொண்டைவழிச் செல்லுகை ; அம்மைப்பால் வற்றுகை . |
| பாலிறுவி | முருங்கைமரம் . |
| பாலுகம் | கருப்பூரம் . |
| பாலுண்ணி | உடம்பில் உண்டாகும் ஒருவகைச் சதைவளர்ச்சி . |
| பாலேடு | காய்ச்சிய பாலின்மேற் படியும் ஆடை . |
| பாலேயம் | கழுதை ; சிறுமுள்ளங்கி ; மென்மை . |
| பாலை | முல்லையும் குறிஞ்சியும் திரிந்த நிலம் ; பாலைத்தன்மை ; புறங்காடு ; பாலைநிலத்து உரிப்பொருளாகிய பிரிவு ; காண்க : இருள்மரம் ; முள்மகிழ் ; மரவகை ; பெரும்பண்வகை ; ஒரு யாழ்வகை ; பாலையாழிற் பிறக்கும் எழுவகைப் பண்வகை ; புனர்பூசம் ; மிருகசீரிடநாள் ; கவறாட்டத்து வழங்கும் ஒரு குழூஉக்குறி ; பெண் ; குழந்தை ; பதினாறு அகவைக் குட்பட்ட பெண் ; சிவசத்தி ; மீன்வகை . |
|
|
|